மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

டிசம்பர் " 26 " 2004



கண்ணீர் வடு

சொல்லாமல் தாக்கிய சுனாமி பேரலையே..நீ
கொல்லாமல் விட்டு சென்றது  
கொடுமை மிகு நினைவுகளே !
கோடிக்கரம்..தொட்டு துடைத்திட்ட போதிலும், 
விழி வடித்த கண்ணீர் வடு பெற்றுப்போனதே ! 
கோட்டை கொத்தளங்கள் ..கொட்டி சாய்ந்தாலும், 
ஓட்டை உடைசல்கள் ..உயிர் வாழ போதுமே !
ஆண்டுதோறும்  மீண்டும் ,மீண்டும் 
நினைவுறா  வரம் வேண்டி !
இனி ஒரு இருபத்தாறு இல்லாத டிசம்பராய்,
தனி ஒரு தினசரி தயார் செய் மானிடனே ! 
உயிரற்ற மனிதக்குவியலை 
ஒற்றைச்ச்சமாதியிட்ட, ஓங்கார பேரலையே ! 
உனக்கு கட்டளையிட்டவனே.. 
எங்கள் கண்ணீரை துடைக்க வேண்டும் !
அடைக்கலம் புக வழியில்லை ! 
ஆலயங்கள் போத வில்லை ! 
ஆகாயம்  பார்த்தும் பயனில்லை !
ஆறா துயரின்னும் தீரவில்லை !
இனிய வருடம் தொடங்க வேண்டும் !
இன்பம் இதயத்தை வருட வேண்டும் !
இறைவனே ...உன் துணை வேண்டும்  ! 
என நனைந்த  இமைகளுடன் ,
நான் >> பிறைத்தமிழன் ...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக