மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 23 மே, 2011

வெப்பம் > சிறு க [வி ] தை


கரன்ட்டு கட்டு காத்து  வரட்டும்  கதவைத்திற...
கதவு , ஜன்னல் . கட்டில் , மெத்தை ,
கண்ணாடி , சுவர்  என
தொட்ட   இடமெங்கும்  சுட்டது  வெப்பம்
  
மீதமின்றி  மின் விசிறி  கூட்டி
அரை மனதாய்   அறைக்கதவு   சாத்தி 
படுக்கை யறையில்  பக்கத்தில்  கணவன் 
கைவைத்ததும்   கணவன்  மார்பில்
கண் யர்ந்து  கனவில்    நுழைந்தேன்

 நிலம்  தேடும்  நேர் உச்சி  வெயில்
வெயில்  தோற்கும்  விரிந்த  மரங்கள்
விரிந்த  மர  நிழல்களுக்கு  உள்ளே  
மனதைக் கவரும்  மழை    நீர்ச் சுனை

என் னுருவை  எனக்கே  காட்டும்  
தேனை  யொத்த  தெளிந்த நீர்  கண்ணாடி
ஆடை  களைத்து   பாதம்  பதித்தேன்  
பாத  ரசம்போல்   பட்டும் படாமல் 
மோதி  தெறித்து  முழுதாய்  மறைய

மண்டியிட்டு   மார்பு   நனைத்தேன் 
இலவம்  பஞ்சு  போல்  இதயக் கூட்டை
இலேசாய்  தூக்கி   என்னுடல்  மிதந்தது

மொட்டு விரிந்த  ஒற்றைத் தாமரை  
சற்றுத் தொலைவில்  சாய்ந்த  நிலையில் 

கொட்டிப் பரவிய கூலாங்  கல்லில்
பட்டும்   படாத  என்  
பாதம்    தரையில்     
தொட்டும்  தொடா  நீர்   தாமரை   இலையில்
 

எட்டிப் பறிக்க    இரு  கை  நீட்டி
ஈரத்தில்  அமிலா  இறகது   போலே
எத்த னித்த  என்   தோள்  தட்டி

ஒட்டுமொத்த  உலக  இன்பமும் 
உனக்கே ,உனக்கே சொந்தம் உனக்கே     என
காதருகே  யாரோ    சொல்ல   
காரனர்  காண   கண்  விழித்தேன் ......
சொன்னது  கணவர் !
கரன்ட்டுகட்டு   காத்து   வரட்டும்   கதவைத்திற......
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காசில்லாமல்  வந்த கனவும்
கரண்டில்லாமல் களைந்து போனதே
உஷ் ..........வெப்பம்   தனிய 
வேண்டினேன்  இறைவனை !!!
================================================
இவன் >>   >பிறைத்தமிழன்

புதன், 18 மே, 2011

" எளிமை நிறுத்தி "


முகம் தெரியா  முதிர் கன்னிகள்  !



செல்வந்தர் களின் 
வீட்டுத்திருமணம்
ஏழைக்  குமர்களுக்கு  
எதிராக  விடுக்கப்பட்ட 
போர்ப்  பிரகடனம் !
 
இந்த   யுத்தத்தில்   
இன்னும்   ஏராளமான  ,
முகம்    தெரியா ,
முதிர்   கன்னிகள்  !
 
மூவாறு   வருடங்கள் , 
முத்தாய்   வளர்த்த   மகளை ,
 
முந்தானால்   வந்தவன்    
கொத்தாய்   அள்ளி   செல்ல ,
 
பத்தாய்   சில   லட்சங்களும்,  
பகட்டாய்   பல   ஆபரணங்களும்...!.
 
என்ன   கொடுமை..
ஏன்  இந்த   மடமை ?

பணத்தையும் ,  
பகட்டையும்   நேசிப்பவன்,  
செல்வத்தையும்   செருக்கயுமே ,
செல்ல  மகளுக்கு  
சீதனமாய்    தருவான்  !

இளைஞனே   விற்க்கப்படுகிறாய்..  
இதற்க்கு   நீ   வெட்கப்பட வில்லையா  ?
 
இறுதியில்   இட்டு  செல்வது  ஒன்றுமில்லை..
நீ   விட்டு  செல்பவை .. யாவும்   உனதில்லை  !
 
ஆழங்களை   அழகாய்  படைத்தவன்,
பெண்ணினத்தின்   பெருமையினை ,
சொல்ல    வில்லையா ?
 
இறைவன்   படைத்த    உயிரனம்,
இல்லறம்   காணும்போது .. 
பிறவியின்  பயனை   அடைகிறது !
 
ஒரு   மனிதன்   முழுமை  பெறுவதற்கு , 
பெண்    தேவை !
 
அந்த  பெண்ணை   பெருமைப்படுத்த , 
பொருள்   தந்து  மணம்  கொள் !
 
அவள்   உன்  வலக்கரங்களுக்கு  சொந்தமாவாள் ! 
இல்லையேல்.. 
இயற்கையின்  இலக்கணங்களுக்கு  நீ  எதிராவாய்  !

கருணை   மிக்க   சமூகம் 
களங்க மற்ற  சமுதாயத்தை   உருவாக்கும் !

எனவே      மானிடனே.. !!  
எளிமையை    நிறுத்தி ,
வறுமை துரத்தி ...!!
இளமை  வாழ்வை ,
இனிதே   ஏற்ப்பாய் ....!!!
===============================================
                                   இவன் >>   > பிறைத்தமிழன்                                        

ஞாயிறு, 15 மே, 2011

மாற்றம் ஒன்றே மாறாதது


                                                       ஆராம்விரல் 
  


நடந்து  முடிந்த  2011 ஆம்  ஆண்டின்  தமிழகத்திற்கான
பொதுத்  தேர்தல்
 
புதிய அரசுக்கு பிறைத்தமிழனின் வாழ்த்துக்கள் 

தமிழகத்தின்   வாக்காளர்கள்   
தமிழகத்தை யார்  ஆட்சி  செய்ய  வேண்டும்  
என்பதில்  கொண்டுள்ள அக்கறையை காட்டிலும்
யாருக்கு  வாக்களிக்க  கூடாது  என்பதில்  கொண்ட  உறுதியே
பெருவாரியான  மக்களை  வெளியே  வந்து  வாக்களிக்கச்  செய்தது

தி மு க தோற்றதால்  
அ தி மு க  வெற்றி  பெற்றிருக்கிறது  அது  சரித்திரம்  வாய்ந்த
வெற்றியை   பெறுவதற்கான  சாதனைகள்  துளியும்
நினைவில்  இல்லாத  போதும்  கூடஅவர்கள்  கைகளில்  
மிகப்பெரும்  வெற்றியை   தரப்பட்டிருக்கிறது
 
சாதனைகளை   சவாலாக  நிகழ்த்தி  சர்வ  சாமானிய
மக்களையும்  சென்றடைய  செய்த  அரசு   தி மு க வின் அரசு
சாதனையின்  பலன்களை  ரசித்து , ருசித்தவர்களும்  கூட


தி மு க வின்  சூரிய  சின்னத்தை   சுட்டிக் காட்ட
சூளுரைத்து  விரித்த  விரல்களால்  சுருக்கி  மடக்கி 
சுலபமாய்  குத்தினார்கள்  " முதுகில் " என்றே சொல்லலாம்
 இது  எதனால் . ஏன் ,எப்படி ,எதற்கு ,ஆம் 


மாற்றம்   மட்டுமே   மாறாதது       
இம்முறை மாற்றத்திற்கான   காரணத்தை   சரியாக
உணர்ந்திருப்பதாகவே   தோன்றுகிறது 
விரிக்கப்பட்ட  ஐந்து  விரல்களுக்கு  எதிராக
விமர்ச்சித்து  விரிவாக  விளம்பரப்  படுத்தப் பட்ட
விளங்கிக் கொள்ள  வேண்டிய  ஐந்து  விசயங்கள் 

1 ,   ஸ்பெக்ட்ரம்  2 G அலைக்கற்றை  விகாரம்
2 ,  தமிழக  மீனவர்கள்  மீது 
இலங்கை  நடத்தும்  இரக்கமற்ற  அத்துமீறல் 
3 , ஜீரணிக்க  முடியாத  தமிழகம்  தழுவிய  மின்  வெட்டு
4 ,ஒத்த  ரூபாய்  அரிசியை  மாதமொரு  முறை   நுகர்வோரை  விட
மத்த  ரூபாய்  அரிசிகளின்    கடும்  விலை  உயர்வை  

ஒவ்வொரு  நாளும்   நுகர்கின்ற   அடித்தட்டு  மக்கள்  முதல்
நடுத்தர  மற்றும்  மேல்  மட்ட  வரையிலான  மக்களே  அதிகம்  

என்பதை ஆட்சியாளர்   நினைவில்  கொள்ள   தவறியது
5 உழவர்  சந்தைக்குள்  அடங்காத  உலகமய  மாக்கப்பட்ட
ஊசி நூல் முதல் உயிர் காக்கும்  மருந்து வரை
உயிர்க்கொல்லி விஷம் போல் உயர்ந்துவிட்ட   விலைவாசி


{ உதாரணம் தங்கமும் ,பெட்ரோலும் கூட }
இதன்  விலை  உயர்வில்  மாநில  அரசுக்கு  என்ன  பாங்கு  என்பதை
உணர முடியாத   பொது  மக்களின்  பொது  அறிவுக் குறை


தமிழகத்தில்  ஐந்து வருடத்துக்கு முன்  
அ தி மு க ஆட்சியில்விலைவாசிகள்   இப்படி  ஏறினது  இல்லை  
இந்த கருணாநிதி ஆட்சியிலே அநியாய விலை 
என்று அங்கலாய்க்கும்
பாமர ,சாமானிய ,நடுத்தர வர்க்கத்தினர் கொண்ட உறுதியே 
ஆட்சி மாற்றத்தை செயல்படுத்தியது

ஓரளவு  கட்டுப்படுத்தலாமே  தவிர  விலைவாசி  உயர்வு  என்பது
தவிர்க்க  முடியாதது  காலத்தின்  கட்டாயம்  ஓரளவு  என்ற

இதன்  ஏற்றத்தால்வுகளை  மக்கள்  ஏற்றுக்கொள்ளும் விதமாய்
பிரச்சனைகளை  அனுகத்தவறிய  அரசின்  மெத்தனம் மறுப்பதற்கு இல்லை
 இனி எப்போதும் போல் நபிக்கையோடு ஐந்து ஆண்டுகள்
தி மு க  காத்திருப்பது சற்று சிரமமே ஏன் என்றால் புதிதாக
அரசியல் தொழிலை தொடங்கிய இளஞர்கள் இந்த ஐந்து ஆண்டு
இடைவெளியை   பயன்ப்டுத்த்க்கொள்ள நிறைய வாய்ப்புகள் உள்ளது

அத்தகைய  வாய்ப்புகளை  அ தி மு க  சுலபமாக  உருவாக்கித்தரும்
என்பதில்  சிறிதும்  ஐயம்  இல்லை  ஏன்  என்றால்  கடந்த கால 
அ தி மு க  அரசின்   செயல்  பாடுகள்  நிரூபித்  திருக்கிறது

நடுரோட்டில்  பிச்சை  எடுப்பவன்  கூட  நான் ஆளும்  கட்சிக்காரன்
என்று  சொல்லி  உயர்  அரசு  அதிகாரிகளையும்  
எளிதாக  மிரட்ட  முடியும் ஆட்சியாளர்களால் அரசு அதிகாரிகளும் 
அசுரத்தனமாய்   பந்தாடப்  படுவார்கள் 

இத்தகைய  சூழலை   எதிர்  கொண்டு வாழ  செல்வாக்கு  உள்ள 
செல்வந்தர் களால்   மட்டுமே  சாத்திய  முண்டு 
குறிப்பாக :தாழ்த்தப்பட்ட , சிறுபான்மை   இனத்தைச்  சார்ந்த 
ஏழை ,நடுத்தர   வர்க்கத்தினர்  வாழ்வு 
போரட்ட  மிக்கதாய்   மாறும்  போது
ஆட்சியை  விரும்பாதவர்கள்  கூட சில  நிர்பந்தங்களால்
ஆளும்  கட்சி  போர்வையில்  உலவுவார்கள் , அடுத்த  தேர்தலை 
எதிர்    நோக்கியவர்களாக 
அப்போது   அணிகள்  மாறும்  ஆட்சியும்  மாறலாம்  அங்கே
மாற்றம் ஒன்றே மாறாதது என்பது  புரிதலாகும்

                                  இவன்  >>  >>  பிறைத்தமிழன்                                           

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

" இரவின் மடியில் நானும் "

விடிந்து   விட்ட  போதும் ,
விழிக்க   இமை  மறுக்கும் !
கடந்து   சென்ற    வயதும் ,
கனவில்  வந்து  இனிக்கும் !
=================================
இரவின்   மடியில்  நானும் ,
இதமாய் , எனது  பிடியில்  நீயும் !
இன்பத்தின் ,எல்லைப்  படியில்   நாமும் !

விடியும்   வரையில்   தானும் ,
விபரீ தங்கள்    ஏதும் ,
விளையா திருத்தல்   வேண்டும் !

நிலவின்    ஒளியில்   நீயும் ,
நிலை    குலைந்து    நானும் !
நின்னால் ,அலைக்  கழிந்த  நேரம் !

விரல்கல்    தீண்டுத ளாலும் ,
விரக    தாபம்    ஏறும் !
வியர்வை ,  ஆறாய்   ஓடும் !

உச்சக்  கட்ட  வெப்பம் ,
உதடு  வெடிக்கும்  காலம் ,
உன்  இதழ்   பட்டுக்    குளிரும் !
உறை   பனியும்  அங்கு  தோற்க்கும் , 
உடல்  கூடிக்    கள மிறங்கும் !
உயிர்ப்  பதிவு   அங்கே    நிகழும் !!!  

விடிந்து விட்ட போதும் ,
விழிக்க இமை மறுக்கும் !

   காரனத்தைச்   சொன்னால் ,
" கற்பனை " யை   மிஞ்சும் ,
  கனவு     என்று    புரியும் ........!
========================================
           இவன்   >>     >  பிறைத்தமிழன்

திங்கள், 18 ஏப்ரல், 2011

ஆடியடங்கும் நுரைகளைப் போலே!

                               மகரந்தம் சிதறாத " மல்லிகைப்பூ

புலரும்   பொழுதின்   பூபாளமும் ,
தெளிர்ந்த   நீரின்  தெள்லோட்டமும் ,
குளிர்ந்த  காற்றின்  குதியாட்டமும் ,

விரிகின்றது  காட்சியாய்  கண்ணெதிரே !
   இசைக்கின்றது , மெல்லிசையாய்  காதருகே !!

என்னவளோ  இதற்க்கு  எதிர்மறை..!

சிந்தையை   செந் தனலாக்கி,
சிரிப்பதுவை   செவ் விதழில்  காட்டி!

பொய்மை  மிகைத்த  பூமியின்  மேலே ,
கூர்  தீட்டிய   கொடு வாள்   கொண்டு ,
நேர்   நின்று    நீதி   வழுவா !

அவள்  வாழ்த்தும்  மொழி  வசை  போல்  இருக்கும்!
என்னை  வீழ்த்தும் விழியோ  வேல் போலிருக்கும் !

பூசும்  மஞ்சள்  அந்தி  வெயிலாய் ,
சூடும்  குங்குமச்   சுடு  நெருப்பாய் ,
வாடும்   என்னை   வன்மை  தகிப் பாள் !

பள்ளியறை  காணாத  மேல்லிறகு  மேனியவள் ,
மகரந்தம்  சிதறாத " மல்லிகைப்பூ"  கன்னியவள் !

புதிதாய்  புலரும்   பொழுதிலிருந்தே ,
புறப்பட்டு   வருகிற   பொற்க்கதிர்  போலே !

விழியில்  விழுந்து  இதயம்  நுழைந்து ,
என்னுள்  கலந்து  இகத்தை  வெல்ல !

அமைதி  காக்கும்  ஆழ்கடல்  மேலே ,
 ஆர்ப்பரிக்கும்  அலைகளி னாலே ,  
 ஆடியடங்கும்   நுரைகளைப் போலே!

என்றாவது ஒருநாள் சாந்தமுருவாள்
                               நிச்சயம் அதிலே நான் சாந்தி பெறுவேன் !..                                ============================================
இவன் >>   >  பிறைத்தமிழன்

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

வசீகரக் " காதல் "


     =============வசீகர க்   " காதல்  "  ================
   வசீகரத்தை    அடிப்படையாகக்  கொண்டது  " காதல் "
   வசீகரத்தால்  மட்டுமே இன்ப  உணர்வு தூண்டப்பட்டு
   இதயத்தில்  ஆண், பெண்   என்ற பால் பாகுபாடுகளின்
   இயற்கையான   அதிர்வுகள்   ஏற்ப்படுகிறது
   வசீகரமற்ற   ஆணிடம் 
   ஒரு  அழகான  பெண்ணும் ,
   அழகற்ற  பெண்ணிடம் 
   ஒரு   வசீகரமான  ஆணும் ,
   எளிதில்  காதல்   வயப்படுவதில்லை
   காதல்  உணர்வுகளை  கையாள்வதில்கூட 
   வசீகரம்   பெரும்  பங்கு  வகிக்கிறது
   அழகு  வசீகரத்தின்     வாற்ப்பிடம் !
   வசீகரம்    காதலின்    பிறப்பிடம் !
   அழகில்   சிறந்த , மனதைக் கவரும்  பெணிடம்
   காதலுடன்   நெருங்க  தகுதி   இல்லை    என்று
   தாழ்வு    மனப்பான்மையுடன்    ஒருவன்
   எப்போது   தனக்குள்  தீர்மானிக்கிறானோ  அங்கே
   நட்பு   எனும்   நாகரிக   முத்திரை     குத்துகிறான் .
   இவ்விடத்தில்   பெண்கள்   சற்று   மாறுபடுகிறார்கள்
   வசீகரத்தின்   பொருளும்  இவர்களிடம்  வேறுபடுகிறது
   தன்னை  பாதிக்கக்கூடிய  சிறப்புகளுக்கு  உரிய  ஒரு
   ஆணின்  வசீகரம்  பெண்ணினத்தை மிகவும் ஈர்க்கிறது
   வசீகரமற்ற  சிறப்புகள்   சிலநேரம்  
   வாஞ்சையை    உருவாக்குகிறது 
   ஏழ்மை , மற்றும்  இயலாமை   நிச்சயம்
   பரிதாபத்தையே    உருவாக்குகிறது
   " வசீகரம் " காதலை   எதிர்  நோக்கி !
   " வாஞ்சை "  நடப்பை எதிர்  நோக்கி !
   " எழ்மை, இயலாமை, பரிவு "  இவை  மூன்றும்   
   கருணையை   எதிர்  நோக்கியே ,  பெண்ணின்
   மனதில்  முதல்  தடம்   பதிக்கிறது !
   வாஞ்சையில்    மலரும்   நட்பு ,
   ஏழ்மை மற்றும்  இயலாமையில்  பிறக்கும்  பரிவு ,
   பரிவுகளால்    செதுக்கப்படும்    கருணை ,
   ஸ்பரிசத்தால்   ஏற்படும்  தொடு   உணர்வு ,
   இவைகளால்  சந்தர்ப்பத்தின்   உதவியுடன் ,
   காதல்  உருவகப் படுகிறது
   அப்படி  உருவாகும்  காதல்
   வயது   வரம்பை   கடந்தும் கூட
   வாய்க்கும்படியாகும்
   மாறாக   வசீகரம்    என்பது
   காந்த   சக்தியைப் போன்றது
   அதன்   ஈர்ப்புவிசை   கண்களாகும்
   இதயத்தை   கொல்லையிடுவதா அல்லது
   கொள்முதல் செய்வதா   என்பதை
   தீர்மானிப்பது    கண்களாகும்  அந்த
   கண்களைக்   கவர்வது    வசீகரமாகும்
   எனவே    இப்பதிவுகளின்  
   தன்மையை   பொருத்தே
   " காதல் "    பிறப் பதனால் ,
   காதலே     வசீகரமானது !!!
==============================================
   { இந்த இடுகை என் நண்பனின் வாழ்வில்
   வளம்   வந்து  வடுப்பெற்றதன்   நினைவாக }
==============================================
            இவன் >>   > பிறைத்தமிழன்

செவ்வாய், 29 மார்ச், 2011

" மரணம் மட்டுமே மாறாத ஓய்வு "


மனித     உடலுக்கு    ஓய்வில்லை
மரணம் அவனை நெருங்கும்வரை

பார்வைப்படலம்   மறைந்திடலாம்
செவிப்  புலனும்     அடை படலாம்

உறக்கமும்    ஒரு   வேலைதான் 

மனித   உடலுக்கு   ஓய்வில்லை
மரணம் அவனை நெருங்கும்வரை

செயற்கரிய       சிறப்புகளை
செதுக்குகின்ற    சிந்தனையை

செறிகின்ற      மூளை யதும்
சுருங்கி விரியும்   சுவாசப்பை ,

சுத்தகரிப்பு    இரத்த   கேந்திரம் ,
மொத்த உறுப்புக்கும்  மூல காரணம் 

துளி   மணித்துளி     தும்மலில்   தவிர ,
தூங்கா  உழைப்பில்  தொடர்ந்து  இயங்கும்

உன்னத   உறுப்பாம்   இதயத்தின்   ஓசை ,
ஒலித்துக்  கொண்டிருக்கும்  காலம்  வரை ,

உறக்கமும் ஒரு வேலைதான்

மனித  உடலுக்கு       ஓய்வில்லை !
மரணம் அவனை  நெருங்கும் வரை

ஊ ரற்று ,  உற வற்று    ஊ ணற்று ,
உணர் வற்று     உயி ரற்றுப்   போய் !

உடல் தரையில்  ஒடிந்து விழும்வரை ,
உறக்கமும்    ஒரு    வேலைதான் !

இகத்தில் சிறந்த  இறைவனுக் குகந்த  
நேசத்திற்   குரிய     தோற்றத்தி லான ,

மனித     உடலுக்கு    ஓய்வில்லை ,
மரணம் அவனை நெருங்கும்வரை !!!
===================================
  இவன் >>    >>  பிறைத்தமிழன்