தூங்கா இரவுகளில் ,
துடிக்கும் பறவையின்
ஒடிந்த சிறகுகளிள்
உதிரும் இறகுகளே..........
என் நினைவுகள் ...!
முகிலில் சிக்கிய !முழு நிலவைப்போல்மூடிய இரவில் , முகவரி தேடி ,
முகம் தொலைத்த பின் !
இயக்கத்தை வெறுக்கும்
இறுகிய இதயம் ,
இளகிப் பூரிக்காதோ ?
இடியும் , மின்னலாய்
இரைச்சலோடு இன்பம்
இன்றே துவங்காதோ ?
களங்கிய விழிகளில்
கசிகின்ற நீரால் ,
காயங்கள் ஆற்றி
கவலைகள் கரையாதோ ?
காலத்தின் கை விரல்
கண்ணீர் துடைக்காதோ ?
தன்னுடல் வறுத்தி
வெண் குருதி புகட்டி
கண்ணென காத்து
என்னுயிர் வளர்த்த
மன்னகத் தூடேமானிட சொர்க்கம்
அமைதியின் வடிவே
அன்னையின் மடியே
என்னைத் தாங்கிட ,இனிமேல் வாராதோ ?
இடர் மிகு துயர்கள்
என்னில் முழுதாய்என்றென்றும் தீராதோ ?
இவன் >>> >>> பிறைத்தமிழன்.........!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக