மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 18 பிப்ரவரி, 2012

சீற்றம் >

 
ஒடுக்கவும் , அடக்கவும்  ஒவ்வாநிலை 
                           இயற்கையும் , இயற்றலும்  எல்லை  கடப்பது .
            ========================================================                         
         சக்தி > அது        
         வலிமை   கூறும்   திறன்   ..............................................!
         சாந்தம் >  அது   
         கருணையின்  காந்தக்  குறியீடு ................................!
         சினம் > அது  
         ஒடுக்கவும் , அடக்கவும்  ஒவ்வாநிலை ...............!
         சீற்றம் >  அது  
         இயற்கையும் , இயற்றலும்  எல்லை  கடப்பது .!
         சுழற்ச்சி > அது  
         மாற்றங்கள் , மாறாமல்   நிகழ்வது.........................!
         சூழ்ச்சி > அது       
         பிறரை  தாக்கும்  பேராயுதம் .....................................!
         செருக்கு >  அது  
         செல்வத்தால்   சிறப்புற  வல்லது ...........................!
         சேவகம் >  அது  
         ஊதிய  வரம்பைக்  கடந்த  ஊழியம் ........................!
         சைகை > அது  
         உலக  மொழியின்   உயர் இலக்கணம் ..................!
         சொர்க்கம் > அது  
         சொல்லிலடங்கா  இன்பத்தைச்  சுகிப்பது...........!
         சோதனை > அது  
         நெறிப்படுத்த  நீட்டப்படும்  விரல் ...........................!
          செளவ்கர்யம் > அது  
          வசப்படுத்தப்   பட்ட   வசதி .........................................!
         (இ )ச்சை  > அது  
         ஈடற்ற   சுய   விருப்பம் ..................................................! 
---------------------------------------------------------------------------------------
            இவன் >>   >>>பிறைத்தமிழன்

சனி, 4 பிப்ரவரி, 2012

என்ன தவம் செய்தோமோ ,


{லாஇலாஹ   இல்லல்லாஹு    முஹம்மதுர்  ரசூலுல்லாஹி }
=============================================================
            உள்ளங்கள்   ஒன்றிணைந் திருக்க !
            உயர்  ஈகை  எங்கும்  பொழிந் திருக்க \ 
உலகம்  ஒரு  கொடியின் கீழ்        
உறுதிபெற   நிலைத் திருக்க !      
           வல்லோன்   வகுத்த  வான் - 
           மறை   எங்கும்  செழித் திருக்க !
ஆலங்களின்  அதிபதியாம்  வல்ல ,  
அல்லாஹ்வின்  தூது   வராய் !            
          அழகிய  முன்  மாதிரியாய் ,
          அற்புதத்தின்  பொற்பயனாய் !
 நேர்த்தி மிகு    தலைவருமாய்  ,   
நீதி மிகு     அரசருமாய்  !                  
           காடுகளில்  பாலைகளில் ,
           பணி  படர்ந்த  நாடுகளில் !
சோலைகளில்  தீவுகளில் ,             
சொல்லாற்றும்   நாயகராம் !          
           அறிவு   மலர்ச் சோலை ,
           அறவழி     சாலை ! நபி 
அஹமதை  அள்ளித்   தந்தது ,         
அரபு   மணர்ப்  பாலை !                        
            வல்லோன்   வகுத்த  வான் -
            மறை ,  எங்கும்  செழித் திருக்க !
மனித  னெனும்  பிறவிக்  கடன் ,  
தீராதென    மிகைத் திருக்க !            
            மாநபி  உம்மத் தெனும் உயர் ,
            மகிழ்ச்சியும்  சேர்ந்திருக்க !
என்ன  தவம்  செய்தோமோ ,          
ஏந்தல்  நபி  வழி  நடக்க !                   
           உத்தமத்   திரு நபியின் ,
           உதய  தின   செய்தியாய் !   இது 

உலக  மக்களின்  உணர்வோடு ,
ஒன்றாய்  கலந்திருக்க --> பிரியமுடன் 
------------>> பிறைத்தமிழன் <<--------------

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

* முடிவற்ற சுழற்ச்சி *

      மகரந்தம் சிந்தா மலர்      
 ======================
    மமமமமமமமம         
மமமமமமமமமம
    மமமமமமம    
    மமமமமமமமமம   
    மமமமமமமமமம    
    மமமமமமமமமம    
   மமமமமமமமமமம  
======================================
மல்லிகை > அது 
மகரந்தம் சிந்தா மலர் .................................!
மார்கழி > அது
மணம் சிலிர்க்கும் குளிர் ..........................!
மின்னல் > அது
மேகம் கிழிக்கும் வாள் ...........................!
மீன் > அது
வான் அளக்கும் கோள் ............................!
முகம் > அது
முன்னவர்களின் அடையாளம் ................!
மூப்பு >;அது
முடிவுக்கான முடிவற்ற சுழற்ச்ற்சி.............!  
 மெட்டு >:அது
சங்கீத  ஒலிகளின்  சாரம்..............................!
 மேன்மை > அது
மெருகுடை பொருளின் மிகைத்தல் ..........!
மையல் > அது
சிதறலற்ற உணர்வுக் குவியல் ..................!
மொட்டு > அது
மலர்களின் மகரந்தக் கருவறை ................!
மோகம் > அது
அளவற்ற ஆசைச் சிதறல் .............................!
மெளனம் > அது
பிணக்குகளை பிற்ப்படுத்தும் யுக்தி .........!
ம்................> அது
இதழ் பிரியா இசைவு...................................!
----------------------------------------------------------------------
இவன் :பிறைத்தமிழன் .