மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

மண்ணோடு பெண் மகவை,

  *பெண் *
==========
உள்ளத்தால் வதைபட்டு 
உடலால் சிதைபட்டு

உருவாக்கும் சந்ததியை 
பெண்ணென்று கண்டுவிட்டால்

பேரிழப்பு  வந்ததென்று
பெருங் கவலை கொண்டவர்கள் 

சிசுக் கொலை செய்துவிடும் 
சேதிகளும்  கேட்டீரோ ? அன்று 

மண்ணோடு  பெண் மகவை,
மகிழ்வோடு புதைத்திட்ட !

மாபாவச் செயல்  தடுத்த ,
மாநபிகள் சொல்  விளங்கி 

நவீனம் கண்டவர்கள் ,
நாகரீகம் கொண்டவர்கள் 

நானிலம் போற்றுகின்ற ,
நல்லுணர்வு பெற்றனரா ?  இன்று 
___________________================_________________
ஆணுக்குப் பெண் நிகரில்லை !
ஆதலால் ,
பெண் ஒன்றும்    அடிமையில்லை !!

வடிவம்     மாறுதலால் ,
 வனப்புகல்  உடையவள்   " பெண் "

வலிமை குறை வதனால்,
 வாஞ்சைக்கு உரியவள் " பெண் "

மானுடம் செளிக்க வல்ல,
 மா தவ மங்கையவள் " பெண் "

வெறும் போகப் பொருளல்ல  " பெண் "
போற்றிப் *பொன்* படுத்து மனிதா =நின் !!!
==================================================================
இவன் >>>பிறைத்தமிழன்

5 கருத்துகள்:

  1. "உள்ளத்தால் வதைபட்டு
    உடலால் சிதைபட்டு
    உருவாக்கும் சந்ததியை
    பெண்ணென்று கண்டுவிட்டால்

    பேரிழப்பு வந்ததென்று
    பெருங் கவலை கொண்டவர்கள்
    சிசுக் கொலை செய்துவிடும்
    சேதிகளும் கேட்டீரோ ? அன்று

    மண்ணோடு பெண் மகவை,
    மகிழ்வோடு புதைத்திட்ட !
    மாபாவச் செயல் தடுத்த ,
    மாநபிகள் சொல் விளங்கி

    நவீனம் கண்டவர்கள் ,
    நாகரீகம் கொண்டவர்கள்
    நானிலம் போற்றுகின்ற ,
    நல்லுணர்வு பெற்றனரா ? இன்று "


    பெண்ணென்ற புத்தகத்தில்
    யாரும் இது வரை கண்டு கொள்ளாத பக்கங்கள்.

    ஓயாது..உண்மையை உரக்கசொல்லும்
    உண்மைத் தமிழனே..பிறைத்தமிழனே

    உன் சிந்தனைக் குழந்தைகள் சிரித்து மகிழட்டும்
    சீரும் சிறப்போடும் ..சீரிய நடை பயிலட்டும்

    பதிலளிநீக்கு
  2. பாராட்டிலும், தாலாட்டிடும்
    பண்பாளர், என்மீது மிகுந்த
    அன்பாளர் > > > காதர்
    உங்கள் கவின்மிகு கருத்துக்கு நன்றி ,
    உங்கள் எழில்மிகு எழுத்துக்கு நன்றி.....
    இவன் > > பிறைத்தமிழன்

    பதிலளிநீக்கு
  3. ஆணுக்குப் பெண் நிகரில்லை !
    ஆதலால் ,
    பெண் ஒன்றும்    அடிமையில்லை
    ஓயாது..உண்மையை உரக்கசொல்லும்
    உண்மைத் தமிழனே..பிறைத்தமிழன்
    நன்றியுடன் சுட்டித்தமிழன்.>ரவி

    பதிலளிநீக்கு
  4. மூன்றாவதாக கருத்துரை வழங்கிய
    முகம்மது ரபீக் அவர்களுக்கு என்
    மழுமையான நன்றியை தெரிவிக்கின்றேன்
    பிரியமுடன் >>> பிறைத்தமிழன்

    பதிலளிநீக்கு