தாய் மட்டுமே தன்னிகரற்ற அழகு
தன் காதலியை காணும்வரை
தந்தை மட்டுமே தலைசிறந்த வீரன்
தான் வாலிபம் அடையும்வரை
ஆசிரியர் மட்டுமே அறிவின் அற்புதம்
தன் புத்தகச் சுமை குறையும்வரை
பொருள்களின் விலை பொருட்டேயில்லை
தன் உழைப்பில் ஊதியம் ஈட்டும்வரை
மனைவியின் தழுவலே மாபெரும் இன்பம்
மழலை அள்ளி மார்போடு அணைக்கும்வரை
மதுவின் மயக்கம் மமதை வளர்க்கும்
மானம் இழந்து மற்றவர் வெறுக்கும் வரை
புகைப்ப வனுக்கு புகை அடிமை
பொழுது போக்க புகைக்கும் வரை
பொழுத னைக்கும் புகைப்பவன்
உயிர் பிழைத்திருப்பது சாத்தியமே
புற்று நோய் வந்து அவனை
புரட்டிக்கொண்டு போகும் வரை
கலாச்சாரம் காயப்பட்டு
கண்ணீரோடு நிற்கும்
விபச்சாரம் வெற்றி
உலா வரும் வரை
வரம்பு மீறிய பொய்யும் ,
வயதுக்கு மீறிய செய்கையும் ,
வரவுக்கு மீறிய செலவும் ,
வஞ்சம் உள்ள நெஞ்சமும் ,
வழமை யாய் கொண்டவன்
வாழ்வு தனை மங்கச் செயும் ,
நாள் அது தொலைவில் இல்லை !
================================
இவன் >> >> பிறைத்தமிழன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக