மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

கண்ணீர் வடு


சொல்லாமல் தாக்கிய சுனாமி பேரலையே..நீ
கொல்லாமல் விட்டு சென்றது  கொடுமை மிகு நினைவுகளே!
கோடிக்கரம்..தொட்டு துடைத்திட்ட போதிலும்,
விழி வடித்த கண்ணீர் வடு பெற்றுப்போனதே!
கோட்டை கொத்தளங்கள் ..கொட்டி சாய்ந்தாலும்,
ஓட்டை உடைசல்கள் ..உயிர் வாழ போதுமே!
இனி ஒரு இருபத்தாறு இல்லாத டிசம்பராய்,
தனி ஒரு தினசரி தயார் செய் மானிடனே!
உயிரற்ற மனிதக்குவியலை ஒற்றைச்ச்சமாதியிட்ட,
ஓங்கார பேரலையே!
உனக்கு கட்டளையிட்டவனே..
எங்கள் கண்ணீரை துடைக்க வேண்டும்!
அடைக்கலம் புக வழியில்லை!
ஆலயங்கள் போத வில்லை!
ஆகாயம்  பார்த்தும் பயனில்லை!
ஆறா துயரின்னும் தீரவில்லை!
இனிய வருடம் தொடங்க வேண்டும்!
இன்பம் இதயத்தை வருட வேண்டும்!
இறைவனே ...உன் துணை வேண்டும்!
                                                                     இவன்  பிறைத்தமிழன்


                         

1 கருத்து: