? மட்டுமா    இருக்கு  
ஆழிப் பேரலயே கொஞ்சம்
அடங்கு ! நீ  -
ஆர்ப்பரித்து    அடிக்கின்றாய்   இந்த 
போற்  குணம்தான்  எதற்கு ?
இத்தனை  பெரிய  இறைவனின் தண்டனை !     
இயற்கையை   சிதைத்ததன்    விளைவா ?
கற்பனை  உதித்து அற்ப்புதம்  விதைத்து ,
சில  நற்பலன்   அடைவது  தவறா ?
தென்றல்    வீசும்   நந்தவனத்தை
தேடிப்பாயும்  தெளிந்த  அருவியும்  நீர்தானே ?
மலைகளைகூட  மணல் மேடாக்கும்
அலைகளைப் பெற்ற கடலே நீ அரக்கனோ ?
மனித உடல்களை மலைகளாய் குவித்து ,
அதில் மரணஓலம் எதிரொலி கேட்டு ,
மதிப்புமிக்க  உயிர்களை  மலிவாய்  வாங்கும்  
மாயப்  பெருங்கடல்  மாபரும்     வணிகனோ ?
புரட்டிப்  போட்டு  பூமியை  மிதித்ததில்  ,
 கார்களும்  கப்பலும்  கட்டிட உச்சியில் !
குப்பை  கூலமாய்  குவிந்து  கிடக்கும் , 
கோரக் காட்சியின்  கொடுமைத்  தொடறாய் , 
அலக் களிப்பில்  அணுவும்  உலையும்,
அடக்க முடியா  அதன்  கதிரின்  வீச்சும் , 
ஜப்பான்  தேச  சவக்  கிடங்காய்
சென்டாய்  நகரம்  சிதைந்து  போய் , 
மனுவும் மக்களும் , மால்வது கொடுமை !
மனுவும் மக்களும் , மால்வது கொடுமை !
மரணம்  என்பது  இயற்கையாகும் !
மால்வது  என்பது  தண்டனையாகும் !!
வாழ்வது  வரை  ஆயுள்  அதனை 
வீணில்  நீயும்  செலவு  செய்து ,
நஷ்ட மேதும்  அடைந்து  விடாதே
மாண்புக்  குரிய   மனித  இனமே !!!
காலத்தின்   மீது   சத்திய மிட்டு 
இறைவன்  கூறும்  வசனம்  ஒன்று 
     இதோ 
=================================================
மனிதன் ( தன் ஆயுளை வீணில் செலவு செய்து )
நிச்சயமாக நஷ்டமடைந்துவிட்டான் :அத்~103 ~
          அல்அஸ்ர்~காலம் ( 13 ):அல் குர் ஆண் 
=================================================
     இவன் >>    >> பிறைத்தமிழன்  

