மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 6 நவம்பர், 2011

இரத்தமோ ,மாமிசமோ ,


பசி ,உறக்கம்  அற்றவனும் ,
பால்  பாகுபாடுகளுக்கு  
அப்பார்ப்பட்டவனும்
யாரையும்  பெறாத ,
யாராலும்  பெற்றெடுக்கப்  படாத  
தனித்தவனும் ,எத் தேவையும்  அற்றவனும் ,
எல்லோருடைய  தேவைகளையும்
பூர்த்தி  செய்பவனும்  ஆகிய 
எல்லாம்  வல்ல  அல்லாஹ்வுக்கு
நாம் அறுத்து  பலியிடும்  
பிராணியின்   இரத்தமோ ,
மாமிசமோ  சென்றடைவதுமில்லை ,
அதன் மீது  இறைவனுக்கு  
எத் தேவையுமில்லை ! 
இதன்மூலம்  மனிதனின் உள்ளம்  
தியாகத்தை  உணரவும் ,
தியாகங்கள்  செய்யவும் ,
தியாக  நாளை  நினைவு  கூறவுமே !
மீண்டும்  ஒருமுறை  இவ்வுலகம்  
கட்டமைக்கப்பட்டு  அதில்..மனித  இனம்  
தோற்றுவிக்கப்ப்படுமாயின்  அப்போதும்..
நிலைத்து  நிற்கும்  தியாகம்  
நிகழ்ந்த  நாள்  இன்று !இப்ராஹீம்  நபியின்  
கடினமிக்க   இச்செயலை ..
கருணை  மிக்க  இறைவனால்..
ஏற்றுக்கொள்ளப்பட்ட  நாள்  இன்று !
மனித  இனம்  உள்ள வரை  
மாறாது  நிலைத்திருக்கும் !
அளப்பரிய  தியாகத்தை  
நினைவு கூறும்  மக்களுக்கு ,
என்  இதயம்  கனிந்த  
தியாகத்திருநாள்  வாழ்த்துக்கள் !!!
--------------------------------------------------------------------------------------
இவன்  >>  >> பிறைத்தமிழன்