மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 2 பிப்ரவரி, 2011

எருகும் சாம்பலும் ஏளைக்குடிசையில்




    கடலில்  பிறந்து  காற்றால்  தவழ்ந்து
   கரையில்  உரசும்  அலைகளைப் போல
   கவிதைகள்  நூறு  வடித்திடல்  வேண்டும் 
   அகல விரிந்து  பகலவன்  மறைக்கும்
   ஆல   நிழலில் அலுப்புத் தீர
   அயர்ந்து உறங்கிடல்  வேண்டும்
   மங்கள  நிலவில்  மங்கிய  ஒளியில்
   மங்கையின்  மடியில்  மலரும்  நினைவில்
   மழலை  வடிவில்  தவழ்திடல்  வேண்டும் 
   இரவின்  முடிவில்  எழுந்து  அமர்ந்தால்
   என்னைச்சுற்றி  பனித்துளி  படர்ந்த
   பச்சைப் புல்வெளி பளிச்சிடல் வேண்டும்
   தெளிர்ந்த  நீரில்  தெரியும்  தரையில்
   துள்ளிக்குதிக்கும் வெள்ளி மீனை கையில் அள்ளி
   மெல்லத்தமிழ்  சொல்லித்  தந்திடல்  வேண்டும்
   புழுதியற்ற  பொட்டக்காட்டில்  பூத்துக்குலுங்கும்
   புங்கை  மரத்தருகே  நெருஞ்சிச் செடியில்
   நித்தம்  ஒரு  குறிஞ்சிப்பூ  பூத்திடல்  வேண்டும்
   எள்ளும்  புண்ணாக்கும்  எருகும்  சாம்பலும்
   ஏழை  குடிசையிலே  பொன்னும்  மணியாக
   பொருள்மாறி  பொங்கிப்  பெருகிடல்  வேண்டும்
   இது நடக்குமா .>ஆயிரம்  >???????????????????????விகள்
            சிந்தனைக்கு  சிறகுகட்டி       
           செந்தமிழ்  மெருகூட்டி        
          வாழ்க்கையை   வண்ணம்தீட்டி
          வளரும்    தலைமுறை                 
          வாழவேண்டும்  நேர் கோட்டில் ============================இவன் >>>  பிறைத்தமிழன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக