மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 31 ஜூலை, 2011

" பிதற்றல்கள் "

 கனவுகளையும் , கவிதைகளையும் 
சுகமாய்ச்  சுமந்து  கொண்டிருந்த  நான்

இளங்காலைப் பொழுதுகளின்
இனிய   கீதங்களை

என்  செவி  நனைத்த  இனிமையோடு
நான்  சேர்ந்திசையாய்  கேட்டபோது

சின்னச் சின்ன  புன்னகைகளையும் ,
பெரிய  பெரிய   கோளங்களையும்,

 என்  சிந்தை  நிறை
சேர்த்து வைத்திருக்கும் நான்

மரபென்றும் ,புதிதென்றும்
மனசுக்கு  சிறகு  கட்டி

கண்ணீரை ,   முத்துக்களாய்   மாற்றி ,
கடல்நீரை   கையுக்குள்   அடக்கி ,

கனவுகளை   காட்சிப் படுத்தி ,
கவிதைகள்    ஆயிரம்   வடித்தேன்

என்ன பயன் ?
இவையெல்லாம் 

பின்னுக்கு  தள்ள  வேண்டிய
பிதற்றல்க லாம் !          ஆம்          
 

இலக்கிய   எஜமானர்கள் ,
எழுத்துலக    பிரம்மாக்கள் ,

சிந்தனையில்   சில்லறை  பார்த்து,
சிகரத்தை தொட்டவர்கள்   கண்  முன்னே

ஏழை  கவிஞனின்  எழுத்துக்கள்
எப்போதும்   பிதற்றல்களே ....!!!
___________________________________________
     இவன் >>>  பிறைத்தமிழன்  <<<

வியாழன், 28 ஜூலை, 2011

படிப்பை பயனுரச்செய் மனிதா !!!....


வளமான காலத்தில்  நண்பர்கள்
நம்மைத் தெரிந்து கொள்கிறார்கள் !

வருமைக்காலத்தில்  நண்பர்களை
நாம் தெரிந்து கொள்கிறோம் ! !

எளிய வாழ்வைப்பற்றி
பேசுவதற்கும் ,எழுதுவதற்கும் யாரும்
தயங்குவதில்லை !

எளியமுறையில் வாழ்வதற்கு மட்டும் 
தயங்குகிறோம் !

 மறுப்பதர்க்காகவோ ,  குழப்புவதர்க்காகவோ
படிக்காதே !

நம்புவதர்க்காகவோ , தலையாட்டுவதர்க்காகவோ
படிக்காதே !

உரையாற்றுவதர்க்காகவோ , உபதேசம் செய்யவோ
படிக்காதே !

சிந்திப்பதற்கும் , சீர்தூக்கிப்  பார்க்கவுமே
படிப்பை பயனுரச்செய்  மனிதா !!!....
__________________________________________________________________
இவன் >>  பிறைத்தமிழன் <<<

திங்கள், 25 ஜூலை, 2011

" நிலை யற்ற மாந்தருக்கு "


~~~~இறை வணக்கம் ~~~~
எப்படி  உணவளிக்க 
இறைவனால் பொறுப்பேற்றுக் கொள்ளப்படாத 
எந்த  ஒரு   ஜீவராசியும்  இவ்வுலகில்  இல்லையோ,
அப்படியே  யாதொன்றும்  அவனன்றி  நிகழ்வதுமில்லை ,
யாராலும்   நிகழ்த்தப் படுவதுமில்லை !

சூரியக் குடும்பத்தில்  அங்கம்  வகிக்கின்ற  புவி  உள்ளிட்
அனைத்து  கோள்களையும் படைத்து  பரிபாலிக்கின்ற இறைவனே   
அவற்றில்  ஜீவனற்ற வைகளையும் ,
ஜீவனுள்ள வைகளையும் ,
ஜீவ  ஆதாரங்களையும் ,
அதற்க்கான  கால  நிர்ணயங்களையும்
வகுத்தவனாக  இருக்கின்றான்  !

இவை அணைத்தும் காலவரையின்றி
இறைவனை துதித்துக்கொண்டுதான் இருக்கிறது
மனிதனுக்கான  வணக்கம் மட்டும் நேரம் குறிப்பிடப்பட்டு
வரைமுறை படுத்தப்பட்ட வணக்கமாக
"தொழுகை"  அவன் மீது   விதியாக்கப் பட்டுள்ளது !

ஆறாம்  அறிவு  அமையப்பற்ற  மனிதன்  அதைக்கொண்டு
ஆற்றலின்  உச்சத்தை  தொட்டுவிட்ட போதும்
நிச்சயமாக  மனிதன்  ஒரு  படைப்பினம்தான் !

தவிர  படைப்பாளி   அல்ல
இந்த  உண்மையை  மறுக்க வில்லை  என்றாலும்
மறந்த  நிலையில்  மாச்சரியங்களில்
புதைந்து   கொண்டிருக்கிறான்  மனிதன்
எவன்   ஒருவன்  தன்னை  படைத்தவனை  உளப்பூர்வமாக தொழுகின்றானோ
அந்த  தொழுகையானது   அவனை   மானக்கேடான 
விசயங்களில்  இருந்து  முற்றிலுமாக   பாதுகாத்து 
வரைமுறைப்  படுத்தப்பட்ட  வாழ்கையை   வழங்குகிறது !

இவ்வுலகில்  அழகாக  தெரியப்பெற்ற  சிற்றின்பங்களை
மிக  அருகாக  உணர்ந்து  அனுபவிக்கின்ற   மனிதன்
இறைவனையும் , அவன்  கட்டளைகளையும் , மறுமை பற்றிய     எச்சரிக்கைகளையும்  இறைதூதர்  மூலம்   செய்தியாக  பெற்றவை
மிகத்தொலைவாகவும் ,  பழைமையாகவும்  தோன்றுமாயின்
மனித   ஆயுளின்   வரம்பை   மாற்றியமைக்க
முயர்ச்சிக்கின்றான்  என்றே  பொருளாகும்  
இருந்தும்
அவற்றில்  முறையாக   தோற்றுக்கொண்டே 
இருக்கின்றான்  மனிதன் !

இறைவனின்  மனிதத்  தலையீடு  இல்லாத
இயற்கைக்  கட்டமைப்புகள்  யாவும் 
 படைத்தவனின்  கட்டளைப்படி
இயங்குவதால்  அதன்  இயக்கத்திலேயே  
 இறைவணக்கத்தை  எடுத்து  இயம்பி
படைத்தவனை  தொழும்  பண்பை  பறைசாற்றுகிறது ! 

முன்னோர் ,  மூதாதயர் , 
உற்றார் , உறவினர் , உடன்பிறந்தோர் ,
தனைப் பெற்றோர் , தான்  பெற்றோர்  என
எத்தனையோ  உறவுகள்   கண்முன்னே  தன்னை  விட்டு  பிரிந்து
சென்று கொண்டிருப்பதை ஒவ் வொரு  நாளும்  சந்தித்துக்கொண்டிருக்கும்   மனிதன்
சிந்திக்க  மறந்தவை  என்ன ?  

  உலகில்   நிலை யற்ற  மாந்தருக்கு  நிகரற்ற  மறை  தந்த
இணையற்ற  இறைவனை  இன்றே   தொழுவாய்   மனிதா 
தரம் கொண்ட  மனிதன்   தறி கெட்டுப்  போகாமல், 
  தரணியில்     வாழவும் ,
சிரம்  தாழ்த்தி   தொழும்  சீரிய வணக்கத்தை 
சிரமேர்க்  கொள்வாயாக !
==========================================
:  இவன் >>  >> பிறைத்தமிழன்

ஞாயிறு, 3 ஜூலை, 2011

இமைகள் வடிக்குதே இரத்தத்தை கண்ணீராய் .......

                                                                                                                                                            
இமை வடிக்கும்   இரத்தக் கண்ணீர்
செல்வத்தில் சிறந்தவர்கள்
உள்ளத்தைச்  சுருக்கி ஒளித்தே வைப்பார்கள்

பள்ளத்தில் விழுந்துவிட்டால்
பக்கத்து உறவுகளை  பார்த்தே சிரிப்பார்கள்
வாழ்ந்து   கெட்டவர்கள்  வாழ்வில் நொந்தவர்கள்
வளமாய்  இருக்கயிலே  வந்து குவிந்தவர்கள்

கூட்டமாய் கூடி  கும்மாளமிட்டவர்கள் 
ஓட்டமாய் ஓடி  ஒழிந்தே கொண்டார்கள்
இவர்கள்  அற்றகுளத்து அருநீர்ப் பறவைகள்

செல்வத்தில்  சிறந்தவர்கள்  சிரிப்பைக்காட்டி
வெறுப்பை உமில்வதர்க்கே
உள்ளத்தை  சுருக்கி  ஒளித்தே வைப்பார்கள்

எதிர்க்கும்  திராணியை  இழந்து  நிற்கின்ற
ஏழை உறவுகளை எட்டி உதைத்து ஏளனமே செய்வார்கள்
சொத்தும் ,சுகமும் தான்   சொந்தத்தின் அடையாளமோ  ?
பணமும்  பகட்டும் தான்  பாசத்தின்  எல்லைகளோ  ?

கோடிகளில்   புரண்டால்  தான்  கூடவே   பிறந்தவளாம்
தாலியே  மிஞ்சாத  தரித்திரம்  உள்ள  மகள்  உனக்கு
போலியாய்  வாழுகின்ற உடன் பிறந்தவர்கள்  வேனுமோடி ?

                                                                                                                                                         
வலுவிலாராயினும்  வையகம்  போற்றி  !
இழிவுடையோ ராயினும் இனத்தார் போற்றி  ! !
வாழ்வாங்கு வாழ்வாரே  வசதியை  காட்டி ! ! !
                          தவிர                                           
ஈனமே  இருந்திடினும் இன்பமே  கண்டிடுவார் !
இப்படிப் பட்டவரே  இகம் போற்றும்  உறவினராம் ! !
                                என்று                                            
இமைகள்  வடிக்குதே  இரத்தத்தை  கண்ணீராய்
.......
                                                                                                                                                        >>  இவன்   >>  "பிறைத்தமிழன் "