மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 19 ஜனவரி, 2011

உறக்கம் திரையிட்டு ,உணர்வை கூர்தீட்டு

 
கேளிக்கையில்  கிறங்கி கிடக்கும்
          இளைஞனே எழுந்து   நில்
    போதையும்  ,புகைமயும்  மட்டுமா       
           பொல்லா    நோயெனும்  புற்று ?

   இசையும், சங்கீதமும் இன்பத்தை தரும்
         திரையில் காதல் தித்திக்கவே செய்யும்
   இது விழித்துக் கொண்டிருப்பர்களிடம்
                 விற்கப்படும் கனவு

   கனவு     காண்பதிலேயே ,
           காலத்தை   கழிக்காதே !
  திரையின்     பிம்பத்தில் ,
         தேசத்தை    தொலைக்காதே!

   பிறந்து குழந்தை அழுவதும்
          பிறகு  சிரிப்பதற்கும்  யார்   கற்று தந்தது
   பிறர்    பேசக்   கேட்பதுவும்
         பெருந்தலை   என   வாழ்த்துவதும்

    சுவர்   ஒட்டி    கொடி   பிடித்து ,
            சுழன்று      பணியாற்றி 
   சொர்க்கமா    சென்றிடுவாய்
           சொல்   இது    சாதனையா?

    மலையென    குவிந்திருக்கும் ,
         மடமைதனை      போக்கிடவே  !
     புயலென      புறப்பட்டு ,
            புதிய    சரித்திரம்   படைத்திட!

     பரந்த  கடலும்  விரிந்த   வானமும் கூட,
             தன்  எல்லையை  மீறுவதில்லை!
     எல்லை   கடந்த  வன்முறை ,
            என்னவென்று   தெரிந்து   கொள் !

    எதிர்த்து     வேரறுக்க ,
          இரும்புத்தடம்    பதித்து !
    நிமிர்ந்து    தலை   தூக்கு ,
          நிமிடங்கள்     வசப்படும் !

    அகிம்சை    காப்போமேன்று ,
          ஆற்றாமை     பேசாதே !
    உறக்கம்   திரையிட்டு,
          உணர்வை   கூர்தீட்டு !

    தீயிட்டு   கொளுத்தாது,
           தீவிரவாதம்    ஓயாது !
  இரும்புத்தடம்   பதித்து,
         இளைஞனே   எழுந்து    வா !!!
                     
                     இவன் :  >  பிறைத்தமிழன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக