மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 10 ஜனவரி, 2011

இன்பக்கூடல்


என்னவள் இனியவள் எனும்போது,
இனி உனக்கினை எவள் கண்ணே
நீரில் பூத்த   நீல மலரன்றோ  ;  நீ 
கோடையில் மணம் தரும்
கொடி   முல்லையே ;      நீ
அளவுடன் வார்த்தெடுத்த
அற்ப்புதப்     பெட்டகம்;   நீ
ஆபரணம் பூட்டாத
ஆரணங்கு     உன்  மேனி;
ஆயுதம்      தாக்கிய
அத்திப்பழ  அதரமுனது ;
அள்ளிப்  பருகிடின்
அத்தனையும்  மதுரமெனக்கு;
மூடிச்  சிரித்தாலும்
முத்துக்கள்   உதிரும் ..........
கோடி  இன்பங்கள்
கொட்டி  நிறைத்திட்ட; உன் 
வருகை  நிகழாதோ .......?   என்
வறுமை   அகலாதோ.......?
ஊடல்  நீங்கி    இன்பக்
கூடலும்  துவங்காதோ......?
தேடல் முடிந்து   தெளிர்ந்து
வாழ்ந்திடவே   ........!
நான்  கண்   மூடி ,  எனை
மண்மூடிப்  போனாலும்,
மாலாதிருப்பேன்.......!
உனை    ஒரு போதும் ,  
மீலாதிருப்பேன்........!
உன்னைக் கொண்டு  உறவைக்கொடு!!!
உணர்வைக் கொண்டு   உயிரைத்தொடு!!!
மாலாதிருப்பேன் .......!
உனை    ஒரு போதும்,
மீலாதிருப்பேன்..............!!!
    
                                         இவன் ;   பிறைத்தமிழன்

2 கருத்துகள்:

  1. என்னஇருந்து ஏது பயன்
    எனக்கில்லை வயது


    இவன்,நிலாதமிழன்

    பதிலளிநீக்கு
  2. உங்கள் கருத்தின் ஏக்கம், கருத்தில் கொள்ளத்தக்கது

    பதிலளிநீக்கு