கனவுகளையும் , கவிதைகளையும்
சுகமாய்ச் சுமந்து கொண்டிருந்த நான்
இளங்காலைப் பொழுதுகளின்
இனிய கீதங்களை
என் செவி நனைத்த இனிமையோடு
நான் சேர்ந்திசையாய் கேட்டபோது
சின்னச் சின்ன புன்னகைகளையும் ,
பெரிய பெரிய கோளங்களையும்,
என் சிந்தை நிறை
சேர்த்து வைத்திருக்கும் நான்
மரபென்றும் ,புதிதென்றும்
மனசுக்கு சிறகு கட்டி
கண்ணீரை , முத்துக்களாய் மாற்றி ,
கடல்நீரை கையுக்குள் அடக்கி ,
கனவுகளை காட்சிப் படுத்தி ,
கவிதைகள் ஆயிரம் வடித்தேன்
என்ன பயன் ?
இவையெல்லாம்
பின்னுக்கு தள்ள வேண்டிய
பிதற்றல்க லாம் ! ஆம்
இலக்கிய எஜமானர்கள் ,
எழுத்துலக பிரம்மாக்கள் ,
சிந்தனையில் சில்லறை பார்த்து,
சிகரத்தை தொட்டவர்கள் கண் முன்னே
ஏழை கவிஞனின் எழுத்துக்கள்
எப்போதும் பிதற்றல்களே ....!!!
___________________________________________
இவன் >>> பிறைத்தமிழன் <<<
இளங்காலைப் பொழுதுகளின்
இனிய கீதங்களை
என் செவி நனைத்த இனிமையோடு
நான் சேர்ந்திசையாய் கேட்டபோது
சின்னச் சின்ன புன்னகைகளையும் ,
பெரிய பெரிய கோளங்களையும்,
என் சிந்தை நிறை
சேர்த்து வைத்திருக்கும் நான்
மரபென்றும் ,புதிதென்றும்
மனசுக்கு சிறகு கட்டி
கண்ணீரை , முத்துக்களாய் மாற்றி ,
கடல்நீரை கையுக்குள் அடக்கி ,
கனவுகளை காட்சிப் படுத்தி ,
கவிதைகள் ஆயிரம் வடித்தேன்
என்ன பயன் ?
இவையெல்லாம்
பின்னுக்கு தள்ள வேண்டிய
பிதற்றல்க லாம் ! ஆம்
இலக்கிய எஜமானர்கள் ,
எழுத்துலக பிரம்மாக்கள் ,
சிந்தனையில் சில்லறை பார்த்து,
சிகரத்தை தொட்டவர்கள் கண் முன்னே
ஏழை கவிஞனின் எழுத்துக்கள்
எப்போதும் பிதற்றல்களே ....!!!
___________________________________________
இவன் >>> பிறைத்தமிழன் <<<