மொத்தப் பக்கக்காட்சிகள்
திங்கள், 17 ஜனவரி, 2011
எக்காளத்தை எதிர்நோக்கி
இறைவனின் படைப்பில்
அற்ப்பமும் உண்டு அற்ப்புதமும் உண்டு
அற்ப்புதத்தின் அதீத அத்தாட்சி மனிதப்பிறவி
அவனின் மூலப்பொருள் "மண் "
நீர் நிறைந்த ஓசை தரும்
அளர் மண்ணினால் படைக்கப்பட்டவன்
அவனில் குளிர்ச்சியையும் ,ஏரிச்சளையும் ,
உணருகின்ற சருமத்தால் போர்த்தப்பட்டு
அதில் -
வெம்மையும் ,கருமையும்
செம்மையாய் பொதித்து தன்னை பகுத்து உணர
வண்ணம் பிரித்து இயக்கப்படுகிறான் 'மனிதன்
மனிதன் பலஹீனமானவன்!எனினும்
பலம்மிக்க
எண்ணிலடங்கா ஆட்ற்றலை கொண்டு
ஆக்கம் பல கண்ட -அவனின ஆட்ற்றல்
அழிவை நோக்கி பயணப்படுவது அவனுக்கே தெரியும்
நேரப்போகும் அழிவை
மறைக்கலாமேயன்றி மாற்ற முடியாது
வியத்தகு விஞ்ஞானங்களை
விதைத்துக்கொண்டிருக்கும் மனிதனே
நிச்சயம் : ஒருநாள்
"எக்காளம்" எனும் { சூர் } ஊதப்படும்
அப்போது உன் சிந்தையை செயலிழக்கச் செயப்படும்
குறிப்பிடப்பட்ட அந்த நாள் வரும்போது
கற்களால் ஆன "மலைகளும்"
கொட்டிவிடப்பட்ட பஞ்சுகளைப்போல் பறக்கும் !
கேவளம் ஓசைதரும்
அளர் மண்ணினால் படைக்கப்பட்ட மனிதனே
அந்நேரம் உன்நிலை என்னவா இருக்கும் ???
சிந்தித்துப்பார் இது
சத்திய வேதத்தில் உண்மையைக்கொண்டு
ஏக இறைவனால் எச்சரிக்கை செய்யப்பட்டது
சூரியக்குடும்பத்தில் அங்கம் வகிக்கும் "புவி" உள்ளிட்ட
அனைத்து கோள்களையும் படைத்து பரிபாலிக்கின்ற
ஆலங்களின் அதிபதியும்
அகிலத்தின் ரச்சகனுமாகிய எல்லாம் வல்ல
இறைவனுக்கு இணை வைப்பதிலிருந்து விலக்கிக்கொள்
அவனைமட்டுமே துதிக்க பழகிக்கொள் மனிதனே
அப்போது தான் நீ; "சீர்" பெறுவாய் உன் உலக வாழ்வு
போற்றுதலுக்குரிய " நேர் " பெரும் !!!........
இதை படித்தறிந்து பகிர்ந்துகொள்ளும்
இவன் > பிறைத்தமிழன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வியத்தகு விஞ்ஞானத்தை,
பதிலளிநீக்குஇன்றியமையா இயற்பியலை,
உண்மையான உயிரியலை,
ஆராய்ந்து உருவாக்கிய மனிதனுக்கு..
இறைவனால் தொடுக்கப்பட்ட நிரந்தர சவால் "மரணம்" மற்றும் "மறுமை".
சத்தியத்தை உணர்த்தும் திருமறையை ...நீங்கள் சத்தியமாக இங்கு உணர்த்தியிருக்கிறீர்கள்.
இக்கவிதையை "உணர்ந்த" போது சைரன் ஒலிக்கே அலறும் மனிதன்..சூர் ஒளிக்கு என்ன செய்ய போகிறான் என்ற பயம் என்னை தொற்றிக்கொண்டது ..
எக்காளத்தை எதிர்நோக்கி
இறை நன்றியுடன்
காதர்