மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 16 மார்ச், 2011

பூகம்பப் பேரதிர்வே



பூகம்பப்  பேரதிர்வே  போதுமே  நிறுத்து !   நீ -

புரட்டிய  பூமியிலே   வெறும் புல்  பூண்டு 
? மட்டுமா    இருக்கு 

ஆழிப் பேரலயே  கொஞ்சம்   
அடங்கு ! நீ  -

ஆர்ப்பரித்து    அடிக்கின்றாய்   இந்த 
போற்  குணம்தான்  எதற்கு ?
 
இத்தனை  பெரிய  இறைவனின் தண்டனை !    
இயற்கையை   சிதைத்ததன்    விளைவா ?

கற்பனை  உதித்து அற்ப்புதம்  விதைத்து ,
சில  நற்பலன்   அடைவது  தவறா ?

தென்றல்    வீசும்   நந்தவனத்தை
தேடிப்பாயும்  தெளிந்த  அருவியும்  நீர்தானே ?

மலைகளைகூட  மணல் மேடாக்கும்
அலைகளைப் பெற்ற கடலே நீ அரக்கனோ ?

மனித உடல்களை மலைகளாய் குவித்து ,
அதில் மரணஓலம் எதிரொலி கேட்டு ,

மதிப்புமிக்க  உயிர்களை  மலிவாய்  வாங்கும் 
மாயப்  பெருங்கடல்  மாபரும்     வணிகனோ ?

புரட்டிப்  போட்டு  பூமியை  மிதித்ததில்  ,
 கார்களும்  கப்பலும்  கட்டிட உச்சியில் !

குப்பை  கூலமாய்  குவிந்து  கிடக்கும் ,
கோரக் காட்சியின்  கொடுமைத்  தொடறாய் ,


அலக் களிப்பில்  அணுவும்  உலையும்,
அடக்க முடியா  அதன்  கதிரின்  வீச்சும் ,

ஜப்பான்  தேச  சவக்  கிடங்காய்
சென்டாய்  நகரம்  சிதைந்து  போய் ,

மனுவும்  மக்களும் ,  மால்வது  கொடுமை !

மரணம்  என்பது  இயற்கையாகும் !
மால்வது  என்பது  தண்டனையாகும் !!

வாழ்வது  வரை  ஆயுள்  அதனை
வீணில்  நீயும்  செலவு  செய்து ,

நஷ்ட மேதும்  அடைந்து  விடாதே
மாண்புக்  குரிய   மனித  இனமே !!!

காலத்தின்   மீது   சத்திய மிட்டு 
இறைவன்  கூறும்  வசனம்  ஒன்று
     இதோ
=================================================
மனிதன் ( தன் ஆயுளை வீணில் செலவு செய்து )
நிச்சயமாக நஷ்டமடைந்துவிட்டான் :அத்~103 ~
          அல்அஸ்ர்~காலம் ( 13 ):அல் குர் ஆண்
=================================================
     இவன் >>    >> பிறைத்தமிழன் 

1 கருத்து: