மரித்திட்ட பூமியை
மறுபடியும் செப்பனிட்டு
உயிர்ப்பிக்கும் உழவனுக்கு
ஓராயிரம் வந்தனங்கள்
இறைவன் படைப்பில்
எத்தனையோ அற்ப்புதங்கள்
ஏரோட்டி இல்லையென்றால்
ஏது இங்கே உணவகங்கள்
உழவை தொழிலாக்கி,
உழைப்பை களமிறக்கி,
விதையை பயிராக்கி ,
உணவை உருவாக்கும்
உன்னத தமிழனின்
உழவுக்கும், தொழிலுக்கும்,
வந்தனை செய்வோம்!
உழவற்ற தேசத்தை
நிந்தனை செய்வோம்!!,
சிகரம் தொட்ட செந்தமிழ்
சீர் பெற வேண்டி ,
தமிழாய்ந்த தமிழனே
தரணியாள வேண்டும்!
என தத்துவச் சூளுரைத்து,
எத்திக்கும் வாழும் தமிழருக்கு
புத்தம்புது பொங்கலும், செங்கரும்பாய்
தித்திக்கும் உழவர் திருநாள் வாழ்த்து !
கூறும் .........................................!
=====================================
இவன் >> > பிறைத்தமிழன்