மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 16 டிசம்பர், 2020

"2021"

இயற்க்கைபேரிடர் அற்ற இரண்டாயிரத்து இருபத்தொன்று இனிதே துவங்கட்டும் இகத்தில் உள்ள எல்லா உயிர்களும் இன்புற்று வாழட்டும்! எல்லை கடந்து ஒளிரும் எம் இந்திய தேசத்துள் மனிதம் சிதைக்கினற மதவெறி ஒழியட்டும்! மக்கள்நலம் மறந்தோரின் மகுடங்கள் வீழட்டும்! பணத்தாசை பிடித்த பச்சோந்தி அரசியலை பாருலகோர் கூடி பாழ்பட சபிக்கட்டும்! இனியாவது வக்கிரம் இல்லாதவர்கமாய் வாழ மனிதர்கள் பழகட்டும்! ========================= பிறைத்தமிழன்:

வெள்ளி, 19 ஜூன், 2020


நிச்சயமாக நான் என்னுடைய
காரியங்கள் யாவையும்,
என்னையும், உங்களையும் 
படைத்து பாதுகாப்போனாகிய 
அல்லாஹ்விடமே
ஒப்படைத்துவிட்டேன்

ஒவ்வொரு ஜீவராசிகளின்
முன் உச்சிக்குடும்மியும்  அவனே பிடித்துக்கொண்டிருக்கிறான்
நிச்சயமாக என் இறைவன்(நீதியின்)
நேரான வழியில் இருக்கிறான்.
அல் குர்ஆன்(11:56)
================================
பிறைத்தமிழன்

செவ்வாய், 9 ஜூன், 2020

"வெப்பம்"




வெப்பம் சிறுக(வி)தை

கதவு,ஜன்னல்,கட்டில்,மெத்தை,
கண்ணாடி,சுவர் என தொட்ட
இடமெல்லாம் சுட்டது வெப்பம்
மீதமின்றி மின்விசிறி கூட்டி

அரை மனதாய் அறைக்கதவு சாத்தி
படுக்கறையில் பக்கத்தில் கணவன்
கை வைத்ததும் கணவன் மார்பில்
கண்அயர்ந்து கனவில் நுழைந்தேன்

நிலம் தேடும் நேர் உச்சி வெயில்
வெயில் தோற்க்கும் விரிந்த மரங்கள்
விரிந்தமர நிழல்களுக்கு உள்ளே
மனதைக் கவரும் மழைநீர்ச் சுணை

என்னுருவை எனக்கே காட்டும்
தேனையொத்த தெளிந்தநீர் கண்ணாடி
ஆடை களைத்து பாதம் பதித்தேன்
பாதரசம்போல் பகட்டாய் மின்னி

மேனியெங்கும் குளிர் மின்னல் பாய
மன்டியிட்டு மார்பு நனைத்தேன்
இலவம் பஞ்சுபோல் இதயக்கூட்டை
இலேசாய் தூக்கி என்னுடல் மிதந்தன

மொட்டு விரிந்த ஒற்றைத் தாமரை
சற்றுத் தொலைவில் சாய்ந்த நிலையில்
கொட்டிப் பரவிய கூலாங் கல்லில்
பட்டும் படாமல் என்கால் தரையில்

தொட்டும் தொடாநீர் தாமரை இலையில்
எட்டிப் பறிக்க இருகை நீட்டி
ஈரத்தில் அமிழா இறகது போலே
எத்தனித்த என் தோள் தட்டி

ஒட்டு மொத்த உலக இன்பம்
உனக்குச் சொந்தம், உனக்கே சொந்தம்
என என்காதருகே யாரோ சொல்ல
கனவு களைந்ததன் காரனம் யார்..?

கரண்டு போச்சு காத்துவர கதவைதிற
சொன்னது கணவர் சோகம் ததும்ப
காசில்லாது வந்த கனவும்
கரண்டில்லாது களைந்து போச்சே

வெப்பம் தீர வேண்டினேன் இறைவனை
=============================
இவன்:பிறைத்தமிழன்.





புதன், 29 ஏப்ரல், 2020


"கங்கை"
இப்படி இருந்த கங்கை நதி 
தற்போதுஊரடங்கின் பயனாக 
40% விழுக்காடுமாசு 
குறைந்துள்ளதாம் காரணம் 
எறியூட்ட வசதியில்லா 
பிரேதங்கள் அகோரிகளுக்காக அரைகுறையாய்
எரிபட்ட சடலங்கள்,சாம்பல்கள்
பக்தர்களின் யாத்திரையில்
பயன்படுத்தப்பட்ட கழிவுகள் 
இல்லாதது போன்ற பல 
காரணங்களால் கங்கையின் 
மாசு குறைந்துள்ளதாம்

வியாழன், 23 ஏப்ரல், 2020

"கிருமி யுத்தம்"

கொரோனாவே கொஞ்சம் நில்
யிர்கள்   உன்னால் 
உருவப்பட்டு   உடல்கள் 
கொத்துக் கொத்தாய்
உதிர்ந்துகொண்டே இருக்கிறது

வாண்டு முதல் வல்லரசுவறை
அகில உலகமே அஞ்சி நடுங்கி
கண்னுக்கு தெரியா கிருமி உன்னை
கட்டுப்டுத்தவே  "முயல்கிறது


கொங்சம் விட்டுக் கொடுத்து
விலகித்தான் போ கொரோனாவே
இல்லையேல் பட்டினிச் சாவின்
பலி, பாவம் உன்னைச் சேரும்

எங்களை வீட்டுக்குள் முடக்கிய
நாட்டுத்தலைவர்களுக்கு பசிக்காது
ஏனென்றால் அவரகள் இந்த
நா(ஓ)ட்டுக்காவே வாழ்பவர்கள்

பசியுள்ள  பாமரன் விடியலுக்கு
விளக்கேற்றி விழித்திருக்கிறோம்,
"கை" தட்டியும்  காத்திருக்கிறோம்
கருணையாளன் கிருபை வேண்டி.
===============================
இவன்:பிறைத்தமிழன்.

வியாழன், 16 ஏப்ரல், 2020

"கிருமி யுத்தம்"


பிரபஞ்சத்தையே பெயர்த்து
பெருங்கேடுகளை விதைக்க
இயற்க்கை சிதைக்கும்-இந்த
மனித வர்கத்தின் மீது

உலகலாவிய கிருமியுத்தம் 

யுத்தத்தை சித்தப்படுத்திய
அண்ட சராசரங்களின் அதிபதி
அனைத்துலக ரட்சகனே

மனித நேயமுள்ள மா
மனிதர்களின் பொருட்டால்
கொரோனாவை ஒழித்து
அதன் கோரப்பசி தனித்து

உயிர் உருகாமல் தடுத்து

உலகோரின் கண்ணீர் துடைத்து
மனிதகுலம் காத்தருள் புரிவாய்
மாட்சிமை மிகுந்த இறைவா
=============================
இவன்:பிறைத்தமிழன்.

ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

"சீதனம்"




பணத்திற்காக திருமணம்
செய்துகொண்டவனைப் போல்
ஒரு அயோக்கியனும் இல்லை ,

காதலுக்காக கல்யாணம்
செய்துகொண்டவனைப்போல்
ஒரு முட்டாளும் இல்லை ,

பணத்தையும் ,பகட்டையும்
நேசிப்பவன்-
செல்வத்தையும் ,செருக்கையுமே
தன் செல்ல மகளுக்கு
சீதனமாய் தருவான்....
==========================
இவன்:பிறைத்தமிழன் ..

சனி, 4 ஏப்ரல், 2020

"நீதி"


மனிதன் எப்பொழுதும்
தான் செய்த தவறுகளுக்கு
வக்கீலாகவும்,
பிறர் செய்த தவறுகளுக்கு
நீதிபதியாகவும்
இருக்கவே விரும்புகிறான்
எல்லாம் தெரிந்த மனிதனுக்கு
ஒன்று மட்டும் தெறியவில்லை
ஆம்-அவன் மனிதனாய்
வாழமட்டும் தெரியவில்லை..
============================
இவன்:பிறைத்தமிழன்.

"இழி நிலை"


இயற்கைச்சீற்றத்தின்
எத்தகைய கோபமும்
ஏழைகளின் மீதுதான்
விதியாக்கப்பட்டுள்ளது
நோயும்,பேயும்
நோகாமல் காசுபார்க்கும்
மருத்துவமும், மருத்துவனும்
இதில் ஏகபோக அங்கம்
இத்தனை இழிநிலைகளை
கடந்து  இயல்பாக
இந்ததேசத்தில் வாழவேண்டி
விழித்தே இருக்கிறேன்
விடியல்தான் வரவேயில்லை.
=========================
இவன்:பிறைத்தமிழன்.


வெள்ளி, 3 ஏப்ரல், 2020

"வறுமை"

வறுமையின் 
கொடுமைபற்றி
வாழ்ந்து உணர்ந்தவன்
வயிறுபுடைக்க 
உண்ணமாட்டான்
தான் உண்ணும் 
இன்னொரு பிடி 
உணவையும் 
பிறருக்கென ஈந்து
பேரின்பம் கொள்வான்....
====================
இவன்:பிறைத்தமிழன்.

புதன், 1 ஏப்ரல், 2020

"நம்பிக்கை"

"நம்பிக்கை"

நேசிப்பவர்கள் 
எல்லோரும்  நம்மோடு 
நிலையாக தங்கிவிட்டால்
நினைவின் மொழியும்,
பிரிவின் வலியும் தெரியாமலே போய்விடும்-எனவே
நம்பிக்கை நிறைந்த ஒருவர்
யாரிடமும் மண்டியிடுவதில்லை
எவரிடத்தும் 
கையேந்துவதும் இல்லை
தன்னைப் படைத்த
புகழுக்கு உரிய வல்லமை மிக்க
அல்லாஹ்வைத் தவிர....
===========================
இவன்:பிறைத்தமிழன்.

செவ்வாய், 31 மார்ச், 2020

"துரோகம்"


எனக்கு இழைக்கப்பட்ட 
துரோகங்களை எப்படியாவது 
மறக்க முயல்கிறேன்
இருந்தபோதும் யாரெல்லாம் 
என்னை தங்களின் நினைவில் சுமக்கின்றனரோ அவர்களை 
என் நெஞ்சத்தில்
நிஜமாக சுமக்கின்றேன்
புகழுக்குறியவனின் 
பொருத்தம் நாடியவனாக...
==============================
இவன்:பிறைத்தமிழன்...

ஞாயிறு, 29 மார்ச், 2020

"கொரோனா "


இயற்கை எனும் இன்பத்தை
மீதமின்றி மேய்ந்துவிட்ட
மனித மிருகத்தின்
மா பெறும் ஆற்றல்,
அவனின் கண்டுபிடிப்பு,

வியத்தகு விஞ்ஞானம்,
வின்முட்டிய தொழில் நுட்பம்,
விரிவான பாதுகாப்பு
எல்லாம் இப்போது எங்கே?

கொலைவெறியுடன்                கோரத்தாண்டவமாடும்
கொள்ளைநோய் கொரோனா
சொல்லும் சேதிதான் என்ன?

நிரந்தரமில்லா உயிர்களும்,
உயிரினங்களும் போலவே.....
அழிந்துவிட்ட இனத்தின் பட்டியலில்
இனி மனிதனுமா ? அய்யகோ.......

இறைவா எதிர் வரும் ரமளானுடைய
புனிதத்தின் பொருட்டால்
பூமி எங்கிலும் உள்ள மனித வர்கத்தை
காத்தருள் புரிவாய் ரஹ்மானே....
================================
இவன்;பிறைத்தமிழன்...