நிலம் உழுது நெல் விதைத்து
அகம் மகிழ்ந்து அகிலம் வாழ ,
அறுவடைகள் செய்து தந்த உழவன் !
கால்நடை களோடு கடமை பேசி ,
வாய்கால் வெட்டி ,வரப்பு வெட்டி ,
நீர்பாய்ச்சி , இலக்கம் தவறா
ஏர் ஓட்டி , நாத்து நட்டு ,களை பறித்து ,
உரமிட்டு, மருந்தெளித்து ,
பருவம் பார்த்து கதிரறுத்து ,
கட்டு கட்டி , களம் சேர்த்து
காலமெல்லாம் கவிதையாய்
கலனி எங்கும் வளம் வந்த
உன்னதமிக்க உழவன் எங்கே ?
காணி நிலத்தையும் காசு பார்க்க
கல் ஊன்றி , நூல் பிடித்து ,மாடி கட்ட
தனை வளர்த்த தன்னலமற்ற பூமியை
தாரை வார்த்தான் உழவன் இங்கே... ஏன் ?
ஏன் என்ற கேள்விக்கு ஏற்றம் செய்யும்
ஏர் உழவன் பதில் ஒரு வேலை ஏற்ப்புடையதோ ?
ஆம்
ஏழை விவசாயி எத்தனை நாளைக்கு
எலிக்கறி தின்பான் ?
நான் உழைத்து , தான் விதைத்து
நல்ல பலனை நாடே உன்ன ,
கூன் விழுந்து , குடல் சிறுத்து ,
குப்புறத்தள்ளி என்னை
கூடி நின்று கொல்லென்று ,
சிரிக்குதே கொடும் வறுமை !
வெள்ளைத்துணி ,நல்லசோரும் ,
கடைத்தெருவில் கைவீசி
அகம் மகிழ்ந்து அகிலம் வாழ ,
அறுவடைகள் செய்து தந்த உழவன் !
கால்நடை களோடு கடமை பேசி ,
வாய்கால் வெட்டி ,வரப்பு வெட்டி ,
நீர்பாய்ச்சி , இலக்கம் தவறா
ஏர் ஓட்டி , நாத்து நட்டு ,களை பறித்து ,
உரமிட்டு, மருந்தெளித்து ,
பருவம் பார்த்து கதிரறுத்து ,
கட்டு கட்டி , களம் சேர்த்து
காலமெல்லாம் கவிதையாய்
கலனி எங்கும் வளம் வந்த
உன்னதமிக்க உழவன் எங்கே ?
காணி நிலத்தையும் காசு பார்க்க
கல் ஊன்றி , நூல் பிடித்து ,மாடி கட்ட
தனை வளர்த்த தன்னலமற்ற பூமியை
தாரை வார்த்தான் உழவன் இங்கே... ஏன் ?
ஏன் என்ற கேள்விக்கு ஏற்றம் செய்யும்
ஏர் உழவன் பதில் ஒரு வேலை ஏற்ப்புடையதோ ?
ஏழை விவசாயி எத்தனை நாளைக்கு
எலிக்கறி தின்பான் ?
நான் உழைத்து , தான் விதைத்து
நல்ல பலனை நாடே உன்ன ,
கூன் விழுந்து , குடல் சிறுத்து ,
குப்புறத்தள்ளி என்னை
கூடி நின்று கொல்லென்று ,
சிரிக்குதே கொடும் வறுமை !
வெள்ளைத்துணி ,நல்லசோரும் ,
கடைத்தெருவில் கைவீசி
கைபேசி சகிதமாய் நடக்க
எனக்கில்லையா ஆசை ?
வீடு கட்ட விளைநிலம் ,
விலைபேசி விற்க வேண்டிய தேவை
உழவன் சேற்றிலே கால் வைப்பது
உலகம் சோற்றிலே கை வைக்கவாம்
இது யார் போட்ட ஒப்பந்தம் ?
சேற்றை கழுவும் விவசாயி !
சேர்ந்து வைக்கும் ஒப்பாரி !!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எலிக்கறி உண்ணுவதை வழமையாக கொண்டவர்கள் தவிர
எந்த விவசாயும்வறுமை தாளாமல் எலிக்கறி உண்பதில்லை !
விவசாயிகளுக்கு எத்தனையோ சலுகைகளை
போட்டிபோட்டுக்கொண்டு வருகின்ற அரசுகள் செய்கிறது
நான்கு ரூபாய்க்கு நெல்லை வாங்கிக்கொண்டு
ஒரு ரூபாய்க்கு அறிசிதருகிறது இது சலுகையில்லையா ?
கடன்களையெல்லாம் ரத்து செய்கிறது
இது சலுகையில்லையா ?
மின்சாரம் இலவசமாக தருகிறது
இது சலுகையில்லையா ?
புல் மண்டி ,புதர் மண்டி கிடக்கும் குப்பை மேட்டையும்
ஏக்கர்களாய் கணக்கு காட்டி இயற்ர்க்கைப் பேரழிவு க்கான
அரசு தரும் பணத்தை விவசாயி எனும் போர்வையில்
வாங்குகிறாயே இது சலுகையில்லையா ?
விவசாயப் பொருள்களை குறைந்த விலையில் ,
சுலபத்தவணையில் தருகிறது இது சலுகையில்லையா ?
இப்படி எல்லா சலுகைகளையும் பெற்றுக்கொண்டு
பெரிய நகரங்களுக்கு அருகில் உள்ள விவசாயிகள்
வீடு கட்ட விளைநிலத்தை தாரைவார்த்துவிட்டு
தருகின்ற வியாக்கியானமோ
ஏழைவிவசாயி எத்தனை நாளைக்கு எலிக்கறி தின்பானாம்
இவர்கள் சலுகைக்காக சாதூர்யம் பேசும் சந்தர்ப்பவாதிகள் !
_______________________________________________________________________
உண்மை விவசாயி ,
உழவை தொழிலாக்கி ,
தன்னலம் கருதாது
உழைப்பை களமிறக்கி ,
விதையை பயிராக்கி ,
வியர்வை உரமிட்டு ,
விளைச்சளை பெருகின்றவனே
உன்னதமிக்க உண்மை விவசாயி !!!.....
இத்தகையோரின் உழவுக்கும் , தொழிலுக்கும் வந்தனை செய்வோம் !!!.
==============================================================
இவன் >> >>> பிறைத்தமிழன்
அஸ்ஸலாமு அழைக்கும்,
பதிலளிநீக்குபிறைத்தமிழன் அல்லது லண்டன் தீன் மின்னஞ்சலை காணவும்.
நன்றியுடன் காதர்