விறகு வைத்து அடுப்பெரித்து
விளைவித்ததை வேகவைத்து
உண்டு உயிர் வாழ்ந்த
உன்னத காலம் இன்று
உருக்குலைந்து போனதுவே
ஊறு செய்யும் கலப்படத்தால்
முளைப்பயிர் கருகும்படி
முலைப்பாலும் திரியும்படி
நாடி நரம்புகளில்
ஊன் உயிர் அணுக்களில்
இலக்கு எல்லையின்றி
இரண்டற கலந்துவிட்ட
கலப்படங்கள்
கலப்படங்களை கவுரவிக்கும்
விதையில்லா வித்துக்களும்
வேரில்லா விரிச்சங்களும்
விவசாயம் ஆகிப்போன
விஞ்ஞான யுகத்தினிலே
மரபுசாறா தொழிலுக்கே
மாபெரும் வெற்றியிங்கே
நீரற்று நிலம் நீர்த்துப்போக
கூழாங்கல் குருமணலும்
கொள்ளையாய் விற்ப்பனை
அறநூறு கோடி மனிதர்கள்
வாழுகின்ற பூமியிலே
கொஞ்சி மகிழ குழந்தை
இல்லையாம்
அறிவு ஜீவிகளின்
அற்புத கண்டுபிடிப்பு
குழந்தை சுமக்கின்ற வயிறும்
வாடகைக்கோ வசதிக்கேற்றபடி
விற்பனைக்கோ ஆகா
கற்ப் பில்கூட கலப்படம்
============================== ===
" மாசற்ற நீரும் ,
தூசற்ற காற்றும் "
" கலப்பற்ற உணவும் ,
காணக்கிடைக்கின் "
" நோயற்ற வாழ்வை
நுகர்வது திண்ணம் "
============================== ==
இவன் > > > பிறைத்தமிழன்