மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 2 மார்ச், 2011

கற்ப் பில்கூட கலப்படம்


விறகு வைத்து அடுப்பெரித்து
விளைவித்ததை வேகவைத்து
உண்டு உயிர் வாழ்ந்த
உன்னத காலம் இன்று
உருக்குலைந்து போனதுவே
ஊறு செய்யும் கலப்படத்தால்

முளைப்பயிர்  கருகும்படி
முலைப்பாலும் திரியும்படி
நாடி நரம்புகளில்
ஊன்   உயிர்  அணுக்களில் 
இலக்கு எல்லையின்றி
இரண்டற கலந்துவிட்ட
                 கலப்படங்கள்

கலப்படங்களை  கவுரவிக்கும்
விதையில்லா வித்துக்களும்
வேரில்லா விரிச்சங்களும்
விவசாயம் ஆகிப்போன
விஞ்ஞான யுகத்தினிலே

மரபுசாறா தொழிலுக்கே
மாபெரும் வெற்றியிங்கே
நீரற்று நிலம் நீர்த்துப்போக
கூழாங்கல் குருமணலும் 
கொள்ளையாய்   விற்ப்பனை

அறநூறு கோடி மனிதர்கள்
வாழுகின்ற பூமியிலே
கொஞ்சி மகிழ குழந்தை
இல்லையாம்
அறிவு ஜீவிகளின்
அற்புத கண்டுபிடிப்பு 

குழந்தை சுமக்கின்ற  வயிறும்
வாடகைக்கோ வசதிக்கேற்றபடி 
விற்பனைக்கோ  ஆகா 
கற்ப் பில்கூட கலப்படம்
=================================
" மாசற்ற நீரும் ,
  தூசற்ற காற்றும் "

" கலப்பற்ற உணவும் ,
  காணக்கிடைக்கின் "

" நோயற்ற வாழ்வை
   நுகர்வது திண்ணம் "
================================
இவன்  > > > பிறைத்தமிழன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக