மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 3 மார்ச், 2012

நட்பென்றும் , கற்ப் பென்றும் ,


   தூசி ,  புகை   துளியுமின்றி , ஒரு 
   துயில்  கலைந்த  தூரத்து கிராமம்  !
                                                ...........அங்கே 
   பனித்துளி     போர்த்திய 
   பசும்புல்       நுனி   !
                                        .....................அதில்  
   பரவசம்    பொங்க  
   பாதம்  பதித்தேன்  !

  ஒவ்வ   மறுத்த 
   உள்ளுருப்  பனைத்தும் ,

   சில்லென்று   சிலிர்த்து  ,
   சேதி  யொன்றைச் சொன்னதே !
                                          ......................ஆம் 

நகரத்து    வீதிகளில்   ,    
நான் நடக்கும் போதெல்லாம்  !     

தகிக்கின்ற  சாலைகள் ,    
தார்ப்  பாலை  போலன்றோ !     

அல்லும்  ,   பகலும்  ,    
அனல்  காற்று  வீச !     

உள்ளும் ,  புறமும்   ,    
உருகிய   மேனி  !     

 சொல்லும் , செயலும்   ,    
சோர்ந்தே  போக !     

வாழும்    வாழ்வில்   ,    
வசந்தங்கள்  யாவும் !     

வந்து  , வந்து  போகின்ற  ,    
வண்ணக்கனவே  !    
...............என     

சில்லென்று   சிலிர்த்த மேனி   ,   
சேதி  யொன்றை  சொன்னதே  !    

   சொர்க்கமாய்    நகரத்தைச்  சமைத்து   ,    
சுலபமாய்   நரகத்தில்   வாழ்வதை   விட  !    

சுமைகளில்  இருக்கின்ற  ,    
சோகத்தை  தாங்கி  !    
கடமைகள்   நிறைவேற்றும் ,    
கனவுகள்   வேண்டி !    
     
   கானகமும்  ,காடுகளும்     
விதை  இட்டு   மிதிக்கின்ற ,    
தடமாகும்  !      
............. அதில்   ,      


நட்பென்றும்   ,  கற்ப்  பென்றும்  ,     

விளைகின்ற  நாற்றுக்கு      
  இடுகின்ற   உரமாகும்  !     
.............அதுவே      
   
தேவையும்   , தேடுதலும்  ,    
கிடைக்கப்     பெறுகின்ற      
உயர்   கிராமத்துக்      
களமாகும்  ..........!!!      
 
---------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இவன்   >>>   பிறைத்தமிழன்