ஏழைக் குமர்களுக்கு
எதிராக விடுக்கப்பட்ட
போர்ப் பிரகடனம் !
இந்த யுத்தத்தில்
இன்னும் ஏராளமான ,
முகம் தெரியா ,
முதிர் கன்னிகள் !
மூவாறு வருடங்கள் ,
முத்தாய் வளர்த்த மகளை ,
முந்தானால் வந்தவன்
கொத்தாய் அள்ளி செல்ல ,
பத்தாய் சில லட்சங்களும்,
பகட்டாய் பல ஆபரணங்களும்...!.
என்ன கொடுமை..
ஏன் இந்த மடமை ?
பணத்தையும் ,
பகட்டையும் நேசிப்பவன்,
செல்வத்தையும் செருக்கயுமே ,
செல்ல மகளுக்கு
செல்ல மகளுக்கு
சீதனமாய் தருவான் !
இளைஞனே விற்க்கப்படுகிறாய்..
இதற்க்கு நீ வெட்கப்பட வில்லையா ?
இறுதியில் இட்டு செல்வது ஒன்றுமில்லை..
நீ விட்டு செல்பவை .. யாவும் உனதில்லை !
நீ விட்டு செல்பவை .. யாவும் உனதில்லை !
ஆழங்களை அழகாய் படைத்தவன்,
பெண்ணினத்தின் பெருமையினை ,
பெண்ணினத்தின் பெருமையினை ,
சொல்ல வில்லையா ?
இறைவன் படைத்த உயிரனம்,
இல்லறம் காணும்போது ..
இல்லறம் காணும்போது ..
பிறவியின் பயனை அடைகிறது !
ஒரு மனிதன் முழுமை பெறுவதற்கு ,
பெண் தேவை !
அந்த பெண்ணை பெருமைப்படுத்த ,
பொருள் தந்து மணம் கொள் !
அவள் உன் வலக்கரங்களுக்கு சொந்தமாவாள் !
இல்லையேல்..
இயற்கையின் இலக்கணங்களுக்கு நீ எதிராவாய் !
இயற்கையின் இலக்கணங்களுக்கு நீ எதிராவாய் !
கருணை மிக்க சமூகம்
களங்க மற்ற சமுதாயத்தை உருவாக்கும் !
எனவே மானிடனே.. !!
எளிமையை நிறுத்தி ,வறுமை துரத்தி ...!!
இளமை வாழ்வை ,
இனிதே ஏற்ப்பாய் ....!!!
===============================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக