தந்தை படகோட்டி - அவர்
தமிழால் உனை தாலாட்டி
அறிதலே உன் ஆராய்ச்சி !
அணுவை மெருகூட்டி -அதற்க்கு
அக்கிணிச் சிறகுபூட்டி !
அகிலத்தை அதிர வைக்க
வின்னில்தேரோட்டிய
விந்தை மனிதரே-
உச்ச பதவிகள் உனைவந்து சீராட்டி !
இருந்தும் துச்சமென நினைத்து
தொடர்தே பனியாற்றி !
அரசியல் சாயத்தை
அப்புறப் படுத்திய எதிரி இல்லா
இந்திய தேசத்தின் இனிய மனிதரே
இருந்தது கனவா ? நீ
இறந்தது கனவா ? வெற்றியை நோக்கி
விழி திறந்து கனவு கானும்
வித்தையை விதைத்தவரே- இன்று
இளைஞர்களின் இதயத்தில் நீ - என்றும்
இந்தியாவின் உதயத்தில் நீ !!!......
====================================
இவன் ; பிறைத்தமிழன்