மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 21 டிசம்பர், 2014


                     " இனிவரும் சந்ததிக்கு "
==========================================================================
  மாறிக்கொண்டே இருக்கும்  சீதோசன  நிலைகள் 
  இயல்பாக    மீண்டுகொண்டே  இருக்கும
  பூமியின் சுழற்சி அதை 
  நிகழ்த்திக்கொண்டே  இருக்கும்
  இது இயற்கை

   இந்த இயற்கை நிகழ்வுகள்   பிறழ்வது ஏன் ?  
   ஏன்  என்றால்  மனிதன்
   செயற்கையானவைகளை  செப்பனிடுவதற்கு
   இயற்கையை  சிதைகின்றான்

   அப்படி இயற்கை சிதைகபடும் போது
   அது அதன் சீற்றத்தை வெளிபடுத்தும்
   அங்கே இயல்பு நிலைகளில்
   ஏற்படுகின்ற  மற்றம்
   தவிர்க்க முடியாது  போகும்

    உயிரிணங்கள் வாழ்வதற்கு ஏற்ற
    தட்ப வெட்ப நிலைகளை  உள்ளடக்கிய 
    பூமியை படைத்த இறைவன் 
    
    மனிதர்கள்  தங்கள் விருப்பம்போல் 
    ஓர் இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு  
    சென்று வருவதற்கு ஏதுவாக 
    பூமியை தட்டையாகவும் படைத்து

    அவற்றில் பயமின்றி சுற்றித்தெரிந்து 
    இளைப்பாறி இன்பம்பெற 
    கற்களால் ஆன மலைகளைக்கொண்டு 
    இந்தபூமியை நிலை நிறுத்தினான் இறைவன் 

    இதன் கட்டமைப்பு நீரை ஆதாரமாக கொண்டு ,
    மரபுசாரா நெருப்பை வேப்பமாகக் கொண்டு ,
    கணிமங்களாலும் ,தாதுக்களாலும் ,
    உரம் ஊட்டப்பட்டு 
    
   பாறைகளாலும் ,படிமங்களாலும் ,
   பல அடுக்குகளாக   கடினமாக்கப்பட்டு 
   காந்ததாலும் ,கசிவு இல்லாத்திரவத்தாலும் ,
   புவியின்பால் ஈர்க்கின்ற விசை இருத்தப்பட்டு 

   சுட்டெரிக்கும் சூரியனாலும் ,
   சுழன்றடிக்கும் வாயுக்களாலும் ,
   திரண்டு குளிரும் மேகத்தாலும் ,
   வறண்ட பூமியை வாழ்விக்கும் மழையினாலும் ,

   உயிர்களுக்கெல்லாம் உன்னதக்கொடையாக ,
   உவந்தளித்த கருணைமிக்க
   இறைவனை , ஒரு   கணமும் மறவாமல், 
   இதயத்தைச் சுருக்காமல் ,
   இயற்கையை ,
   இனிமேலும் சிதைக்காமல் ,
   இனிவரும் சந்ததிக்கு 
   இப்படியே விட்டுச்செல்வோம் அவர்களுக்கு 
   இதுவே முழு முதல் சொத்தாக 
=======================================================================
      >>>இவன் :>>>பிறைத்தமிழன் .
    
           " வேண்டும் "
==========================================================================
                   நிம்மதியாய்  உறங்கிட  வேண்டும்!
    நிலம் வெளுக்குமுன்   விழிக்கவேண்டும் !
               நிறைவாய் உழைத்திட  வேண்டும்! 
   நேரத்திற்கு பசித்திட  வேண்டும் !                                                                                       
    நேர்மையானதையே புசித்திடவேண்டும் !                                                                   
    நிழல்களை வெறுத்திட வேண்டும் !
                        நிஜத்தையே ரசிக்க வேண்டும் !                                                                     
      பார்வையை பதித்திட வேண்டும் !                                                                                  
                             பாதையை பழகிட வேண்டும் !
    படைத்த ஒருவனையே வணங்கி ,
    வாழ்க்கை பயணத்தை தொடறந்திட  வேண்டும் !
========================================================================
                             >>> இவன் :>>> பிறைத்தமிழன் .

ஞாயிறு, 14 டிசம்பர், 2014


               " அழகு "                                                                  
====================================
     வெற்றியும் ,தோழ்வியும் ,
                          வீரனுக்கு அழகு !

    லாபமும் ,நஷ்டமும் ,
                  வியாபாரிக்கு அழகு !

     இல்லற  சுகங்கள் ,
                           இல்லாத போது !

    இன்பமும் ,துன்பமும் ,
                        இரு வேறு அழகு !

    கொஞ்சலும் ,கெஞ்சலும் ,
                       கூடி வரும் போது !

   கோபமும் ,தாபமும் ,
                              கூடவே  அழகு!

    உறவும் , உரிமையும் ,
                  உண்டு எனும் போது !

    மறப்பதும் , மன்னிப்பதும் ,
                     மனிதனுக்கு அழகு !

    இரவும் ,பகலும் ,
                        எஇகத்தின்  அழகு!

    இடியும் ,மின்னலும் ,
                     மழைக்கு      அழகு !

    எதுகையும் ,மோனையும் ,
                      கவிதைக்கு அழகு !

    வடித்தலும் ,வரைதலும் ,
                  வார்த்தைக்கு அழகு !

    வியர்வையும் ,களைப்பும் ,
                      வேலைக்கு அழகு !

    விரைந்து கிடைக்கின்ற கூலி ,
                        விரும்பிய அழகு !

    பரந்து   விரிந்த,
                            பா  ருலகு,அதை !

    பளிச்சிட வைக்கின்ற ,
                         பகலவன்   அழகு !

    இரவில் பொழிகின்ற ,
                                       பனி அழகு !

   அந்த பனித்துளி போர்த்திய,
                          புல்வெளி  அழகு !

   இளங்காலை   இசைக்கின்ற ,
                       பூ பாளமும் அழகு !

   கலையில்       உதித்தெழும்,
                           கதிரவன்  அழகு !

   கடும்பகலில்    கிடைக்கின்ற ,
                     கம்மங்கூல்   அழகு !

   மாலையில் பூக்கின்ற ,
                           மல்லிகை அழகு !

    மனைவி சூடிடும் போது ,
   அதன் மனமோ மயக்கும்
                                                 அழகு !
    இரவில்     உலவும் ,
                             நிலவும்   அழகு !

     அந்த நிலவில்  மலர்ந்திடும் ,
                அல்லிப்  பூக்கள் அழகு !
=================================================
              இவன் >>பிறைத்தமிழன் .


ஞாயிறு, 7 டிசம்பர், 2014







 மிக அழகு
 
      நீதி செய்தல் அழகு ,
                     அதை தலைவர்கள் 
     செய்தல்  மிக அழகு !

     தயாளம் செய்தல் அழகு ,
                   அதை தனவந்தர்கள் 
     செய்தல் மிக அழகு !

     தாவாபு செய்தல் அழகு ,
                     அதை வாலிபர்கள் 
     செய்தல் மிக அழகு !

     தக்வா பேணுதல் அழகு ,
                 அதை       ஆலிம்கள்
     பேணுதல் மிக அழகு !

     நாணம் கொள்ளுதல் அழகு ,
                    அதை பெண்களிடம் 
      காண்பது மிக அழகு !

      தாயிடம் வெளிப்படும் ,
              அன்பே தரணிபோற்றும்
      தன்னிகரற்ற அழகு !!!
========================================================================
   >>> இவன் ;>>>பிறைத்தமிழன் .

 கண்ணீர் 
==================
விழியை மூடும்போது 
விடுதலையாகும் நீர்  !

வேதனையில் கண்ணீர் 
வெற்றியில்  அது  
ஆனந்தக்  கண்ணீர்  !! 
==============================================
             >>> இவன் ;>>>>> பிறைத்தமிழன் .

வியாழன், 13 பிப்ரவரி, 2014

           
                         ஆடயில் அழகைத்தேடதே '
பிறைத்தமிழன்


 -------------------------------------------------------------------------------------------------
                                                             
             சுருங்கச்சொல் , அதை 
                                                        சுவை படச்  சொல் !

            பசிக்கின்றவை  , புசிக்கின்றவரை
                                               தொடர்வதே  தேடுதல் !!

           கல்லை கடவுளாக்கின் !
                                      கடவுள் கல்ளேயாகும் !!

           கஸ்டங்களை எளிதாய் உள்வாங்கு !
               கடமைகளை புதிதாய் தான் துவங்கு !!

           இல்லைசொல் இல்லாமை பழகு !

                                எள்ளி நகையாடுதல்  விலகு !!

            உண்மைக்கும் உனக்கும் ,
                                          இடைவெளி வேண்டாம் !!

           உறவுக்கும் உனக்கும் ,
                                             நெருக்கடி வேண்டாம் !!

            உள்ளம் ஒருமுறை சுருங்கின் ,
                     உள்ளங்கை ஒருபோதும் விரியா !!

            ஆடையில்  அழகை 
தேடாதே !
            உடையால் உள்ளத்தை நொறுக்காதே !!

             முகத்திற்கு நேராக புகழாதே !
                       முது கிற்குப் பின்னால் இகழாதே !!

                 புல்லை வேண்டாத மாடுகள் உண்டு !
       புகழை வேண்டாத மனிதர்களே இல்லை !!

        சென்ற காலத்தை பற்றியே சிந்திப்பவன் ,
                        எதிர்காலத்தை இழந்துவிடுவான் !!

        தரித்திரத்திலும் சரித்திரம் படைப்பவனே ,
                                      பவித்திரத்தின் பாத்திரதாரி !!
--------------------------------------------------------------------------------------------------
           >>>   இவன் ; >  பிறைத்தமிழன் .

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

                 


                 " பொறுமை "
 --------------------------------------------------------------------------
        பொறுமையை போர்வையாக்கி ,
        பொறாமையை புறந்தள்ளி !

        பெருமையை பிறரிடம் கண்டு ,
        பெரு  வாழ்வை பேனிக்கொள்வாய் !!
------------------------------------------------------------------------------
                                 >>> இவன் > பிறைத்தமிழன் .

வியாழன், 6 பிப்ரவரி, 2014


     " நல்ல மழை "
மக்கள்நலம் பேனமறந்த
மத்தர்களும் குடிக்கிற கஞ்சிய
கொட்டிக் கவிழ்க்கிற
 கொடுங்கோலரும் ஆளும்நாட்டில் 
       ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ முன்பு   பஞ்சம் போக      
         நல்ல மழை  வேண்டினேன் ,     
                                    பின்பு   தஞ்சம் புக                               
   வழியின்றி தவிக்கின்றேன் !

            காரணம் குடை கிழிந்து ,
                      கூரை பிய்ந்து ,           
       குடிசை   மூழ்க , கொட்டித்தீர்த்த ,
        கோபக்கார  மழையினால் ,

      தஞ்சம் புக வழியின்றி தவிக்கிறேன் !!!
 ------------------------------------------------------------------------------------
பிரியமுடன் பிறைத்தமிழன் 

                   >>>>  இவன்  >>> பிறைத்தமிழன்  ....!!!