மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 31 டிசம்பர், 2012


 தினசரி   கிழித்ததினால்  
தினசரியும்    தீர்ந்தது -அதனால்

இன்னொரு   வருடத்தின்
இனிய  முகவரி யாய்
ஜனவரியும்   பிறந்தது

ரணங்கள்   மறைந்தாலும்
வடுக்கள்  வலிக்கிறது
இனியாவது

புரட்சி    செய்யாது
புதுமைகள்   நிகழ

வறட்சி    இல்லாத
வான் மழை   பொழியட்டும்

   வக்கிரங்கள்   இல்லாத
   வர்க்கமாய்   வாழ    
   மனிதர்கள்  பழகட்டும்
 
என -
 2013- ஐ  வரவேற்கும்

 பிறைத்தமிழனின்   பிரியமான குரல்
பெருமையுடன்   பதியட்டும்
 பேதமைகள்    ஒழியட்டும் ...!!!
 
=============================================== 
 இவன் >>> பிறைத்தமிழன் <<<

சனி, 29 டிசம்பர், 2012

தங்கமழை பொழியாதோ ?



    விதைகள்    விசமாகி ,
    வெள்ள    எரிக்கஞ்செடி பயிறாகி !


    விளைச்சலும்  பொய்யாகி ,
    வீழ்ந்தானே   விவசாயி !

   ஆடியிலே    பட்டங்கண்டு .
    தேடியே     விதைவிதைத்து !

   ஆழ     உழுதானே ,
   அன்னாந்து   பார்த்தானே !

    அடைமழை  பெய்யவில்லை ,
    ஆறு குளம்  நிறையவில்லை !


    புயல் மழையும்  பொய்யாகி ,
    பூந்தோட்டம்   சருகாகி !


    புலம்பல்    பொருளாகி !
    போனானே (விவசாயி) பிணமாகி !


     காவிரியை  பூட்டிவைக்கும் ,
     கர்நாடக   சண்டியரே !

     நீதிக்கு   தலைவணங்கா ,
     நீ மட்டும்   நிரந்தரமா ?
     மார்கழி  விடை கொடுக்க ,
     மறுபடியும்  தை பிறக்க !

     மகிழ்ச்சியில்  மனங் குளிர ,
     மண் உழுதோர்  யா ரிருக்கார் !

     பூமிக்கு     நீர் வார்க்கும் ,
     புகழெல்லாம்  இறைவனுக்கே !- என

     பூரித்து   பொங்கல் வைக்க ,
     புதுநெல்லும் தான்  பறிக்க !

     தங்கமழை  பொழியாதோ ?
     தமிழகமும்   குளிராதோ   ?
     தாகமும்  தீராதோ  ?
     தமிழர் முகம்  மலராதோ  ?
================================
       இவன்       >>>   பிறைத்தமிழன்   <<<                                  

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

விசத்தை ருசி பார்த்து ,

     விசத்தை   ருசி  பார்த்து ,   
     விசமத்தை   வேரறுக்க  !   


   அளவில்லா   ஆனந்தம்  பெருக ,              
   அன்பினால் இரு கண்களும்   உருக !      

   என் சிந்தை யது  சிறக்க ,                               
   செந் தமிலே   நீ     வருக !                               

    உன்னை    ஊரு     செய் ,                                
    உன் மத்தர்    தம்  ஒழிக !                                

    புசத்தை    நே ருயர்த்தி ,                                
     ஒரு  புயலைத்தான்  கிளப்பி !                    

   விசத்தை   ருசி  பார்த்து ,                                
    விசமத்தை   வேரறுத்து !                               

    இனி  விடியல்  நமக்கென்று ,                       
    வெற்றியை     நிலை நாட்டு  !                      

   என்   தமிழே   உன் போலே ,                           
    அமுதும்        கிடையாது !                                

    மொழிப்போர்        அறியாது ,                          
     உனை   மோதி   அழிப்போர்                           

     கரம்  தரியாது     என் ,                                        
     அலுவல்   இனி   ஓயாது !                                 

    எம் மக்கள்    தோள்  மீது  ,                                
     எகத்தாளமாய்   தான் அமர்ந்து  !                  

 

     அவர்தம்   இன்பத்தில்                                        
    இருள்         தெளிக்க ,                                            

    இடுகின்ற  கட்டளையில் ,                                
 
  இறுமாப்பு     குறையாத !                                   

     எங்கள்   பகைவர்          யாரென்று ,               
    இனங்  கண்டே         வேரறுக்க !                       

    தமிழா   பொங்கிப்        புரையோடி ,              
    நமக்குள்ளே    நாறுகின்ற ,                               


    சாதிகள்    ஒழியட்டும் !                                       
    சமத்துவம்     பிறக்கட்டும் ! !                            

    சுட்டெரிக்கும்   சூரியனாய் ,                              
    சுய மரியாதை     ஒளிரட்டும் ...!                      

   ========================================   
           >>> இவன்   :   பிறைத்தமிழன்  <<<           
    =======================================    

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

                          தீரா  நோயும் , ஆறா  துயறும் !  
-------------------------------------------------------------------------------------
    >>  இது யாரையும்  புண்படுத்த என்னாத ,
       புண் பட்டவனின்  ( கற்பனை ). <<<
------------------------------
-------------------------------------------------------

  சீருடை  அணிந்த   சிறப்புக் கொள்ளையர் !
                                                        அவர்  வாழ்வில் ,


 காக்கியும் , வெள்ளையும்   கலந்த  கும்மாளம் !
                                                                        அதெற்கென ,


சிவப்புக்  கோட்டையில்   செதுக்கிய  சிம்மாசனம் !
                                                                 அங்கே நடப்பது ,


  ஆயுள் முழுதும்  அதிகாரப்  பிச்சை ! அதை ,
                                                                   செயலாக்க ,


  கடைத் தெருவெல்லாம்     கப்பம்   வசூல் !  
                                                                                இந்த ,
  

அலுவலுக் கென ,புதுக் காரிலும் ,வேனிலும்   
   
                                                     கடமை  ஊர்வலம் !

  வெள்ளைத் துணிகளின்  வெகுஜனக் கரைகள் , 
                      சொல்லைக் கேட்டு  சுறு சுறுப்பாகி !

   கொள்ளை   என்ற        கொள்கைக்காக , 
     இல்லை  வரம்பு    இவர்களுக் கென்றும் ! 

   தினமும்  தேரும் ,எக்கச் சக்க  எச்சைத் தீனி !    
                                                                                    அதை

   உண்டு   பெறுவார் ,  ஓர்  ஆயிரம்   சாபம் ! 
                                                                       அதனால் ,


    வயிறு முட்ட  வளர்ந்திடாதோ  வஞ்சப்  புற்று ? 
            இப்படி    சந்தி  சிரிக்க,   தன் சந்ததி  சிறக்க ,


     சேர்த்து  வைத்த     செல்வம்    தானே ,
                    தீரா  நோயும் , ஆறா  துயறும் !  


    இவர்   தா னன்றோ   சீருடையணிந்த ,
                            சிறப்புக் கொள்ளையர் .....!!!
=============================================================
        >>> இவன் : பிறைத்தமிழன்                                                    
==============================
===============================