பால் பாகுபாடுகளுக்கு
அப்பார்ப்பட்டவனும்
யாரையும் பெறாத ,
யாராலும் பெற்றெடுக்கப் படாத
தனித்தவனும் ,எத் தேவையும் அற்றவனும் ,
எல்லோருடைய தேவைகளையும்
பூர்த்தி செய்பவனும் ஆகிய
எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு
நாம் அறுத்து பலியிடும்
பிராணியின் இரத்தமோ ,
மாமிசமோ சென்றடைவதுமில்லை ,
அதன் மீது இறைவனுக்கு
எத் தேவையுமில்லை !
இதன்மூலம் மனிதனின் உள்ளம்
தியாகத்தை உணரவும் ,
தியாகங்கள் செய்யவும் ,
தியாக நாளை நினைவு கூறவுமே !
மீண்டும் ஒருமுறை இவ்வுலகம்
கட்டமைக்கப்பட்டு அதில்..மனித இனம்
தோற்றுவிக்கப்ப்படுமாயின் அப்போதும்..
நிலைத்து நிற்கும் தியாகம்
நிகழ்ந்த நாள் இன்று !இப்ராஹீம் நபியின்
கடினமிக்க இச்செயலை ..
கருணை மிக்க இறைவனால்..
ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் இன்று !
மனித இனம் உள்ள வரை
மாறாது நிலைத்திருக்கும் !
அளப்பரிய தியாகத்தை
நினைவு கூறும் மக்களுக்கு ,
என் இதயம் கனிந்த
தியாகத்திருநாள் வாழ்த்துக்கள் !!!
--------------------------------------------------------------------------------------
இவன் >> >> பிறைத்தமிழன்