மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 27 ஆகஸ்ட், 2011

" ஈகை நிறைந்த இதயத்தால் "


ஓசை  மிகு  உலகிலே     
ஆசை  நிறை  மனிதனின்  

மாறா என்றும்   உறவுகள்     
மறக்க  வொன்னா  நினைவுடன்  

மாநபியின்  வழியினில் 
மகத்துவமிக்க  நோன்பினால்  
      
வானவர்கள்  சோபனம்  
வந்திறங்கும்   இரவது  
                                                           
                                      
வாய்க்கப்பெற்ற   மாதமாம்
வண்ணமிகு  ரமளானும்

வந்ததுபோல்  சென்றதே 
வல்லோனின்   கொடை  யதே 
                       
மாநபியின்   வழியிலே  
மகோன்னத   மா   மறையினால் 

மனிதன்   பெற்ற   படிப் பிணை
மா  நிலமெங்கும்  நிலைக்கவே

ஈகை  நிறைந்த   இதயத்தால் 
                                              ஈந்து  சேவை செய்யவதில்                                                                              
இகம்  சிறக்க   வேண்டுமாய் 
இறையோனை  வேண்டினேன்  
                                                                                                              
முகமன்   கூறி   முதலிலே
முழு மையான  மனதுடனே


அருளாளன்    கருணையினால்
அகம்   மகிழ்ந்த   நிலையிலே 

ஆனந்தக்   களிப்பிலே
அரவணைத்து  அன்பொழுக 

அனைவருக்கும்   உறைத்திடுவோம்
அழகிய  பெருநாள்    வாழ்த்  ததை
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
பிறைத்தமிழனின்   பிரியம்    நிறைந்த 
நோன்புப் பெருநாள்  வாழ்த்துக்கள் !
-------------------------------------------------------------------
இவன்   >>  >>  பிறைத்தமிழன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக