மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 31 டிசம்பர், 2011

* உணர்வை கூர் தீட்டி *


   இயற்கைப்  பேரிடர்  அற்ற 
   இரண்டாயிரத்துப்  பன்னிரண்டு
   இனிதே  துவங்கட்டும்  ! 
   இகத்திலுள்ள  எல்லா  உயிர்களும்
   இன்புற்று  வாழட்டும்  !! 
                         உறக்கம்  திரையிட்டு  
                         உணர்வை  கூர் தீட்டி
   இரும்புத்  தடம் பதித்து  எழுந்து வரும்  

   இளைஞர்களால்
   இந்திய  தேசம்  ஈடு  

   இணையற்று  ஒளிரட்டும்  !!! 
                      என்றெண்ணிய  பிறைத்தமிழனின்  
   இனிய
                       புத்தாண்டு  நல்  வாழ்த்துக்கள்  .... 
-------------------------------------------------------------------------------
    இவன் >>  >> பிறைத்தமிழன்

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

டிசம்பர் " 26 " 2004



கண்ணீர் வடு

சொல்லாமல் தாக்கிய சுனாமி பேரலையே..நீ
கொல்லாமல் விட்டு சென்றது  
கொடுமை மிகு நினைவுகளே !
கோடிக்கரம்..தொட்டு துடைத்திட்ட போதிலும், 
விழி வடித்த கண்ணீர் வடு பெற்றுப்போனதே ! 
கோட்டை கொத்தளங்கள் ..கொட்டி சாய்ந்தாலும், 
ஓட்டை உடைசல்கள் ..உயிர் வாழ போதுமே !
ஆண்டுதோறும்  மீண்டும் ,மீண்டும் 
நினைவுறா  வரம் வேண்டி !
இனி ஒரு இருபத்தாறு இல்லாத டிசம்பராய்,
தனி ஒரு தினசரி தயார் செய் மானிடனே ! 
உயிரற்ற மனிதக்குவியலை 
ஒற்றைச்ச்சமாதியிட்ட, ஓங்கார பேரலையே ! 
உனக்கு கட்டளையிட்டவனே.. 
எங்கள் கண்ணீரை துடைக்க வேண்டும் !
அடைக்கலம் புக வழியில்லை ! 
ஆலயங்கள் போத வில்லை ! 
ஆகாயம்  பார்த்தும் பயனில்லை !
ஆறா துயரின்னும் தீரவில்லை !
இனிய வருடம் தொடங்க வேண்டும் !
இன்பம் இதயத்தை வருட வேண்டும் !
இறைவனே ...உன் துணை வேண்டும்  ! 
என நனைந்த  இமைகளுடன் ,
நான் >> பிறைத்தமிழன் ...