மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 13 பிப்ரவரி, 2014

           
                         ஆடயில் அழகைத்தேடதே '
பிறைத்தமிழன்


 -------------------------------------------------------------------------------------------------
                                                             
             சுருங்கச்சொல் , அதை 
                                                        சுவை படச்  சொல் !

            பசிக்கின்றவை  , புசிக்கின்றவரை
                                               தொடர்வதே  தேடுதல் !!

           கல்லை கடவுளாக்கின் !
                                      கடவுள் கல்ளேயாகும் !!

           கஸ்டங்களை எளிதாய் உள்வாங்கு !
               கடமைகளை புதிதாய் தான் துவங்கு !!

           இல்லைசொல் இல்லாமை பழகு !

                                எள்ளி நகையாடுதல்  விலகு !!

            உண்மைக்கும் உனக்கும் ,
                                          இடைவெளி வேண்டாம் !!

           உறவுக்கும் உனக்கும் ,
                                             நெருக்கடி வேண்டாம் !!

            உள்ளம் ஒருமுறை சுருங்கின் ,
                     உள்ளங்கை ஒருபோதும் விரியா !!

            ஆடையில்  அழகை 
தேடாதே !
            உடையால் உள்ளத்தை நொறுக்காதே !!

             முகத்திற்கு நேராக புகழாதே !
                       முது கிற்குப் பின்னால் இகழாதே !!

                 புல்லை வேண்டாத மாடுகள் உண்டு !
       புகழை வேண்டாத மனிதர்களே இல்லை !!

        சென்ற காலத்தை பற்றியே சிந்திப்பவன் ,
                        எதிர்காலத்தை இழந்துவிடுவான் !!

        தரித்திரத்திலும் சரித்திரம் படைப்பவனே ,
                                      பவித்திரத்தின் பாத்திரதாரி !!
--------------------------------------------------------------------------------------------------
           >>>   இவன் ; >  பிறைத்தமிழன் .

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

                 


                 " பொறுமை "
 --------------------------------------------------------------------------
        பொறுமையை போர்வையாக்கி ,
        பொறாமையை புறந்தள்ளி !

        பெருமையை பிறரிடம் கண்டு ,
        பெரு  வாழ்வை பேனிக்கொள்வாய் !!
------------------------------------------------------------------------------
                                 >>> இவன் > பிறைத்தமிழன் .

வியாழன், 6 பிப்ரவரி, 2014


     " நல்ல மழை "
மக்கள்நலம் பேனமறந்த
மத்தர்களும் குடிக்கிற கஞ்சிய
கொட்டிக் கவிழ்க்கிற
 கொடுங்கோலரும் ஆளும்நாட்டில் 
       ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ முன்பு   பஞ்சம் போக      
         நல்ல மழை  வேண்டினேன் ,     
                                    பின்பு   தஞ்சம் புக                               
   வழியின்றி தவிக்கின்றேன் !

            காரணம் குடை கிழிந்து ,
                      கூரை பிய்ந்து ,           
       குடிசை   மூழ்க , கொட்டித்தீர்த்த ,
        கோபக்கார  மழையினால் ,

      தஞ்சம் புக வழியின்றி தவிக்கிறேன் !!!
 ------------------------------------------------------------------------------------
பிரியமுடன் பிறைத்தமிழன் 

                   >>>>  இவன்  >>> பிறைத்தமிழன்  ....!!!