தினசரி கிழித்ததினால்
தினசரியும் தீர்ந்தது -அதனால்
இன்னொரு வருடத்தின்
இனிய முகவரி யாய்
ஜனவரியும் பிறந்தது
ரணங்கள் மறைந்தாலும்
வடுக்கள் வலிக்கிறது
இனியாவது
புரட்சி செய்யாது
புதுமைகள் நிகழ
வறட்சி இல்லாத
வான் மழை பொழியட்டும்
வக்கிரங்கள் இல்லாத
வர்க்கமாய் வாழ
வர்க்கமாய் வாழ
மனிதர்கள் பழகட்டும்
என -
2013- ஐ வரவேற்கும்
பிறைத்தமிழனின் பிரியமான குரல்
பெருமையுடன் பதியட்டும்
பேதமைகள் ஒழியட்டும் ...!!!
===============================================
இவன் >>> பிறைத்தமிழன் <<<