மொத்தப் பக்கக்காட்சிகள்
புதன், 19 ஜனவரி, 2011
உறக்கம் திரையிட்டு ,உணர்வை கூர்தீட்டு
கேளிக்கையில் கிறங்கி கிடக்கும்
இளைஞனே எழுந்து நில்
போதையும் ,புகைமயும் மட்டுமா
பொல்லா நோயெனும் புற்று ?
இசையும், சங்கீதமும் இன்பத்தை தரும்
திரையில் காதல் தித்திக்கவே செய்யும்
இது விழித்துக் கொண்டிருப்பர்களிடம்
விற்கப்படும் கனவு
கனவு காண்பதிலேயே ,
காலத்தை கழிக்காதே !
திரையின் பிம்பத்தில் ,
தேசத்தை தொலைக்காதே!
பிறந்து குழந்தை அழுவதும்
பிறகு சிரிப்பதற்கும் யார் கற்று தந்தது
பிறர் பேசக் கேட்பதுவும்
பெருந்தலை என வாழ்த்துவதும்
சுவர் ஒட்டி கொடி பிடித்து ,
சுழன்று பணியாற்றி
சொர்க்கமா சென்றிடுவாய்
சொல் இது சாதனையா?
மலையென குவிந்திருக்கும் ,
மடமைதனை போக்கிடவே !
புயலென புறப்பட்டு ,
புதிய சரித்திரம் படைத்திட!
பரந்த கடலும் விரிந்த வானமும் கூட,
தன் எல்லையை மீறுவதில்லை!
எல்லை கடந்த வன்முறை ,
என்னவென்று தெரிந்து கொள் !
எதிர்த்து வேரறுக்க ,
இரும்புத்தடம் பதித்து !
நிமிர்ந்து தலை தூக்கு ,
நிமிடங்கள் வசப்படும் !
அகிம்சை காப்போமேன்று ,
ஆற்றாமை பேசாதே !
உறக்கம் திரையிட்டு,
உணர்வை கூர்தீட்டு !
தீயிட்டு கொளுத்தாது,
தீவிரவாதம் ஓயாது !
இரும்புத்தடம் பதித்து,
இளைஞனே எழுந்து வா !!!
இவன் : > பிறைத்தமிழன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக