விடிந்து விட்ட போதும் ,
விழிக்க இமை மறுக்கும் !
கடந்து சென்ற வயதும் ,
கனவில் வந்து இனிக்கும் !
============================== ===
இரவின் மடியில் நானும் ,
இதமாய் , எனது பிடியில் நீயும் !
இன்பத்தின் ,எல்லைப் படியில் நாமும் !
விடியும் வரையில் தானும் ,
விபரீ தங்கள் ஏதும் ,
விளையா திருத்தல் வேண்டும் !
நிலவின் ஒளியில் நீயும் ,
நிலை குலைந்து நானும் !
நின்னால் ,அலைக் கழிந்த நேரம் !
விரல்கல் தீண்டுத ளாலும் ,
விரக தாபம் ஏறும் !
வியர்வை , ஆறாய் ஓடும் !
உச்சக் கட்ட வெப்பம் ,
உதடு வெடிக்கும் காலம் ,
உன் இதழ் பட்டுக் குளிரும் !
உறை பனியும் அங்கு தோற்க்கும் ,
உடல் கூடிக் கள மிறங்கும் !
உயிர்ப் பதிவு அங்கே நிகழும் !!!
விடிந்து விட்ட போதும் ,
விழிக்க இமை மறுக்கும் !
காரனத்தைச் சொன்னால் ,
" கற்பனை " யை மிஞ்சும் ,
கனவு என்று புரியும் ........!
========================================
இவன் >> > பிறைத்தமிழன்