கண்ணீர் வடு
சொல்லாமல் தாக்கிய சுனாமி பேரலையே..நீ
கொல்லாமல் விட்டு சென்றது
கொடுமை மிகு நினைவுகளே !
கொடுமை மிகு நினைவுகளே !
கோடிக்கரம்..தொட்டு துடைத்திட்ட போதிலும்,
விழி வடித்த கண்ணீர் வடு பெற்றுப்போனதே !
கோட்டை கொத்தளங்கள் ..கொட்டி சாய்ந்தாலும்,
ஓட்டை உடைசல்கள் ..உயிர் வாழ போதுமே !
ஆண்டுதோறும் மீண்டும் ,மீண்டும்
நினைவுறா வரம் வேண்டி !
இனி ஒரு இருபத்தாறு இல்லாத டிசம்பராய்,
தனி ஒரு தினசரி தயார் செய் மானிடனே !
உயிரற்ற மனிதக்குவியலை
ஒற்றைச்ச்சமாதியிட்ட, ஓங்கார பேரலையே !
ஒற்றைச்ச்சமாதியிட்ட, ஓங்கார பேரலையே !
உனக்கு கட்டளையிட்டவனே..
எங்கள் கண்ணீரை துடைக்க வேண்டும் !
அடைக்கலம் புக வழியில்லை !
ஆலயங்கள் போத வில்லை !
ஆகாயம் பார்த்தும் பயனில்லை !
ஆறா துயரின்னும் தீரவில்லை !
இனிய வருடம் தொடங்க வேண்டும் !
இன்பம் இதயத்தை வருட வேண்டும் !
இறைவனே ...உன் துணை வேண்டும் !
என நனைந்த இமைகளுடன் ,
நான் >> பிறைத்தமிழன் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக