மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

" அண்டை புறம்பேசி, ஆழக்குழி தோண்டி"


அண்டை   புறம்பேசி , ஆழக்குழி தோண்டி
====================================================
ஏன்   செய்தேனோ  தவறு ,
ஏகமாய்   சிதைந்ததே  என்   வாழ்வு !

எல்லாச் சுகங்களும்  எல்லையில்லா  இன்பத்தோடு
கரைபுரண்ட காலங்கள்  கரைந்து  சென்றதே    ஏன் ?
இது என்ன கனவா  ?

இதயமும் இடிந்தது போல்  எண்ணத்  தோனுதே  ஏன்  ?
இது என்ன    கதையா  ?

என்  கைகளாலேயே  நான்  தேடிய  தீவினையே யானாலும்
மன்னிக்க வொன்னா  மா  கொடுஞ்  செயலும் , மன்னகத் திருப்பின்
ஏகப் பெரியவனாம்   என்னுடைய  ரட்சகன்   இரக்கமுள்ள   நாயகனும்
எனை  மன்னிக்க   மாட்டானா  ?
அதற்குள் 
அண்டை   புறம்பேசி  ஆழக்குழி தோண்டி
புரட்டிப்     தள்ளி   பூரிப்பு  கொள்கிறதே
என்ன  செய்வது  எனக்கு  வாய்த்த  உறவுகள்  அப்படி
பிறர்  நிம்மதியையும் ,சந்தோசத்தையும் ,
நிர்மூல  மாக்கிடவே    கங்கணம்  கட்டி  காலத்தை  கழிப்பவர்கள்

பெருங்கவலை   தீர்க்கவல்ல   பிஞ்சுப்  பிள்ளைச்  செல்வங்கள் 
பேரன்புப்  பிரளயமாய்  புரண்டு  தவழ்ந்த    என்
நெஞ்சுக்குழிக்குள்  கொஞ்சம்  
 நஞ்சை  நனைக்க  நாள்தோறும்  தோனுதே

வஞ்சத்தால்   வாழ்த்துச்    சொல்லும்  வல்லூறு  கூட்டமாம் 
வழக்கமான  உறவுகளே   வலமும் , இடமும் ,  மிகவும்    வலுவாக
வாள் அது    போதா தென    அதனினும்     மிகக்  கொடிய 
நோவு   கொண்ட  உள்ளத்தில்    நாவு  கொண்டு  கீறி
நர மாமிசம்    உண்ணுதே   நானிலம்  தாங்கிடுமா  ?
 
தாயும் , எனைத்தாரம்  கொண்டவனும் , 
பிள்ளை ,  பேரக்  குழந்தைக்கும் ,
பிணியும் , பெரும்   பிணக்கும்   நீங்கி ,  பிரியத்தால் 
பெற்றோர் , பிறந்தோர் ,பிற றோடும் 
பேரானந்தம்   தான்   கொள்ள 
 மூழ்கிய   நிலையிலேயே    முழுப்  பொழுதும்    முடிந்திடுமோ ?
முன்னேறும்   பாதைதனை   முயன்று   நானடைய ,  எப்போது ? 
என்னை   நான்   முழுதாய்   காண்பேனோ  ?  
-------------------------------------------------------------------------------------------------------
முழுதாய்  கண்டேன் நான்    இது  முற்றிலும்  உண்மையே !!!
                                                       இவன்   >>>    > பிறைத்தமிழன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக