இயற்க்கைபேரிடர் அற்ற
இரண்டாயிரத்து
இருபத்தொன்று
இனிதே துவங்கட்டும்
இகத்தில் உள்ள
எல்லா உயிர்களும்
இன்புற்று வாழட்டும்!
எல்லை கடந்து ஒளிரும்
எம் இந்திய தேசத்துள்
மனிதம் சிதைக்கினற
மதவெறி ஒழியட்டும்!
மக்கள்நலம் மறந்தோரின்
மகுடங்கள் வீழட்டும்!
பணத்தாசை பிடித்த
பச்சோந்தி அரசியலை
பாருலகோர் கூடி
பாழ்பட சபிக்கட்டும்!
இனியாவது
வக்கிரம் இல்லாதவர்கமாய்
வாழ மனிதர்கள் பழகட்டும்!
=========================
பிறைத்தமிழன்: