மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

பிறரை வீழ்த்தச்செயும் சூழ்ச்சி

"
       "  முன்கோபி  "

 பிறரை வீழ்த்தச்செயும்  சூழ்ச்சி ,
  பிறகொருநாள்  உனக்கெதிராய்   சொல்லும் 
   சாட்சி !

   உனக்கு ஏற்ப்பட்ட சறுக்கல்
   உன் தலையில் எழுதப்பட்ட  கிறுக்கல்  என -
   எண்ணாமல் பெருக்கல் எனும்  கணக்குப்போட்டு
   வாழ்ந்து காட்டு !
  
   தரித்திரத்திலும்  சரித்திரம்  படைப்பவனே ,
   பவித்திரத்தின்  பாத்திரதாரி  !

   நன்மைக்கு    தீமை  எதிரி ,
   நமக்கு    நாமே    எதிரி  !

   சொல்   புத்தி ,  சுய  புத்தி  ,   
   இரண்டும்   இல்லாத  முன்கோபி ,
   இருபக்கக்  கூரான  கத்திக்கு  ஒப்பானவன்  !

   வஞ்சகனின்    வாயைப்போல் ,
   கொடுமையான  ஆயுதம்  வேறேதும்  இல்லை  !

   உன்னைவிட   திறமைசாலி  என   பிறரை    நினை ,
   பிறரைவிட    திறமைசாலி   ஆவதற்கு  நீ  முனை !

   உன்னைபுரிந்து  பிறர்   வாழ்வதை  விட ,
   பிறரைப்   புரிந்து   நீ   வாழ்வாயாக !

   நயம்  இல்லாதார்   வாழ்வில்  ஜெயம்  கொள்ளார் ,
   ஜெயம்  கொள்ளாதார்  பயம்   உள்ளர் !

   ஆரூடம்    நாடாதோர்   வாழ்வில் ,
   யாரோடும்   பகையில்லை !

   கண்ணை   மூடிக்கொண்டு   உலகைப்   பார் ,
   தன்னை  மீறிய   சக்திக்கு   இறைவன்   என்றே
   பொருள்படும் !

   உழைப்பாய்    நிறைவாக !.
   உண்பாய்    அளவாக !!.      அமையும் ,
   உன் வாழ்க்கை   சிறப்பாக ! ! !.....
============================================
                                                 >இவன்  >>>>> பிறைத்தமிழன் <<<<<<                                  

1 கருத்து:

  1. தொழுகை உங்களுக்கே. தொழுகை உங்களுக்கே. தொழுகை உங்களுக்கே.

    தொழுகை

    ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி (ஒழு) செய்யும் பொழுதும் உட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா?

    கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தம்.

    ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால்.

    அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.

    இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.

    ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?

    தொழுகை சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை , உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது.

    ஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும் இறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா ?

    உலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.

    இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.

    உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற உண்மை உணர்ந்தீரா?

    தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,

    நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?

    உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பலன் பெற்று விடுகிறார்.

    பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து

    "இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.

    இதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.

    தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் "பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."

    இதையெல்லாம் படித்துவிட்டு தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.

    தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.

    நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை.

    தொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.

    தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.

    வாஞ்சையுடன் வாஞ்சூர்.

    .

    பதிலளிநீக்கு