மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

" பகலெல்லாம் பசித்திருந்து "


"  மனிதன்  தறிகெட்டுப் போகாமல்  "
 ==========================================================

நீரை  ஆதாரமாகக்கொண்டது  "  "இரத்தம் "
இரத்தத்தை ஏற்றம் செய்யக்கூடிய  இதயம் அமையப் பெற்ற
இரத்தமும் ,சதையுமாக உள்ள    எந்த ஒரு ஜீவராசி யும்
உண்ணாமல் ,பருகாமல் உயிர் வாழ்வதில்லை

உன்னதமிக்க மனித வாழ்வியல் தத்துவத்தை வகுத்த இறைவன்
கண்ணியமிக்க  மாதமாம்  ரமளானில்  மாண்புக்குரிய  நோன்பை
மனித குலத்திற்கு விதியாக்கி அதன் மூலம்  பசியை உணரச்செய்து
உள்ளத்தில்  ஈகையை  மலரச்செய்து  ஏழை  எளிய மற்றும்
வறுமையிலும் வாய்திறந்து கேளா வறியவர்களை கண்டறிந்து
இதயம் குளிர  ஈந்து மகிழ வகைசெய்யும் புனிதமிக்க மாதம்
ராமலானாகும் !

மனித உடல்கூறு  பற்றிய  மருத்துவம்  ஏற்றுக்கொள்ளக்கூடிய
பல   அற்புதத்தை   நோன்பானது  நோன்பாளியின்  உடலில்
ஏற்ப்படுத்துகிறது ! 
எவர் ஒருவர்   ரமளானின்  மாதத்தை  அடைகின்றாரோ
அவர்  அப்படியே  அதில் பொருந்திக் கொள்ள வேண்டும்

கல் உடைப்போர் ,மூட்டை சுமப்போர் ,பாரவண்டி இழுப்போர் ,
மரம் ஏறுவோர், மலை ஏறுவோர் ,சுரங்கம்  தோண்டுவோர் ,
சாலைத் தொழிலாளி ,  கட்டிடத்தொழிலாளி , வியாபாரி  என 

எந்த  நிலையிளிலும்  அதற்க்குள்  இருந்தே  நோன்பை 
நோற்க  வேண்டும்       கால  நிர்ணயப்படி
உண்ணாமல் , பருகாமல் , தீயதை 
பேசாமல் , கேளாமல் , பாராமல்

இரவெல்லாம்   விழித்திருந்து   இறைவனைத் தொழுது ,
பகலெல்லாம்   பசித்திருந்து  தொடர்  நோன்பை  பேணுகின்ற
நோன்பாளியின்   உடலில் 
இயற்கையாக  இரசாயன  மாற்றம்  ஏற்ப்பட்டு
முற்றிலுமாக  இரத்தம்  புதுப்பிக்கப்படுகிறது !

மனிதன்  தரிகேட்டுப் போகாமல்  
தரமிக்க  வாழ்வுக்கான தத்துவத்தை
பறை சாற்றுகின்ற   பொருள்பொதிந்த , அருள்நிறைந்த ,
புனிதமிக்க   ரமலானை  வரவேற்று   
நோன்பிருந்து  இறைவனின்  அருட் பொருத்தத்  தைப்  பெறுவோமாக
வஸ்ஸலாம்   

                                >>>> இவன்   > பிறைத்தமிழன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக