என்னவள் இனியவள் எனும்போது,
இனி உனக்கினை எவள் கண்ணே
நீரில் பூத்த நீல மலரன்றோ ; நீ
கோடையில் மணம் தரும்
கொடி முல்லையே ; நீ
அளவுடன் வார்த்தெடுத்த
அற்ப்புதப் பெட்டகம்; நீ
ஆபரணம் பூட்டாத
ஆரணங்கு உன் மேனி;
ஆயுதம் தாக்கிய
அத்திப்பழ அதரமுனது ;
அள்ளிப் பருகிடின்
அத்தனையும் மதுரமெனக்கு;
மூடிச் சிரித்தாலும்
முத்துக்கள் உதிரும் ..........
கோடி இன்பங்கள்
கொட்டி நிறைத்திட்ட; உன்
வருகை நிகழாதோ .......? என்
வறுமை அகலாதோ.......?
ஊடல் நீங்கி இன்பக்
கூடலும் துவங்காதோ......?
தேடல் முடிந்து தெளிர்ந்து
வாழ்ந்திடவே ........!
நான் கண் மூடி , எனை
மண்மூடிப் போனாலும்,
மாலாதிருப்பேன்.......!
உனை ஒரு போதும் ,
மீலாதிருப்பேன்........!
உன்னைக் கொண்டு உறவைக்கொடு!!!
உணர்வைக் கொண்டு உயிரைத்தொடு!!!
மாலாதிருப்பேன் .......!
உனை ஒரு போதும்,
மீலாதிருப்பேன்..............!!!
இவன் ; பிறைத்தமிழன்
என்னஇருந்து ஏது பயன்
பதிலளிநீக்குஎனக்கில்லை வயது
இவன்,நிலாதமிழன்
உங்கள் கருத்தின் ஏக்கம், கருத்தில் கொள்ளத்தக்கது
பதிலளிநீக்கு