பிரபஞ்சத்தையே பெயர்த்து
பெருங்கேடுகளை விதைக்க
இயற்க்கை சிதைக்கும்-இந்த
மனித வர்கத்தின் மீது
உலகலாவிய கிருமியுத்தம்
யுத்தத்தை சித்தப்படுத்திய
அண்ட சராசரங்களின் அதிபதி
அனைத்துலக ரட்சகனே
மனித நேயமுள்ள மா
மனிதர்களின் பொருட்டால்
கொரோனாவை ஒழித்து
அதன் கோரப்பசி தனித்து
உயிர் உருகாமல் தடுத்து
உலகோரின் கண்ணீர் துடைத்து
மனிதகுலம் காத்தருள் புரிவாய்
மாட்சிமை மிகுந்த இறைவா
=============================
இவன்:பிறைத்தமிழன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக