மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

காணிக்கையாக்குகிறேன்



           இகத்தோர்யாவருக்கும்                       
  1, ஓரறிவுள்ள  தாதுக்களுக்கும் ,

  2,ஈர றிவுள்ள  தாவரங்களுக்கும் , 

  3,மூன்றரிவுள்ள ஊர்வன்க்களுக்கும் ,

  4,நான்கறிவுள்ள  பறவைகளுக்கும் ,
               5,ஐந்தறிவு ள்ள மிருகங்களுக்கும்
   6, ஆரறிவுள்ள  மனிதர்களுக்கும் ,
  எவன்இறைவனோ.......!
  அவனையே துதித்தவனாக ......!
  இகத்தோர்  யாவர்க்கும் 
  இதயம் கனிந்த  ஈகைத்திருநாள் 
  வாழ்த்துக்களை                       
  காணிக்கை யாக்குகிறேன்...............!   ====================================================
                                       இவன் >>>  பிறைத்தமிழன்

சனி, 27 ஆகஸ்ட், 2011

" ஈகை நிறைந்த இதயத்தால் "


ஓசை  மிகு  உலகிலே     
ஆசை  நிறை  மனிதனின்  

மாறா என்றும்   உறவுகள்     
மறக்க  வொன்னா  நினைவுடன்  

மாநபியின்  வழியினில் 
மகத்துவமிக்க  நோன்பினால்  
      
வானவர்கள்  சோபனம்  
வந்திறங்கும்   இரவது  
                                                           
                                      
வாய்க்கப்பெற்ற   மாதமாம்
வண்ணமிகு  ரமளானும்

வந்ததுபோல்  சென்றதே 
வல்லோனின்   கொடை  யதே 
                       
மாநபியின்   வழியிலே  
மகோன்னத   மா   மறையினால் 

மனிதன்   பெற்ற   படிப் பிணை
மா  நிலமெங்கும்  நிலைக்கவே

ஈகை  நிறைந்த   இதயத்தால் 
                                              ஈந்து  சேவை செய்யவதில்                                                                              
இகம்  சிறக்க   வேண்டுமாய் 
இறையோனை  வேண்டினேன்  
                                                                                                              
முகமன்   கூறி   முதலிலே
முழு மையான  மனதுடனே


அருளாளன்    கருணையினால்
அகம்   மகிழ்ந்த   நிலையிலே 

ஆனந்தக்   களிப்பிலே
அரவணைத்து  அன்பொழுக 

அனைவருக்கும்   உறைத்திடுவோம்
அழகிய  பெருநாள்    வாழ்த்  ததை
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
பிறைத்தமிழனின்   பிரியம்    நிறைந்த 
நோன்புப் பெருநாள்  வாழ்த்துக்கள் !
-------------------------------------------------------------------
இவன்   >>  >>  பிறைத்தமிழன்

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

உழவன் சேற்றிலே கால் வைப்பது


நிலம் உழுது  நெல் விதைத்து 

அகம் மகிழ்ந்து  அகிலம்  வாழ ,
அறுவடைகள் செய்து தந்த   உழவன் !

கால்நடை களோடு  கடமை  பேசி ,
வாய்கால்  வெட்டி ,வரப்பு வெட்டி ,
நீர்பாய்ச்சி ,  இலக்கம்  தவறா 

ஏர் ஓட்டி , நாத்து நட்டு ,களை பறித்து ,
உரமிட்டு, மருந்தெளித்து ,
பருவம்   பார்த்து   கதிரறுத்து ,

கட்டு  கட்டி ,  களம்  சேர்த்து 
காலமெல்லாம்   கவிதையாய்
கலனி  எங்கும்   வளம் வந்த 

உன்னதமிக்க   உழவன்  எங்கே ?

காணி  நிலத்தையும்   காசு பார்க்க
கல் ஊன்றி , நூல் பிடித்து ,மாடி கட்ட

தனை வளர்த்த  தன்னலமற்ற  பூமியை
தாரை  வார்த்தான்  உழவன்  இங்கே...  ஏன் ?

ஏன் என்ற கேள்விக்கு ஏற்றம் செய்யும்
ஏர் உழவன் பதில் ஒரு வேலை  ஏற்ப்புடையதோ ?
                                   ஆம்
ஏழை விவசாயி  எத்தனை  நாளைக்கு
எலிக்கறி  தின்பான்  ?

நான்  உழைத்து ,  தான் விதைத்து
நல்ல பலனை  நாடே உன்ன ,

கூன்   விழுந்து , குடல்  சிறுத்து ,
குப்புறத்தள்ளி   என்னை

கூடி நின்று  கொல்லென்று ,
சிரிக்குதே  கொடும் வறுமை  !

வெள்ளைத்துணி ,நல்லசோரும் ,
கடைத்தெருவில்  கைவீசி  
 கைபேசி  சகிதமாய்   நடக்க    
எனக்கில்லையா  ஆசை ?
வீடு   கட்ட   விளைநிலம் ,
விலைபேசி  விற்க வேண்டிய தேவை

உழவன் சேற்றிலே  கால் வைப்பது
உலகம்  சோற்றிலே  கை வைக்கவாம்

இது யார் போட்ட ஒப்பந்தம் ?

சேற்றை   கழுவும்   விவசாயி !
சேர்ந்து   வைக்கும்   ஒப்பாரி  !!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒருசில  பகுதியை சேர்ந்தவர்கள் இன்றளவும்  
எலிக்கறி உண்ணுவதை வழமையாக கொண்டவர்கள் தவிர
எந்த விவசாயும்வறுமை  தாளாமல் எலிக்கறி  உண்பதில்லை !

விவசாயிகளுக்கு  எத்தனையோ  சலுகைகளை 
போட்டிபோட்டுக்கொண்டு வருகின்ற அரசுகள் செய்கிறது

நான்கு ரூபாய்க்கு நெல்லை வாங்கிக்கொண்டு
ஒரு ரூபாய்க்கு அறிசிதருகிறது  இது சலுகையில்லையா ?

கடன்களையெல்லாம் ரத்து செய்கிறது 
இது சலுகையில்லையா ?

மின்சாரம் இலவசமாக தருகிறது 
இது சலுகையில்லையா ?

புல் மண்டி ,புதர் மண்டி கிடக்கும் குப்பை மேட்டையும்
ஏக்கர்களாய்  கணக்கு காட்டி இயற்ர்க்கைப் பேரழிவு க்கான
அரசு தரும் பணத்தை விவசாயி எனும் போர்வையில்
வாங்குகிறாயே  இது சலுகையில்லையா ?

விவசாயப் பொருள்களை குறைந்த விலையில் ,
சுலபத்தவணையில்  தருகிறது  இது சலுகையில்லையா  ?

இப்படி எல்லா சலுகைகளையும் பெற்றுக்கொண்டு
பெரிய நகரங்களுக்கு அருகில் உள்ள விவசாயிகள்
வீடு கட்ட விளைநிலத்தை தாரைவார்த்துவிட்டு
தருகின்ற  வியாக்கியானமோ 

ஏழைவிவசாயி  எத்தனை நாளைக்கு எலிக்கறி  தின்பானாம் 
 இவர்கள் சலுகைக்காக சாதூர்யம் பேசும் சந்தர்ப்பவாதிகள் !
_______________________________________________________________________
உண்மை விவசாயி , 
உழவை  தொழிலாக்கி , 
தன்னலம்  கருதாது
உழைப்பை  களமிறக்கி , 
விதையை  பயிராக்கி , 
வியர்வை  உரமிட்டு ,
விளைச்சளை   பெருகின்றவனே  
உன்னதமிக்க  உண்மை விவசாயி !!!.....
இத்தகையோரின்  உழவுக்கும் , தொழிலுக்கும்  வந்தனை  செய்வோம் !!!.
==============================================================
             இவன் >>      >>> பிறைத்தமிழன்

காணும் போது கவி பிறக்கும்..



காணும்போது  கவி பிறக்கும்  !             
கழிப்பறையும் பூ மணக்கும் !! 


 " பிரிட்டனிலிருந்து  பிறைத்தமிழன் பேசுகிறேன் "

      மேற்க்கத்திய  கலாச்சாரத்தில்   எனக்கு  பிடித்தது   என்று                   சொல்வதை விட             சரியென்று   தோன்றக்கூடிய   நிறைய        விஷயங்கள்  உண்டு.                                  

   இங்கு   குழந்தைகள்  வாலிபம்  அடையும்  வரை பொறுப்பதில்லை  என்பது  வேறு   விஷயம் ,  அதற்குள்   பக்குவப் பட்டுவிட்டோம்   என்று   அவர்கள்   தாங்களாகவே  தீர்மானமாகி  விடுகிறார்கள்.   

          இவ்விடத்தில்    பருவத்தை  தொட்டவர்கள்   பிறரை           சார்ந்து   இருப்பதில்லை   என்பது  உண்மை  ,        ஒருவன்     ஒரு பெண்ணிடத்தில்   நட்பு  கொண்டிருந்தாலும் ,  ஒரு  பெண்   ஒரு ஆணிடத்தில்   நட்பு  கொண்டிருந்தாலும் , இவர்கள்    வயோதிகத்தை  அடையும் போது   தன்  பிள்ளைகளையும்  கூட சார்ந்திருப்பதில்லை.  

            இதற்க்கு  அடிப்படை  காரணம் என்ன வென்றால்  இங்கே  குழந்தைகள்  பிறந்தவுடனேயே  தனித்து  கிடத்தப்படுகிறார்கள்.   அவர்கள்  பேசவும் ,  நடக்கவும்  கற்றுக்கொண்ட   மாத்திரத்தில்  அவர்களுக்காண   தேவைகளை கூட    அவர்களின்  அனுமதி  பெற்றே நிறைவேற்றப்படுகிறது    இதன்   மூலம்  தன்னம்பிக்கை  மற்றும் சுய சிந்தனையை  உருவாக்குவதாக  சொல்வது   சரியென்று  பட்டாலும் எனக்கு  பிடித்தவை  என்று  ஒருபோதும்   ஏற்றுகொள்ளமாட்டேன்.               

           மனிதன்   எப்பொழுதுமே  ஏதாவது  ஒன்றின்  மீது தேவை   உடையவானகவே   இருக்கின்றான் .அவனுக்கு  தேவையில்லாததும், அவன்  விரும்பாததும்    துன்பம் மட்டுமே   இன்பத்தை  நேசிக்காத  மனிதன்  இருக்கவே  முடியாது. அப்படி  இருந்தால்  அவன்  மனிதனே  இல்லை.  

         சுயமாக   சிந்திப்பவன்  எளிதாக     இன்பத்தை  அடைய முற்ப்படுகிறான் . இவ்விடத்தில் ,  ஊரையும் , உறவையும்  நேசிக்காது தன்னை  பற்றியே  சிந்திந்து  கொண்டிருப்பவனால்   சமூகத்திற்கு எப்பலனும்   இல்லை.  

                 முறைப் படுத்தப்பட்ட      உழைப்பும்,  அதற்க்கான    முழு ஊதியமும்   பெருகின்ற   இவர்களிடம்   சேமிப்புக்கான  சிந்தனை துளியும் இல்லை.  

               மூன்றறிவு,  நான்கறிவுள்ள   உயிரினங்கள்   கூட  சேமித்து  வாழ்கின்றன .   ஆறறிவுள்ள   மக்கள் ,  அன்றாடம்  மதுவையும் , மாதுவையும்   கையாளும்  விதத்தில்  அவர்களுக்கு  நிகர்  அவர்களே . 

           மனிதன்  மதியை  முழுமையாய்  பெற்றதற்கான  அடையாளமே ஆடை அணிவது தான்.  அந்த  ஆடையை  அறவே  குறைப்பதும் , அங்கங்களை   வெளிப்படுத்துவதும்,  நவீன  நாகரிகமாம் .   இதை பெண்களின்  சுதந்திரம்  என்று  கொள்கை விளக்கம். தருகின்ற  இவர்களின்  கட்டமைப்புகளோ  பிரம்மாண்டம்  , 

        " காணும்   போது  கவி  பிறக்கும்.. கழிப்பறையும்  பூ   மணக்கும்  "        

      சுத்தத்திலும்   சிறப்பானவர்கள்   இன்னும்   இவர்கள்   வெகுவாக  கூறும்    நன்றியும் ,   வேகமாக   கோரும்    மன்னிப்பும்    இவர்கள் கலாச்சாரத்தில்   தப்பிப்  பிழைத்த  ஒன்று  .

        மனித  உரிமை  பண்புகளை   உலகுக்கு  கற்றுத்  தந்தவர்கள்  என்று தம்பட்டம்  அடித்து  கொள்ளும் ஆங்கிலேய  மக்கள்  கலாசாரம்  மற்றும் , தனி  மனித  ஒழுக்கத்தை   குழி தோண்டி  புதைத்து  விட்டு , நாங்களே   நாகரிக  உலகத்தின் நாட்டாமை  என்று  கிரீடம்  சூட்டிக் கொள்கிறார்கள். 

             இவற்றை ஒப்பிட்டு பார்க்காவிட்டாலும் இக்கட்டத்தில்       என் தாய்  நாட்டு   மக்களை  நினைவு  கூர்ந்தே  ஆக வேண்டும் . இன்பமும் , துன்பமும்   இயற்கையின்  நியதி . ஏற்றத்தாழ்வுகள் மனிதனின் ஜாதி  என்ற  தத்துவம்   அங்கே  நிறைந்து  காண படுகிறது . என் மக்கள் , எல்லா  நிலைகளிலும்   பிறருக்காக  வாழ்பவர்கள். அல்லது  பிறரை  சார்ந்து  வாழ்பவர்கள் .

               உதாரணத்திற்கு  ஒரு  பெண் , குழந்தை  பருவத்தில்   தன் பெற்றோரை  சார்ந்து  இருக்கின்றாள் . வாலிபம்  எய்தி மன வாழ்க்கை காணும்  போது   தன் கணவனை    சார்ந்திருக்கிறாள் .                              வாழ்ந்து   வயோதிகம்  எட்டும்  போது    தன் பிள்ளைகளை  சார்ந்திருக்கிறாள்.   இப்படி பல நிலைகளிலும்   பிறரை  சார்ந்தே  வாழ்கிறார்கள்  அல்லது   பிறர்  அவர்களை  சார்ந்து  வாழ்கிறார்கள்.  

             இப்படிப்பட்ட   என் தேச  மக்கள்   இன்பத்தில் கூட , எல்லை கடப்பதில்லை.  துன்பத்தில்  துவண்டு  கொண்டிருப்பவனால் ,  இன்பத்தை   இறக்குமதி  செய்ய  முடியாது . சிறிதளவு  மகிழ்ச்சி  கூட அவன்  சந்தோசத்தை  இரட்டிப்பாக்கும் . அப்போது  சமூகமே  அவனுக்கு நேசப்பட்டு போகும் . அந்த  சமூகத்தை  காக்கும் கடமை  தமக்கும் உண்டு என்பதை  உளமார  உணர்வான் .  அங்கே  கலாசாரம்   காப்பாற்ற  படும். மனித நேயம்  மேலோங்கி  அவர்கள்  மேன்மைக்குரிய மக்களாய் போற்றப்படுவார்கள்.

  ===================================================================== 
                    ( இவை அனைத்தும் நான் கண்ட உண்மையே  தவிர            

          ..வெற்றுப்புனைவுகள் அல்ல.)                                                              
                                       இவன் >>   >>>    பிறைத்தமிழன்                                     

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

" பட்டுப்போன பழைய மரம் "









முகம் ::::அதில்   கண்ணீரின்
முத்துக்கள்  கரைந்திருக்கக்  கூடும் !

முந்தானையிட்டு   மூடியபோதும் ,
முழுதும்   மறைக்கப்படாத  சோகம் !

 
கேள்வி    ததும்பிய   பார்வை ,  
கேட்பதற்  கில்லை   நாதி !
 
கேவித்தான்   அழ   தயக்கம் ,
கேலி   பேசுவோர்   உண்டெனவே !

வரவேற்க    எத்தனித்த !
வறண்ட    இதழ்கள் !

வழக்கம்   போல்  வழிய ,வழிய ,

வாசலில்   வந்து   நிற்கும் !

வாழ்வு   சீரழிக்கும் ,
வசதிக்கார    விருந்தாளி !

யாருக்காகவோ    பாயும்   விரித்து ,
யாருக்காகவோ   வாயும்   சிரிக்கணும் !

யாருக்கும்   பிடிக்காத   இதை ,
யார்தான்    தொடங்கினாரோ ?

 

சிரிக்க   தெரிந்து   வைத்த ,
சிவப்பு   வெளிச்சம்    அவள் !

செதுக்கி    செப்பனிட ,
செல்வந்தர்    மட்டும்   உண்டு !

அம்மி    மிதிக்காமல் ,
அட்சதையும்    தூவாமல் !

அறைக்கதவு    தான்   சாத்தி ,
அறைமனதாய்    தாளிட்டு !


ஈனங்கள்   அரங்கேறும் ,
இழிமிகு   சேர்க்கையிலே !

இனவிருத்தி   விரும்பிடுவோர்,
இகத்தினில்   யாரு முண்டோ ?

பறந்து   விரிந்து   நிற்கும் ,
பசுந்   தழைகள்   ஏதுமில்லா !
 

 பாதையோர    பக்கங்களில்  ,  
பட்டுப்போன    பழைய   மரம் !

பாவி   அவள்     பெற்றதுவோ  ,
பரத்தை   என்ற  பட்டம்  மட்டும் !

சாதிக்கு    இடமில்லா ,
சமபந்தி    போஜனமே !

சகதி    யாகிப்போன    அவள் ,
சாதனைதான்     மிச்ச  மன்றோ !

வேதனைகள்    விருப்பமான ,
விலைமாதர்    வாழ்வினிலே !

மூடி    மறைத்தாலும்  தீரா ,
முடிவற்ற   சோகம் ,,,,!!!
==================================
    இவன்  >>   >  பிறைத்தமிழன் 

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

" அண்டை புறம்பேசி, ஆழக்குழி தோண்டி"


அண்டை   புறம்பேசி , ஆழக்குழி தோண்டி
====================================================
ஏன்   செய்தேனோ  தவறு ,
ஏகமாய்   சிதைந்ததே  என்   வாழ்வு !

எல்லாச் சுகங்களும்  எல்லையில்லா  இன்பத்தோடு
கரைபுரண்ட காலங்கள்  கரைந்து  சென்றதே    ஏன் ?
இது என்ன கனவா  ?

இதயமும் இடிந்தது போல்  எண்ணத்  தோனுதே  ஏன்  ?
இது என்ன    கதையா  ?

என்  கைகளாலேயே  நான்  தேடிய  தீவினையே யானாலும்
மன்னிக்க வொன்னா  மா  கொடுஞ்  செயலும் , மன்னகத் திருப்பின்
ஏகப் பெரியவனாம்   என்னுடைய  ரட்சகன்   இரக்கமுள்ள   நாயகனும்
எனை  மன்னிக்க   மாட்டானா  ?
அதற்குள் 
அண்டை   புறம்பேசி  ஆழக்குழி தோண்டி
புரட்டிப்     தள்ளி   பூரிப்பு  கொள்கிறதே
என்ன  செய்வது  எனக்கு  வாய்த்த  உறவுகள்  அப்படி
பிறர்  நிம்மதியையும் ,சந்தோசத்தையும் ,
நிர்மூல  மாக்கிடவே    கங்கணம்  கட்டி  காலத்தை  கழிப்பவர்கள்

பெருங்கவலை   தீர்க்கவல்ல   பிஞ்சுப்  பிள்ளைச்  செல்வங்கள் 
பேரன்புப்  பிரளயமாய்  புரண்டு  தவழ்ந்த    என்
நெஞ்சுக்குழிக்குள்  கொஞ்சம்  
 நஞ்சை  நனைக்க  நாள்தோறும்  தோனுதே

வஞ்சத்தால்   வாழ்த்துச்    சொல்லும்  வல்லூறு  கூட்டமாம் 
வழக்கமான  உறவுகளே   வலமும் , இடமும் ,  மிகவும்    வலுவாக
வாள் அது    போதா தென    அதனினும்     மிகக்  கொடிய 
நோவு   கொண்ட  உள்ளத்தில்    நாவு  கொண்டு  கீறி
நர மாமிசம்    உண்ணுதே   நானிலம்  தாங்கிடுமா  ?
 
தாயும் , எனைத்தாரம்  கொண்டவனும் , 
பிள்ளை ,  பேரக்  குழந்தைக்கும் ,
பிணியும் , பெரும்   பிணக்கும்   நீங்கி ,  பிரியத்தால் 
பெற்றோர் , பிறந்தோர் ,பிற றோடும் 
பேரானந்தம்   தான்   கொள்ள 
 மூழ்கிய   நிலையிலேயே    முழுப்  பொழுதும்    முடிந்திடுமோ ?
முன்னேறும்   பாதைதனை   முயன்று   நானடைய ,  எப்போது ? 
என்னை   நான்   முழுதாய்   காண்பேனோ  ?  
-------------------------------------------------------------------------------------------------------
முழுதாய்  கண்டேன் நான்    இது  முற்றிலும்  உண்மையே !!!
                                                       இவன்   >>>    > பிறைத்தமிழன்

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

பிறரை வீழ்த்தச்செயும் சூழ்ச்சி

"
       "  முன்கோபி  "

 பிறரை வீழ்த்தச்செயும்  சூழ்ச்சி ,
  பிறகொருநாள்  உனக்கெதிராய்   சொல்லும் 
   சாட்சி !

   உனக்கு ஏற்ப்பட்ட சறுக்கல்
   உன் தலையில் எழுதப்பட்ட  கிறுக்கல்  என -
   எண்ணாமல் பெருக்கல் எனும்  கணக்குப்போட்டு
   வாழ்ந்து காட்டு !
  
   தரித்திரத்திலும்  சரித்திரம்  படைப்பவனே ,
   பவித்திரத்தின்  பாத்திரதாரி  !

   நன்மைக்கு    தீமை  எதிரி ,
   நமக்கு    நாமே    எதிரி  !

   சொல்   புத்தி ,  சுய  புத்தி  ,   
   இரண்டும்   இல்லாத  முன்கோபி ,
   இருபக்கக்  கூரான  கத்திக்கு  ஒப்பானவன்  !

   வஞ்சகனின்    வாயைப்போல் ,
   கொடுமையான  ஆயுதம்  வேறேதும்  இல்லை  !

   உன்னைவிட   திறமைசாலி  என   பிறரை    நினை ,
   பிறரைவிட    திறமைசாலி   ஆவதற்கு  நீ  முனை !

   உன்னைபுரிந்து  பிறர்   வாழ்வதை  விட ,
   பிறரைப்   புரிந்து   நீ   வாழ்வாயாக !

   நயம்  இல்லாதார்   வாழ்வில்  ஜெயம்  கொள்ளார் ,
   ஜெயம்  கொள்ளாதார்  பயம்   உள்ளர் !

   ஆரூடம்    நாடாதோர்   வாழ்வில் ,
   யாரோடும்   பகையில்லை !

   கண்ணை   மூடிக்கொண்டு   உலகைப்   பார் ,
   தன்னை  மீறிய   சக்திக்கு   இறைவன்   என்றே
   பொருள்படும் !

   உழைப்பாய்    நிறைவாக !.
   உண்பாய்    அளவாக !!.      அமையும் ,
   உன் வாழ்க்கை   சிறப்பாக ! ! !.....
============================================
                                                 >இவன்  >>>>> பிறைத்தமிழன் <<<<<<                                  

புதன், 3 ஆகஸ்ட், 2011

" அமுதத்தமிழ் "


                                 மனிதனாய்  பிறந்தேன்   புவியில் 
                                 தாயை   அறிந்தேன்   -   தமிழில் !
                                 முத்தம்  பொழிந்தால்     முதலில்  
                                 முழு  மொழி  தந்தாள் --  தமிழில் !

          அன்னையின்  தாலாட்டு,
          அழகு  தமிழ் !

         தந்தையின்வழி ,  
         தலைமுறைத்  தமிழ் !

         தலைவன்  பாராட்டு
         தத்துவ  தமிழ் !

         காதலில்  பிறக்கும்,
         கவிதை   தமிழ் !

         மனைவி   சொல் ,
         மந்திரத்    தமிழ் !

         மக்கட்  செல்வம்
         மகிழ்ச்சித்  தமிழ் !

         இரவில்    உலவும்,
         நிலவும்    தமிழ் !

         இருளை  கிழிக்கும்,
         ஒளியும்   தமிழ் !

         இளங்   காலை,
         இசைக்கும்    தமிழ் !

         இனிதாய்   பிறக்கும்,
         பூபாளத்   தமிழ் !

===========================================================================
                 
                    மேகம்  கண்டேன்  விண்ணில் 
                    அது  மின்னளிடுதே  தமிழில் 

                   காற்று  வீசும்     திசையில்
 மழை  

                   கனிந்து  பெய்யுதே   தமிழில் 


                   மேனி   நனைந்தால்  மழையில் 
                   மெல்லக்   குளிருமே   தமிழில் 

                  மலரின்   மகரந்தம்  என்  விரலில்
                  மயக்கின்ற   மனமோ  தமிழில்

                  மலையின்  முகடுகள்  பனியில் 
                  மாறிடும்  அருவியாய்  தமிழில் 

                  நதியின்  சீற்றம்  இரு கரையில் 
                  நானிலம்   செழிக்கும்  தமிழில் 

                  கடல்சென்   றடைந்திடும்  நதியில் 
                  தாலாட்டும்  அலைகள்  தமிழில் 

                 தவழ்ந்து  புரண்டேன்  அதனில் 
                 என்னைத்  தழுவும்  நுரைகள்  தமிழில் 

                 செல்  பிளந்த  சிப்பியின்   வயிற்றில்
                 சொல்  விளங்கும்  முத்தே  தமிழில்

=================================================


                  அன்னைத் தமிழ்     முதத் தமிழ்,
                               ட்ச்சித்தமிழ்           ளும் தமிழ் ,

                 இ ன்பத்தமிழ்          லக்கியத் தமிழ் ,
                  ஈ ந்து  மகிழும்       ஈகைத்  தமிழ் ,
                  உ ள்ளம்  கவர்       உரைக்கும்  தமிழ் ,
                         றுகண்டு            ஊ டருக்கும்  தமிழ்,
                  எ ங்கெங்கும்        எழுத்ச்சித் தமிழ், 
                  ஏ ற்றமிகு              ஏழிசைத்   தமிழ், 
                         ம் புலனில்             க்கியத்  தமிழ் ,
                  ஒ ப்பற்று                ளிரும்  தமிழ் ,
                         ங்கார                   சைத்    தமிழ்,
                  ஒளவியமற்ற        வைத்  தமிழ் ,
            ஃ,    இது               ஆயுதத் தமிழ்  !!!.......
==========================================================================================
                                என் தமிழ் , இனிய தமிழ் , இது பிரியமுடன்
                                பிறைத்தமிழன் பேசும் தமிழ் !
                                கல்தோன்றி ,  மண்தோன்றா , காலத்திற்கு
                                முன் தோன்றிய   மூத்த தமிழ் , முத்தமிழ் ,
                                செம்மொழி  யென  சீர் பெற்ற  செந்தமிழ் !!!.....
===============================================================
                                            இவன்    >>  பிறைத்தமிழன்

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

" நீர்த்துப் போகும் நிமிடம் வந்தால் "



ஏழை வீட்டில் எரியும் அடுப்பில்
எந்நாளும் வறுமை
நாளைப்   பொழுதை நகர்த்திச்  செல்லும்
நம்பிக்கையில் வெறுமை !

வீரம் பேசி பொழுதை  கழிக்கும்
கோழை  மனதில் கொண்டதால்   பெருமை,
வெற்றி  வந்து  சேர்த்தாலும்
விலகாது   வறுமை !

இக்கால இசைக்கு இலக்கியம் வடிக்கும்  கவி  
எடுத்துச்  சொல்லும்  இலக்கணச் சிறுமை !   
பொங்கும் பொருள் தங்கும்  அவர்
தமிழ்  சிந்தைக்கோ பெரும்  வறுமை !

கலி  கால  சிறப்பை   காட்சி  வடிக்கும்
திரையுலகச் சிற்ப்பிகள்  தேர்ந்தெடுக்கும் புதுமை ,   
அதில்   நாகரீக  மங்கையின்  நளினமற்ற 
நாட்டியம்   செல்லும்  வறுமை !

வெள்ளித்திரையின் வெளிச்சம் பட
ஒட்டுத்துணிக்குள் உடலை திணித்து
துட்டுக்கென  தொலைத்திட தயங்கா
வெட்கக் கேட்டுக்கு விலையாகும் பெண்மை !

ஆத்திரம்   பேசும் அதிகார  வர்க்கம் 
சேர்த்து  வைத்த   செல்வக்குவியல்
நீர்த்துப் போகும்  நிமிடம் வந்தால்
நினைத்துப்   பார்   நிலைக்குமா ?இந்த   பகுமை !
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முட்டாள்கள் கூட   பணம்   சன்பாதிக்கலாம் !  அதை ,
ஒரு  அறிவாளியால்தான்   காப்பாற்ற  முடியும்   இருந்தும்
எந்த  ஒரு  அறிவாளியும்   இறுதியில்  தன்னோடு
எடுத்துச்செல்ல    முடியவே   முடியாது    எனவே,
மனிதா   உன்  தேவைக்கு   மீறி  சேர்த்து  வைக்காதே !
ஏழையை  குறிவைத்து  உன்  சேவையை   துவங்கு
அப்போது   உன்  பிறவிக்கான   பொருள்   புரியும் !!!......
=============================================================
                              இவன் >>> பிறைத்தமிழன் <<<

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

" பகலெல்லாம் பசித்திருந்து "


"  மனிதன்  தறிகெட்டுப் போகாமல்  "
 ==========================================================

நீரை  ஆதாரமாகக்கொண்டது  "  "இரத்தம் "
இரத்தத்தை ஏற்றம் செய்யக்கூடிய  இதயம் அமையப் பெற்ற
இரத்தமும் ,சதையுமாக உள்ள    எந்த ஒரு ஜீவராசி யும்
உண்ணாமல் ,பருகாமல் உயிர் வாழ்வதில்லை

உன்னதமிக்க மனித வாழ்வியல் தத்துவத்தை வகுத்த இறைவன்
கண்ணியமிக்க  மாதமாம்  ரமளானில்  மாண்புக்குரிய  நோன்பை
மனித குலத்திற்கு விதியாக்கி அதன் மூலம்  பசியை உணரச்செய்து
உள்ளத்தில்  ஈகையை  மலரச்செய்து  ஏழை  எளிய மற்றும்
வறுமையிலும் வாய்திறந்து கேளா வறியவர்களை கண்டறிந்து
இதயம் குளிர  ஈந்து மகிழ வகைசெய்யும் புனிதமிக்க மாதம்
ராமலானாகும் !

மனித உடல்கூறு  பற்றிய  மருத்துவம்  ஏற்றுக்கொள்ளக்கூடிய
பல   அற்புதத்தை   நோன்பானது  நோன்பாளியின்  உடலில்
ஏற்ப்படுத்துகிறது ! 
எவர் ஒருவர்   ரமளானின்  மாதத்தை  அடைகின்றாரோ
அவர்  அப்படியே  அதில் பொருந்திக் கொள்ள வேண்டும்

கல் உடைப்போர் ,மூட்டை சுமப்போர் ,பாரவண்டி இழுப்போர் ,
மரம் ஏறுவோர், மலை ஏறுவோர் ,சுரங்கம்  தோண்டுவோர் ,
சாலைத் தொழிலாளி ,  கட்டிடத்தொழிலாளி , வியாபாரி  என 

எந்த  நிலையிளிலும்  அதற்க்குள்  இருந்தே  நோன்பை 
நோற்க  வேண்டும்       கால  நிர்ணயப்படி
உண்ணாமல் , பருகாமல் , தீயதை 
பேசாமல் , கேளாமல் , பாராமல்

இரவெல்லாம்   விழித்திருந்து   இறைவனைத் தொழுது ,
பகலெல்லாம்   பசித்திருந்து  தொடர்  நோன்பை  பேணுகின்ற
நோன்பாளியின்   உடலில் 
இயற்கையாக  இரசாயன  மாற்றம்  ஏற்ப்பட்டு
முற்றிலுமாக  இரத்தம்  புதுப்பிக்கப்படுகிறது !

மனிதன்  தரிகேட்டுப் போகாமல்  
தரமிக்க  வாழ்வுக்கான தத்துவத்தை
பறை சாற்றுகின்ற   பொருள்பொதிந்த , அருள்நிறைந்த ,
புனிதமிக்க   ரமலானை  வரவேற்று   
நோன்பிருந்து  இறைவனின்  அருட் பொருத்தத்  தைப்  பெறுவோமாக
வஸ்ஸலாம்   

                                >>>> இவன்   > பிறைத்தமிழன்