மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 20 ஜூன், 2012

தொலைந்து போ துக்கமே !

                                                                                    
இன்பம்  எங்களின் எல்லை  கடந்து 
எளிதாய்ச்  செல்லும் போது
எரிக்கத்தெரிந்து  , எதிர்க்கத் துணிந்த
எங்களிடம்  "துன்பம் "

எத்தனை காலம்  இடிந்து  போகா திருப்பு க் 
கொள்ளல்  முடியும் ?
                                                                                             
தொலைந்து  போ  துக்கமே  !
மடிந்து போவோம் என
மனக்கோட்டை  கட்டாதே  !

உறுதியாய்  உன்னைத்  துரத்த
உண்ண மறுத்தும் , உறங்க  மறந்தும்
சடுதியாய்  அடைவோம்  விடியலை !
                                                                                               
உள்ளம்  அழுகின்ற  போது ,
உதடு சிரிக்கும்   போட்டியில்
உச்சப்பரிசு  பெற்றவர்கள்  நாங்கள்
!
எங்கள்   சட்டைப் பைகளில் ,
சில்லறை சேரா  சல்லடைக் கிழிசல்கள்
சகஜம்தான்  !        இருந்தும்  ,
                                                                                                         
எம் மக்களென்றும் ,
மக்கள் பெற்ற  மழலை என்றும் ,
உள்ளம் நிறைத்து  ஒய்யாரமாய்  அமர்ந்தபடி,

எங்கள் வீடு ,    வாசல்   நிறைத்து
வசந்தங்களாய்  வலம் வருது , அதில்
பல  வண்ணங்கள்  நிலை பெருது !
                                                                                                        
வறட்சியிலும்  வாழ்க்கை   இனிக்கிறது ,

வறுமையிலும்  பொறுமை  சிறக்கிறது !
இறுதியில்  நெறி நிறை  சீமானாக   இருந்து ,
இறைநெறி  ஈமானோடு  இறப்போம்  என்ற  

 நம்பிக்கை    பிறக்கிறது  ....! 
                                                                                                           
-------~: இவன் > பிறைத்தமிழன் :~------