கடலில் பிறந்து காற்றால் தவழ்ந்துகரையில் உரசும் அலைகளைப் போலகவிதைகள் நூறு வடித்திடல் வேண்டும்
அகல விரிந்து பகலவன் மறைக்கும்ஆல நிழலில் அலுப்புத் தீரஅயர்ந்து உறங்கிடல் வேண்டும்
மங்கள நிலவில் மங்கிய ஒளியில்மங்கையின் மடியில் மலரும் நினைவில்மழலை வடிவில் தவழ்திடல் வேண்டும்
இரவின் முடிவில் எழுந்து அமர்ந்தால்என்னைச்சுற்றி பனித்துளி படர்ந்தபச்சைப் புல்வெளி பளிச்சிடல் வேண்டும்
தெளிர்ந்த நீரில் தெரியும் தரையில்துள்ளிக்குதிக்கும் வெள்ளி மீனை கையில் அள்ளிமெல்லத்தமிழ் சொல்லித் தந்திடல் வேண்டும்
புழுதியற்ற பொட்டக்காட்டில் பூத்துக்குலுங்கும்புங்கை மரத்தருகே நெருஞ்சிச் செடியில்நித்தம் ஒரு குறிஞ்சிப்பூ பூத்திடல் வேண்டும்
எள்ளும் புண்ணாக்கும் எருகும் சாம்பலும்ஏழை குடிசையிலே பொன்னும் மணியாகபொருள்மாறி பொங்கிப் பெருகிடல் வேண்டும்
இது நடக்குமா .>ஆயிரம் >???????????????????????விகள்
சிந்தனைக்கு சிறகுகட்டி
செந்தமிழ் மெருகூட்டி
வாழ்க்கையை வண்ணம்தீட்டி
வளரும் தலைமுறை
வாழவேண்டும் நேர் கோட்டில் ============================இவன் >>> பிறைத்தமிழன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக