மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 29 ஜூலை, 2015


கனவுகளின் நாயகன்
================
அணுவை  மெருகூட்டி,
அக்கினி  சிறகு பூட்டி!
அகிலத்தை  அதிர வைக்க,
விண்வெளி  தேரோட்டிய,
விந்தை  மனிதரே!

படகோட்டி மகனாக
பாரினில் நீ பிறந்து,
உச்ச பதவிகளை அடைந்தாலும்
உத்தமனாய் தான்  வாழ்ந்து
பாரதத்தின் தலை நிமிர்த்த
பாருலகம்   வியக்குகின்ற
உண்ணத  கனவுதனை
உள்ளமெல்லாம்  விதைத்தவரே !

விண்ணை  நீ  அடைந்தாலும் ,
மண்ணை  உயிர்ப்பிக்கும்
மழையாய்  பிறப்பாயோ ?  எனும்
இரங்கல்  கவிதையினை  எங்கள்
கரங்கள்  வடித்தாலும் ,
இதயம்  வலிக்கிறதே கண்ணீரை,
இமைகள் வடிக்கிறதே"!!!!!!!!!!!!
===========================
>>>இவன்: பிறைத்தமிழன்;<<<



செவ்வாய், 7 ஜூலை, 2015

வாழ்த்து

 "இதயம் திறந்து"
  ============================
           இறைவனுடைய           சாந்தியும்,சமாதானமும் 
     எங்கெங்கும் நிறைந்தபடி !
     கண்ணியமிக்க  இரவது
     காண கிடைக்கின்ற,
     புண்ணியமிகு ரமளானின்
     பூரிப்பில் திளைத்தபடி !
     உழைக்கும் கைகளை,
     உயர்த்தி பிடித்தபடி !
     ஈகை திருநாளில் ,
    இதயம் திறந்தபடி!
    ஒருகோடி உவகைகள் 
     உள்ளத்தில் நிறைத்தபடி !
    ஈருலக ரட்சகனாம் ,
   எண்ணுடய இறைவனை
   இறைஞ்சி  கேட்டபடி !
இகத்தோர் யாவரையும்
பிறைத்தமிழன் வாழ்த்துகிறேன்
  பேதமைகள் அற்றபடி !!!!!!!!!