மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 31 டிசம்பர், 2015

"புத்தாண்டு"

new year 2016 க்கான பட முடிவு
தினசரி கிழித்ததனால் தினசரியும் தீர்ந்தது
இன்னொரு வருடத்தின் இனிய முகவரியாய்
                                                    ஜனவரியும் பிறந்தது
இயற்கையும் இயற்றலும் தன்  எல்லையை மீறாது
இயங்கும்  நாள் வரை எவர்க்கும்
                                                       தொல்லையே வாராது
புதிதாய் கட்டமைக்க   பூகோளம் தெரியாமல்
எளிதாய் இனிமைபெற   இயற்கை சிதைக்காமல்

மதத்தின் பெயராலே மற்றோரை வதைக்காமல்
மனித வக்கிரத்தை மண்தோண்டி புதைப்போமே

பிறப்பொக்கும் உயிர்க்கெல்லாம் பிரியத்தை பங்கிட்டு
பிறக்கின்ற புத்தாண்டில் பிறைத்தமிழன் வாழ்த்தோடு

பிரித்தாளும் சக்திகளின் பிடரியை முறித்திடுவோம்
எகத்தாள குரல்வளையை எண்ணி அறுத்தெறிவோம்

இந்திய ஒருமைப்பாட்டை என்றும் காத்திடுவோம்
இன்பத் தமிழினை ஏற்றம் பெறச்செய்திடுவோம்
==================================================
                                >>>;  இவன் பிறைத்தமிழன் .

வெள்ளி, 11 டிசம்பர், 2015

" இயற்கை", சீற்றம்

                                                               
இயற்கையும் இயற்றலும் எல்லை கடப்பது
========================================
மண் தோண்டி   கல் வெட்டி
மலை போல   மாடி பல கட்டி
               சென்னை  நகரை  சிங்காரப்படுத்தி
               சீராய்  வாழ்தோம்   சில்லறை  ஈட்டி
 ஆறுதோரும்  நீறு   கேட்டோம்
அன்ன வயல்களை   கூறு போட்டோம்
                ஆறு குளமும்   அழிஞ்சு போச்சு
                காடு கழனியும்   காணாது போச்சு
மண் உழுதவன்   மனம் குளிர
தேடி வந்தது   தென்மேற்குப்  பருவம்
                மாடியில்  இருக்கும்  மமதையினாலே
                கூடி நாமும் கொல்லென்று சிரித்தோம்
சீறிப் பாய்ந்த     செம்பரம் பாக்கம்
வாரித்தள்ளி  வங்கக்கடல்  சேர்க்க
               சீரழிந்த தே  சென்னை  நகரம்
               மிரண்டு போகாதோர்  மிச்சமுண்டோ
 பேரிடர் தன்னை  பெரிதாய்  எண்ணி
பேராசை தன்னை  பின்னுக்குத் தள்ளி
               இயற்கைதனை  சிதைக்க மாட்டோம்
                என்றே   இணைந்து சபதம்  செய்வோம்
நாறிப் போன நரபிணம் தின்ன
நாயும் நரியும் வருவது போலே
                மாறி மாறி   மண்ணை ஆள
                கூடி வருமே கொள்ளைக் கூட்டம்
காறித் துப்ப  காத்து  இருப்போம்
போலி வாக்கை  புறந்தள்ளி  பார்ப்போம்
நமக்கு நாமே  துணையாய்  இருந்து   நல்ல
                "மனித  நேயத்தை" உயிராய் காப்போம்.
=======================================
                     >>>இவன் :பிறைத்தமிழன் .