இயற்கைப் பேரிடர் அற்ற
இரண்டாயிரத்து பதினெட்டு
இனிதே துவங்கட்டும்
இகத்தில் உள்ள எல்லா உயிர்களும்
இன்புற்று வாழட்டும் !
எல்லை கடந்து ஒளிரும்
எம் இந்திய தேசத்துள்
மனிதம் சிதைக்கின்ற
மதவெறி ஒழியட்டும் !
மக்கள் நலம் மறந்தோரின்
மகுடங்கள் வீழட்டும் !
பணத்தாசை பிடித்த
பச்சோந்தி அரசியலை
பாருலகோர் கூடி பாழ்பட சபிக்கட்டும் !
புரட்சி செய்யாது புதுமைகள் நிகழ
வறட்சி இல்லாத
வான்மழை பொழியட்டும் !
இனியாவது வக்கிரம் இல்லாத
வர்க்கமாய் வாழ மனிதர்கள் பழகட்டும்!
புத்தாண்டே வருக, புதுப் பொலிவு தருக!
>>>:இவன்: பிரியமுடன் பிறைத்தமிழன்...