ஏழை வீட்டில் எரியும் அடுப்பில்
எந்நாளும் வறுமை
நாளைப் பொழுதை நகர்த்திச் செல்லும்
நம்பிக்கையில் வெறுமை !
வீரம் பேசி பொழுதை கழிக்கும்
கோழை மனதில் கொண்டதால் பெருமை,
வெற்றி வந்து சேர்த்தாலும்
விலகாது வறுமை !
இக்கால இசைக்கு இலக்கியம் வடிக்கும் கவி
எடுத்துச் சொல்லும் இலக்கணச் சிறுமை !
பொங்கும் பொருள் தங்கும் அவர்
தமிழ் சிந்தைக்கோ பெரும் வறுமை !
கலி கால சிறப்பை காட்சி வடிக்கும்
திரையுலகச் சிற்ப்பிகள் தேர்ந்தெடுக்கும் புதுமை ,
அதில் நாகரீக மங்கையின் நளினமற்ற
நாட்டியம் செல்லும் வறுமை !
வெள்ளித்திரையின் வெளிச்சம் பட
ஒட்டுத்துணிக்குள் உடலை திணித்து
துட்டுக்கென தொலைத்திட தயங்கா
வெட்கக் கேட்டுக்கு விலையாகும் பெண்மை !
ஆத்திரம் பேசும் அதிகார வர்க்கம்
சேர்த்து வைத்த செல்வக்குவியல்
நீர்த்துப் போகும் நிமிடம் வந்தால்
நினைத்துப் பார் நிலைக்குமா ?இந்த பகுமை !
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முட்டாள்கள் கூட பணம் சன்பாதிக்கலாம் ! அதை ,
ஒரு அறிவாளியால்தான் காப்பாற்ற முடியும் இருந்தும்
எந்த ஒரு அறிவாளியும் இறுதியில் தன்னோடு
எடுத்துச்செல்ல முடியவே முடியாது எனவே,
மனிதா உன் தேவைக்கு மீறி சேர்த்து வைக்காதே !
ஏழையை குறிவைத்து உன் சேவையை துவங்கு
அப்போது உன் பிறவிக்கான பொருள் புரியும் !!!......
=============================================================
இவன் >>> பிறைத்தமிழன் <<<
முட்டாள்கள் கூட பணம் சன்பாதிக்கலாம் ! அதை ,
ஒரு அறிவாளியால்தான் காப்பாற்ற முடியும் இருந்தும்
எந்த ஒரு அறிவாளியும் இறுதியில் தன்னோடு
எடுத்துச்செல்ல முடியவே முடியாது எனவே,
மனிதா உன் தேவைக்கு மீறி சேர்த்து வைக்காதே !
ஏழையை குறிவைத்து உன் சேவையை துவங்கு
அப்போது உன் பிறவிக்கான பொருள் புரியும் !!!......
=============================================================
இவன் >>> பிறைத்தமிழன் <<<
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக