மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

" வெள்ளை உடை வியாபாரிகள் "



கட்டுக் கட்டாய்  கருப்புகளை
 கண்டபடி   குவித்தவர்கள் !
சட்டத்தின்    ஓட்டைக் குள்ளே
சலவையிட்டு   வெளுத்தவர்கள்!
இனி வெளியே வருவார்கள்
வெள்ளை  உடை  வியாபாரிகள் !
சாதிக் கடிவாளம் சண்டியரும் கையில் வைத்து !
மோதிப்  பாப்பார்கள் முன்னணி தொகுதி கேட்டு !
வெற்றிக் கணக்கிட்டு விழுக்காடு தருவார்கள் !
ஆண்டுக்  கொரு  அணிமாறி
அவுசாரியை   மிஞ்சுவார்கள்
செல்லும்   இடமெல்லாம் சின்னத்திரை
 செய்தியில் சிரிப்பாய்  சிரிப்பார்கள்  
 கூடிப்பேசி  கொள்ளையடிக்கும்  பகுதியை 
கூறு  போட்டு   பிரிப்பார்கள்  !
குவித்து வைத்த  கருப்புப்   பணத்தை
களமிறக்கி  விதைப்பார்கள் !
வாக்குகள் விற்கப்படும் வாசகம் கண்டதுபோல்
கொள்கை முழக்கமிட்டு கும்பிட்டு  வருவார்கள் !  
எச்சரிக்கை உள்ளவர்கள்  ஏமாரவா மாட்டார்கள ?
 நச்சரிப்பு  தாங்காமல்  நமக்கென்ன வந்த தென்று ,  
நல்ல விலை போவார்கள் !
 =======================================
எப்போது    மாறுமோ ?  இன்றைய { இந்திய }
தேர்தலின்   எக்கச்சக்க   வக்கணைகள்
இவன் >   >>  பிறைத்தமிழன்

வியாழன், 10 பிப்ரவரி, 2011

" புது மழை "

        
          

          புழுதி    மண்      மீது            விழுந்த
          புத்தம் " புது   மழை "     நீர்த்துளியே!

          உன்    பொன்    மாரிப்  பொலிவால்
          பொன்   விளைவித்த  புன்  சிரிப்பே!!

          கால    இடுக்கின்கால்   நீ    கலைந்திடின்
          விலைபோகா  உலகு  வெறும்  இருட்டே!!!
          =======================================                                
                      இவன் ..>>>பிறைத்தமிழன்

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

மண்ணோடு பெண் மகவை,

  *பெண் *
==========
உள்ளத்தால் வதைபட்டு 
உடலால் சிதைபட்டு

உருவாக்கும் சந்ததியை 
பெண்ணென்று கண்டுவிட்டால்

பேரிழப்பு  வந்ததென்று
பெருங் கவலை கொண்டவர்கள் 

சிசுக் கொலை செய்துவிடும் 
சேதிகளும்  கேட்டீரோ ? அன்று 

மண்ணோடு  பெண் மகவை,
மகிழ்வோடு புதைத்திட்ட !

மாபாவச் செயல்  தடுத்த ,
மாநபிகள் சொல்  விளங்கி 

நவீனம் கண்டவர்கள் ,
நாகரீகம் கொண்டவர்கள் 

நானிலம் போற்றுகின்ற ,
நல்லுணர்வு பெற்றனரா ?  இன்று 
___________________================_________________
ஆணுக்குப் பெண் நிகரில்லை !
ஆதலால் ,
பெண் ஒன்றும்    அடிமையில்லை !!

வடிவம்     மாறுதலால் ,
 வனப்புகல்  உடையவள்   " பெண் "

வலிமை குறை வதனால்,
 வாஞ்சைக்கு உரியவள் " பெண் "

மானுடம் செளிக்க வல்ல,
 மா தவ மங்கையவள் " பெண் "

வெறும் போகப் பொருளல்ல  " பெண் "
போற்றிப் *பொன்* படுத்து மனிதா =நின் !!!
==================================================================
இவன் >>>பிறைத்தமிழன்

சனி, 5 பிப்ரவரி, 2011

கரும்பளிங்கிக் கல்லறையில்,

==============================================================
  கரும்பளிங்கிக் கல்லறையில்
  இளஞ்சிவப்பு மலர்    பொதித்து !
               தீட்டப்பட்ட வாசகங்கள்

             தோற்றமும் ,      மறைவும் ,,
               தொடரும் கவிதையுடன் !

       உன்மீது  நான் கொண்ட காதல்
                                      பொய்யென்று
மண்மீது  காதல் நீ கொண்டாயோ ?

      என்னை மேகமாய்  சூழ்ந்தவள் ,                              
                                           இதயத்தில்
      மின்னலாய்  பாய்ந்தவள் .........!
  
          இல்லாதபோது   எனை ஏன் ?
    மரணம்    கொள்ளாது போனது ?
=============================================================        
                இவன்  >  ~:   பிறைத்தமிழன்  :~

வியாழன், 3 பிப்ரவரி, 2011

இருக்கு ஆனா இல்லை


அடைமழை !  அதனால்
வீட்டைச்சுற்றி  வெள்ளக்காடு
குடிக்க நீரின்றி !
குடியானவன்  கூரைநோக்கி
இருக்கு , ஆனா இல்லை !
மாசற்ற  நீர் !
தூசற்ற காற்று !!
கலப்பற்ற உணவு !!!
இருக்கு , ஆனா இல்லை ...
                      இவன் >> பிறைத்தமிழன்

புதன், 2 பிப்ரவரி, 2011

எருகும் சாம்பலும் ஏளைக்குடிசையில்




    கடலில்  பிறந்து  காற்றால்  தவழ்ந்து
   கரையில்  உரசும்  அலைகளைப் போல
   கவிதைகள்  நூறு  வடித்திடல்  வேண்டும் 
   அகல விரிந்து  பகலவன்  மறைக்கும்
   ஆல   நிழலில் அலுப்புத் தீர
   அயர்ந்து உறங்கிடல்  வேண்டும்
   மங்கள  நிலவில்  மங்கிய  ஒளியில்
   மங்கையின்  மடியில்  மலரும்  நினைவில்
   மழலை  வடிவில்  தவழ்திடல்  வேண்டும் 
   இரவின்  முடிவில்  எழுந்து  அமர்ந்தால்
   என்னைச்சுற்றி  பனித்துளி  படர்ந்த
   பச்சைப் புல்வெளி பளிச்சிடல் வேண்டும்
   தெளிர்ந்த  நீரில்  தெரியும்  தரையில்
   துள்ளிக்குதிக்கும் வெள்ளி மீனை கையில் அள்ளி
   மெல்லத்தமிழ்  சொல்லித்  தந்திடல்  வேண்டும்
   புழுதியற்ற  பொட்டக்காட்டில்  பூத்துக்குலுங்கும்
   புங்கை  மரத்தருகே  நெருஞ்சிச் செடியில்
   நித்தம்  ஒரு  குறிஞ்சிப்பூ  பூத்திடல்  வேண்டும்
   எள்ளும்  புண்ணாக்கும்  எருகும்  சாம்பலும்
   ஏழை  குடிசையிலே  பொன்னும்  மணியாக
   பொருள்மாறி  பொங்கிப்  பெருகிடல்  வேண்டும்
   இது நடக்குமா .>ஆயிரம்  >???????????????????????விகள்
            சிந்தனைக்கு  சிறகுகட்டி       
           செந்தமிழ்  மெருகூட்டி        
          வாழ்க்கையை   வண்ணம்தீட்டி
          வளரும்    தலைமுறை                 
          வாழவேண்டும்  நேர் கோட்டில் ============================இவன் >>>  பிறைத்தமிழன்