மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 29 மார்ச், 2011

" மரணம் மட்டுமே மாறாத ஓய்வு "


மனித     உடலுக்கு    ஓய்வில்லை
மரணம் அவனை நெருங்கும்வரை

பார்வைப்படலம்   மறைந்திடலாம்
செவிப்  புலனும்     அடை படலாம்

உறக்கமும்    ஒரு   வேலைதான் 

மனித   உடலுக்கு   ஓய்வில்லை
மரணம் அவனை நெருங்கும்வரை

செயற்கரிய       சிறப்புகளை
செதுக்குகின்ற    சிந்தனையை

செறிகின்ற      மூளை யதும்
சுருங்கி விரியும்   சுவாசப்பை ,

சுத்தகரிப்பு    இரத்த   கேந்திரம் ,
மொத்த உறுப்புக்கும்  மூல காரணம் 

துளி   மணித்துளி     தும்மலில்   தவிர ,
தூங்கா  உழைப்பில்  தொடர்ந்து  இயங்கும்

உன்னத   உறுப்பாம்   இதயத்தின்   ஓசை ,
ஒலித்துக்  கொண்டிருக்கும்  காலம்  வரை ,

உறக்கமும் ஒரு வேலைதான்

மனித  உடலுக்கு       ஓய்வில்லை !
மரணம் அவனை  நெருங்கும் வரை

ஊ ரற்று ,  உற வற்று    ஊ ணற்று ,
உணர் வற்று     உயி ரற்றுப்   போய் !

உடல் தரையில்  ஒடிந்து விழும்வரை ,
உறக்கமும்    ஒரு    வேலைதான் !

இகத்தில் சிறந்த  இறைவனுக் குகந்த  
நேசத்திற்   குரிய     தோற்றத்தி லான ,

மனித     உடலுக்கு    ஓய்வில்லை ,
மரணம் அவனை நெருங்கும்வரை !!!
===================================
  இவன் >>    >>  பிறைத்தமிழன்

வியாழன், 24 மார்ச், 2011

மதுவின் மயக்கம் மமதை வளர்க்கும் !


தாய் மட்டுமே தன்னிகரற்ற அழகு 
தன்    காதலியை    காணும்வரை  

தந்தை மட்டுமே தலைசிறந்த வீரன்
தான்     வாலிபம்    அடையும்வரை 

ஆசிரியர் மட்டுமே அறிவின் அற்புதம்  
தன்    புத்தகச்  சுமை    குறையும்வரை   

பொருள்களின் விலை பொருட்டேயில்லை 
தன்    உழைப்பில்     ஊதியம்     ஈட்டும்வரை   

மனைவியின்  தழுவலே   மாபெரும்   இன்பம்
மழலை அள்ளி மார்போடு அணைக்கும்வரை

மதுவின்     மயக்கம்     மமதை     வளர்க்கும்
மானம் இழந்து  மற்றவர்  வெறுக்கும் வரை 

புகைப்ப வனுக்கு     புகை    அடிமை
பொழுது போக்க  புகைக்கும்   வரை

பொழுத னைக்கும்      புகைப்பவன்
உயிர்  பிழைத்திருப்பது சாத்தியமே

புற்று     நோய்    வந்து     அவனை  
புரட்டிக்கொண்டு  போகும்  வரை

கலாச்சாரம்   காயப்பட்டு
கண்ணீரோடு       நிற்கும்

விபச்சாரம்      வெற்றி 
உலா    வரும்     வரை

     வரம்பு     மீறிய      பொய்யும் ,
வயதுக்கு   மீறிய   செய்கையும்  ,
     வரவுக்கு    மீறிய    செலவும் ,
வஞ்சம்   உள்ள   நெஞ்சமும் ,
     வழமை  யாய் கொண்டவன்
வாழ்வு   தனை   மங்கச்     செயும் ,
     நாள் அது தொலைவில் இல்லை !
================================

   இவன் >>    >>  பிறைத்தமிழன்



சனி, 19 மார்ச், 2011

" கடந்தகாலக் கனவு "


 படிப்பை    முடித்து     வேலை 
  செய்து  கொண்டிருக்கும்   நான்      

ஒவ்வொரு  நாளும் ,
      ஒவ்வொரு   வாரமும் , 
             ஒவ்வொரு வருடமாக ,

 எதையோ   தேடுகின்றேன் !!

வேறு       வழியின்றி            
       விடுமுறைகள்     தவிர
              வேலை  நாட்களில் !!  ஆம்

தொலைத்துவிட்ட  என் 
 மாணவப்   பருவத்தை!

              கால ஓட்டத்தால் 
              தவிர்க்கமுடியாத

 தலைமுறை    இடைவெளி !!
 இப்போது  நான் ரசித்துக் களித்த
            கல்லூரி       வாழ்க்கை 
            கனவில்      மட்டுமே !!

 தொடருகின்ற   தேடல்
 தொடர   வேண்டி      கண்கள் மூடி 
 கனவை      தேடுகின்றேன் 

கடந்த காலத்தை காணவில்லை,
எதிர்காலம் என்னவென்று  -
தெரியவில்லை ..................???.
=========================================
சென்றகாலத்தை பற்றியே
சிந்தித்துக்கொண்டிருப்பவன்

எதிர் காலத்தை  இன்றே
இழந்துவிட்டவனாவான் !!!
=========================================
           இவன் >>   >> பிறைத்தமிழன்




வியாழன், 17 மார்ச், 2011

" இன்றைய தேர்தல் "




கட்டுக் கட்டாய்  கருப்புகளை
கண்டபடி   குவித்தவர்கள் !

சட்டத்தின்    ஓட்டைக் குள்ளே
சலவையிட்டு   வெளுத்தவர்கள்!

இனி வெளியே வருவார்கள்
வெள்ளை  உடை  வியாபாரிகள் !

சாதிக்   கடிவாளம்
சண்டியரும்  கையில்  வைத்து !

மோதிப்  பாப்பார்கள் 
முன்னணி  தொகுதி   கேட்டு !

வெற்றிக்   கணக்கிட்டு
விழுக்காடு   தருவார்கள் !

ஆண்டுக்  கொரு  அணிமாறி
அவுசாரியை   மிஞ்சுவார்கள்  !

செல்லும்   இடமெல்லாம்
சின்னத்திரை  செய்தியில் ,
சிரிப்பாய்    சிரிப்பார்கள் !

கூடிப்பேசி  கொள்ளைப் பகுதியை 
கூறு  போட்டு   பிரிப்பார்கள்  !

குவித்து வைத்த  கருப்புகளை
 களமிறக்கி  விதைப்பார்கள் !
 
வாக்குகள்  விற்கப்படும்
வாசகம்  கண்டதுபோல் !

கொள்கை  முழக்கமிட்டு
கும்பிட்டு  வருவார்கள் !

எச்சரிக்கை   உள்ளவர்கள்
ஏமாரவா   மாட்டார்கள ?

நச்சரிப்பு       தாங்காமல்
நமக்கென்ன வந்த தென்று ,
நல்ல விலை போவார்கள் !
  ===========================.
எப்போது    மாறுமோ ?
 இன்றைய { இந்திய }தேர்தலின்
      எக்கச்சக்க   வக்கணைகள் !!!!!
     ===================================      
இவன் >>   >> பிறைத்தமிழன்

புதன், 16 மார்ச், 2011

பூகம்பப் பேரதிர்வே



பூகம்பப்  பேரதிர்வே  போதுமே  நிறுத்து !   நீ -

புரட்டிய  பூமியிலே   வெறும் புல்  பூண்டு 
? மட்டுமா    இருக்கு 

ஆழிப் பேரலயே  கொஞ்சம்   
அடங்கு ! நீ  -

ஆர்ப்பரித்து    அடிக்கின்றாய்   இந்த 
போற்  குணம்தான்  எதற்கு ?
 
இத்தனை  பெரிய  இறைவனின் தண்டனை !    
இயற்கையை   சிதைத்ததன்    விளைவா ?

கற்பனை  உதித்து அற்ப்புதம்  விதைத்து ,
சில  நற்பலன்   அடைவது  தவறா ?

தென்றல்    வீசும்   நந்தவனத்தை
தேடிப்பாயும்  தெளிந்த  அருவியும்  நீர்தானே ?

மலைகளைகூட  மணல் மேடாக்கும்
அலைகளைப் பெற்ற கடலே நீ அரக்கனோ ?

மனித உடல்களை மலைகளாய் குவித்து ,
அதில் மரணஓலம் எதிரொலி கேட்டு ,

மதிப்புமிக்க  உயிர்களை  மலிவாய்  வாங்கும் 
மாயப்  பெருங்கடல்  மாபரும்     வணிகனோ ?

புரட்டிப்  போட்டு  பூமியை  மிதித்ததில்  ,
 கார்களும்  கப்பலும்  கட்டிட உச்சியில் !

குப்பை  கூலமாய்  குவிந்து  கிடக்கும் ,
கோரக் காட்சியின்  கொடுமைத்  தொடறாய் ,


அலக் களிப்பில்  அணுவும்  உலையும்,
அடக்க முடியா  அதன்  கதிரின்  வீச்சும் ,

ஜப்பான்  தேச  சவக்  கிடங்காய்
சென்டாய்  நகரம்  சிதைந்து  போய் ,

மனுவும்  மக்களும் ,  மால்வது  கொடுமை !

மரணம்  என்பது  இயற்கையாகும் !
மால்வது  என்பது  தண்டனையாகும் !!

வாழ்வது  வரை  ஆயுள்  அதனை
வீணில்  நீயும்  செலவு  செய்து ,

நஷ்ட மேதும்  அடைந்து  விடாதே
மாண்புக்  குரிய   மனித  இனமே !!!

காலத்தின்   மீது   சத்திய மிட்டு 
இறைவன்  கூறும்  வசனம்  ஒன்று
     இதோ
=================================================
மனிதன் ( தன் ஆயுளை வீணில் செலவு செய்து )
நிச்சயமாக நஷ்டமடைந்துவிட்டான் :அத்~103 ~
          அல்அஸ்ர்~காலம் ( 13 ):அல் குர் ஆண்
=================================================
     இவன் >>    >> பிறைத்தமிழன் 

புதன், 2 மார்ச், 2011

கற்ப் பில்கூட கலப்படம்


விறகு வைத்து அடுப்பெரித்து
விளைவித்ததை வேகவைத்து
உண்டு உயிர் வாழ்ந்த
உன்னத காலம் இன்று
உருக்குலைந்து போனதுவே
ஊறு செய்யும் கலப்படத்தால்

முளைப்பயிர்  கருகும்படி
முலைப்பாலும் திரியும்படி
நாடி நரம்புகளில்
ஊன்   உயிர்  அணுக்களில் 
இலக்கு எல்லையின்றி
இரண்டற கலந்துவிட்ட
                 கலப்படங்கள்

கலப்படங்களை  கவுரவிக்கும்
விதையில்லா வித்துக்களும்
வேரில்லா விரிச்சங்களும்
விவசாயம் ஆகிப்போன
விஞ்ஞான யுகத்தினிலே

மரபுசாறா தொழிலுக்கே
மாபெரும் வெற்றியிங்கே
நீரற்று நிலம் நீர்த்துப்போக
கூழாங்கல் குருமணலும் 
கொள்ளையாய்   விற்ப்பனை

அறநூறு கோடி மனிதர்கள்
வாழுகின்ற பூமியிலே
கொஞ்சி மகிழ குழந்தை
இல்லையாம்
அறிவு ஜீவிகளின்
அற்புத கண்டுபிடிப்பு 

குழந்தை சுமக்கின்ற  வயிறும்
வாடகைக்கோ வசதிக்கேற்றபடி 
விற்பனைக்கோ  ஆகா 
கற்ப் பில்கூட கலப்படம்
=================================
" மாசற்ற நீரும் ,
  தூசற்ற காற்றும் "

" கலப்பற்ற உணவும் ,
  காணக்கிடைக்கின் "

" நோயற்ற வாழ்வை
   நுகர்வது திண்ணம் "
================================
இவன்  > > > பிறைத்தமிழன்