மொத்தப் பக்கக்காட்சிகள்
செவ்வாய், 31 மார்ச், 2020
ஞாயிறு, 29 மார்ச், 2020
"கொரோனா "
இயற்கை எனும் இன்பத்தை
மீதமின்றி மேய்ந்துவிட்ட
மனித மிருகத்தின்
மா பெறும் ஆற்றல்,
அவனின் கண்டுபிடிப்பு,
வியத்தகு விஞ்ஞானம்,
வின்முட்டிய தொழில் நுட்பம்,
விரிவான பாதுகாப்பு
எல்லாம் இப்போது எங்கே?
கொலைவெறியுடன் கோரத்தாண்டவமாடும்
கொள்ளைநோய் கொரோனா
சொல்லும் சேதிதான் என்ன?
நிரந்தரமில்லா உயிர்களும்,
உயிரினங்களும் போலவே.....
அழிந்துவிட்ட இனத்தின் பட்டியலில்
இனி மனிதனுமா ? அய்யகோ.......
இறைவா எதிர் வரும் ரமளானுடைய
புனிதத்தின் பொருட்டால்
பூமி எங்கிலும் உள்ள மனித வர்கத்தை
காத்தருள் புரிவாய் ரஹ்மானே....
================================
இவன்;பிறைத்தமிழன்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)