> " சில்லரைப்பசி "
> பிணம் தின்னும் கழுகுகளும் தன்
> இனம் தின்னா திருக்கக் கூடும் !
> பணம் பண்ணும் பாருலகோர்
> பசி என்றடங் கிடுமோ ?
> இதயம் இருன்டிருக்க,
> இதழ்கள் வறண்டிருக்க,
> செயற்கைச் சிரிப்பாலே
> செருக் கங்கே மறைந்திருக்க !
> வஞ்சம் வளர்ப்பதிலே
> வல்லமை பெற்றோரின்
> சில்லரைப் பசி
> சிறிதேனும் குறையாதோ ?
> கல்லறைப் பயணமும்
> காசொடுதான் போவாரோ ?
> பணத்தை பையில் வைத்து ,
> பலபேர் கையில் வைத்து !
> உழைப்பே ஒன்றுமில்லா ,
> தொழிலொன்று தேர்தெடுத்து !
> வருமைச் சுமை கொண்டு ,
> வருவோரை இனம் கண்டு !
> தேவைகளை தீர்த்துவைக்கும் ,
> தெய்வப்பிறவி தானென
> வரவுமட்டும் கணக்கிட்டு .
> வட்டிஎன்ற பெயருமிட்டு !
> சொத்துகளை குவித்திடுவார் ,
> செத்தபின்பும் சீரழிய !
> கட்டுகின்ற கூத்துகளும் ,
> கொட்டுகின்ற மேளங்களும் !
> பச்சை ஓலையிலே ,
> படுக்கையினை செய்த பின்னே !
> பட்டுச் சரிகை என ,
> பகட்டான ஆடைகளும் !
> விட்டுப் பிரிந்திடுவார் ,
> வேறு வழி இல்லையென !
> ஒட்டுத் துணிகூட ,
> ஒருவருக்கும் சொந்தமில்லை !
> உலகைவிட்டுச் செல்லும்முன் ,
> உணர்ந்துகொள் மானிடனே !
> உயிர் குடிக்கும் வட்டியினை,
> உண்டு நீ வாழாதே !
> பிணம் தின்னும் கழுகு என்ற ,
> பெயரேதும் வாங்காதே !!!
===============================================
இது ஒரு
வட்டியில் மூழ்கி வாழ்வை தொலைத்தவனின்
வயிற்றெரிச்சல் ....................................................!
===============================================
>> இவன் :~ பிறைத்தமிழன் .