மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 18 ஏப்ரல், 2011

ஆடியடங்கும் நுரைகளைப் போலே!

                               மகரந்தம் சிதறாத " மல்லிகைப்பூ

புலரும்   பொழுதின்   பூபாளமும் ,
தெளிர்ந்த   நீரின்  தெள்லோட்டமும் ,
குளிர்ந்த  காற்றின்  குதியாட்டமும் ,

விரிகின்றது  காட்சியாய்  கண்ணெதிரே !
   இசைக்கின்றது , மெல்லிசையாய்  காதருகே !!

என்னவளோ  இதற்க்கு  எதிர்மறை..!

சிந்தையை   செந் தனலாக்கி,
சிரிப்பதுவை   செவ் விதழில்  காட்டி!

பொய்மை  மிகைத்த  பூமியின்  மேலே ,
கூர்  தீட்டிய   கொடு வாள்   கொண்டு ,
நேர்   நின்று    நீதி   வழுவா !

அவள்  வாழ்த்தும்  மொழி  வசை  போல்  இருக்கும்!
என்னை  வீழ்த்தும் விழியோ  வேல் போலிருக்கும் !

பூசும்  மஞ்சள்  அந்தி  வெயிலாய் ,
சூடும்  குங்குமச்   சுடு  நெருப்பாய் ,
வாடும்   என்னை   வன்மை  தகிப் பாள் !

பள்ளியறை  காணாத  மேல்லிறகு  மேனியவள் ,
மகரந்தம்  சிதறாத " மல்லிகைப்பூ"  கன்னியவள் !

புதிதாய்  புலரும்   பொழுதிலிருந்தே ,
புறப்பட்டு   வருகிற   பொற்க்கதிர்  போலே !

விழியில்  விழுந்து  இதயம்  நுழைந்து ,
என்னுள்  கலந்து  இகத்தை  வெல்ல !

அமைதி  காக்கும்  ஆழ்கடல்  மேலே ,
 ஆர்ப்பரிக்கும்  அலைகளி னாலே ,  
 ஆடியடங்கும்   நுரைகளைப் போலே!

என்றாவது ஒருநாள் சாந்தமுருவாள்
                               நிச்சயம் அதிலே நான் சாந்தி பெறுவேன் !..                                ============================================
இவன் >>   >  பிறைத்தமிழன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக