ஒரு நாள் காலையில், என்றோ எழுதிய
கவிதை ஒன்றை கையில் எடுத்தேன்
இதயம் வருடும் வரிகள்.. இமைக்க மறந்தேன்
காலம் மெல்ல என்னை கடந்து சென்றது
ஒரு வரி என்னை மின்சாரம்போல் தாக்கியது
மீண்டும் ,மீண்டும் படிக்க முயன்றேன்
மனிதகுல மீட்சிக்கான விடை அந்த
ஒற்றை வரியில் ஒளிந்து கிடந்தது
அந்தி மாலையில் அடிவானத்தில்
அமிழ்ந்து மறைந்த பகல், காலம் கரைவதை
கண்முன்னே உணர்த்திக்கொண்டிருந்தது
இருந்தும் எழ மனமில்லை ஏன் ?
பசுமரத்தாணிபோல் பதிந்துவிட்ட அந்த
ஒற்றை வரியை மீண்டும் உச்சரித்தேன்
"""ஆசையோடு அன்புசெய் """
"""எதுவும் உனது * இறைவன் * உள்பட"""
நெஞ்சுக்குழிக்குள் நேற்று எடுத்த
மலைத்தேன் மகரந்தம் மாறாது
ஊற்றப்பட்டதற்க்கு ஒப்பான வரி
சுட்டரிக்கும் சூரியன் போல் சுடர் விடும்
கண்களாய் என்னருகே மின்னியது
கருவறை தந்து , காத்து வளர்த்த அன்னை
நான் கண் திறக்கும் முன்பிருந்தே
கணக்கற்ற அன்பைப்பொழிவதுபோல்
உணர்வுகள் ஒருனிலைப்பட்டது
இதயம் இலவம் பஞ்சுபோல் இலேசாகிப்போனது
அன்பு என்ற காதல் வயப்பட்டேன்
நிரந்தர பகலும், நீங்காத வெளிச்சமும்,
அதிலிருந்து பிரிந்து சேரும் இரவும்,
பிணியட்ற ஓய்வும் , காலங்கள் உள்ளிட்ட
அனைத்தும் என்வசப்பட்டது!!
"::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::"
"ஆசை துறந்தால் அகிலமுனக்கு "
இதை சொன்னவன் விட்ட வரி
பிறைத்தமிழன் பிழை இன்றி தொட்ட வரி
""ஆசை துறந்தவனுக்கு அகிலமெதற்கு ""
ஆசையாய் அன்பு செய் இறைவன் உள்பட
எல்லாம் உனது!!!!!!!!!
இவன் > :பிறைத்தமிழன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக