புலரும் பொழுதின் பூபாளமும் ,
தெளிர்ந்த நீரின் தெள்லோட்டமும் ,
குளிர்ந்த காற்றின் குதியாட்டமும் ,
விரிகின்றது காட்சியாய் கண்ணெதிரே !
இசைக்கின்றது , மெல்லிசையாய் காதருகே !!
என்னவளோ இதற்க்கு எதிர்மறை..!
சிந்தையை செந் தனலாக்கி,
சிரிப்பதுவை செவ் விதழில் காட்டி!
வண்ணம் தோய்த்த வெண்ணை மீது ,
கூர் தீட்டிய கொடுவாள் பாய்த்து !
அவள் வாழ்த்தும் மொழி வசை போல் இருக்கும்!
என்னை வீழ்த்தும் விழியோ வேல் போலிருக்கும் !
பூசும் மஞ்சள் அந்தி வெயிலாய் ,
சூடும் குங்குமச் சுடு நெருப்பாய் ,
வாடும் என்னை வன்மை தகிப் பாள் !
பள்ளியறை காணாத மெல்லிறகு மேனியவள் ,
மகரந்தம் சிதறாத " மல்லிகைப்பூ" கன்னியவள் !
புதிதாய் புலரும் பொழுதிலிருந்தே ,
புறப்பட்டு வருகிற பொற்க்கதிர் போலே !
அமைதி காக்கும் ஆழ்கடல் மேலே ,
ஆர்ப்பரிக்கும் அலைகளி னாலே ,
ஆடியடங்கும் நுரைகளைப் போலே
என்றாவது ஒருநாள் சாந்தமுருவாள்
நிச்சயம் அதிலே நான் சாந்தி பெறுவேன் !.. ============================================இவன் >> > பிறைத்தமிழன்