மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 21 டிசம்பர், 2010

முதிர்கன்னிகள்!


செல்வந்தன் இல்லத்திருமணம்..
ஏளைகுமர்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட போர்ப்பிரகடனம்!
இந்த யுத்தத்தில் இன்னும்
ஏராளமான... முதிர்கன்னிகள்!
மூவாறு வருடங்கள்
முத்தாய் வளர்த்த மகளை,
முந்தானால்வந்தவன்
கொத்தாய் அள்ளி செல்ல!
பத்தாய் சில லட்சங்களும்,
பகட்டாய் பல  ஆபரணங்களும்!!...
என்ன கொடுமை..ஏன் இந்த மடமை?
பணத்தையும், பகட்டையும் நேசிப்பவன், செல்வத்தையும் செருக்கயுமே
செல்ல மகளுக்கு  சீதனமாய் தருவான்.
இளைஞனே விற்க்கப்படுகிறாய்..
இதற்க்கு நீ வெட்கப்படவில்லையா?
இறுதியில் உன்னோடு
இட்டு செல்வது ஒன்றுமில்லை..
நீ விட்டு செல்பவை ..யாவும் உனதில்லை..
ஆழங்களை அழகாய் படைத்தவன்,
பெண்ணினத்தின் பெருமையினை சொல்ல  வில்லையா ?
இறைவன் படைத்த உயிரினம்,
இல்லறம் காணும்போது .. 
பிறவியின் பயனை அடைகிறது!
ஒரு மனிதன் முழுமை பெறுவதற்கு பெண் தேவை!
அந்த பெண்ணை பெருமைப்படுத்த , பொருள் தந்து மணம் கொள்!
அவள் உன் வலக்கரங்களுக்கு சொந்தமாவாள்! இல்லையேல்..
இயற்கையின் இலக்கணங்களுக்கு நீ எதிராவாய்!
எனவே மானிடனே..
எளிமையை நிறுத்தி ..
வறுமையை துரத்தி..
இளமையின் வாழ்வை இனிதே ஏற்ப்பாயாக.
==================================
        இவன் : பிறைத்தமிழன்....

1 கருத்து: