ஆயுதம் அணிகலனாம் ,
அதிகாரம் கேடயமாம் !
வன்முறைக்கு வாழ்வளித்து ,
வழிய உயிர்பறிக்கும் ,
உன்மத்தர் வாழுகின்ற
ஊனமுற்ற தேசமடா !
நெற்றி வியர்வைதனை
நிலத்திலே சொட்டியவன்,
உழைத்த பணத்தினிலே
ஒருகவளம் உண்ணும் முன்னே ,
தட்டிப் பறித்திடுவார் ,
தறுதலை கூட்டமடா !
பாவப் பணம் பறிக்க
பாலகர் தமை கடத்தி ,
பேரங்கள் மிகப் பேசும்
பேடிகள் நிறைந்துவிட்ட ,
கோரப் பிடிக்குள்ளே
குமுறுகிற தேசமடா !
காவி உடை யணிந்து
கடவுளை சாட்சி வைத்து ,
காமப் பசி போக்க
கன்னியரை சீரழிக்கும் ,
புண்ணியர்கள் வாழுகின்ற
போக்கற்ற தேசமடா !
கூறுகெட்ட மக்களிடம்
கேடுகெட்ட பொருளை விற்க ,
நூறு கட்ட விளம்பரமும் ,
பேருக்கொரு இலவசமும் , அதில்
ஈறில்லை, பேனில்லை என்றுசொல்லி
எக்கச்சக்க கொல்லையடா !
முந்தாநாள் வந்தவர்கள்
முகவரி அற்றவர்கள் ,
முச்சந்தியில் நின்றுகொண்டு
முழக்கங்கள் இட்டவர்கள் ,
சாதிக்கொடி பிடித்து ,
சமூகம் சீரலிப்பாரடா !
ஆரம்பக் கல்வியிலே
அரங்கேறும் அகுதக் கொள்ளை ,
உயர் கல்விச் சாலையிலே
உச்சம் பெற்று போனதடா !
கொட்டிக் கொடுத்துவிட்டு ,
பட்டம்வரை படித்துவிட்டு ,
தட்டித் தடுமாறி
தள்ளாடி வரும்போது ,
குட்டிச்சுவரோரம்
கூடி நிற்கும் நண்பரடா !
சொந்த நாட்டினிலே ,
சுதந்திரமாய் ரோட்டினிலே ,
வேலை தேடும் வேலையினை
ஒரு வேலையாய் செய்யு கிற ,
வேலையில்லா வாலிபர்கள்
வேதனையில் வெட்டிவைத்த ,
இது
கல்வெட்டு காட்சியடா இந்த
கல்வெட்டை திறந்து வைத்த ,
பிறைத்தமிழன் சாட்சியடா !!!
========================================================================
இவன் >:: பிறைத்தமிழன்